(எம்.எம்.சில்வெஸ்டர்)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கால்பந்தாட்ட உத்தியோகபூர்வ தேர்தலை, 2022 டிசம்பர் 13 ஆம் திகதிக்கு முன்னர் காணப்பட்ட விதிமுறைகளின் கீழ் நடத்துவதற்கு விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க அனுமதி வழங்கியிருந்தார். 2026 உலகக் கிண்ண கால்பந்தாட்ட கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இலங்கைக்கு அளித்து, உத்தியோகபூர்வ தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான உத்தியோகபூர்வ தேர்தல் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) மற்றும் பீபா ஆகியவற்றின் மேற்பார்வையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு FIFA தடை விதித்திருந்தது. கால்பந்தாட்ட உத்தியோகத்தர்கள் தெரிவு தொடர்பில் கிடைக்கப்பெற்ற குற்றச்சாட்டுக்களை கருத்திற்கொண்டு மூன்றாம் தரப்பினரின் தலையீட்டின் கீழ் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் திட்டத்திற்கு அமைய செயற்படாததே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதிக்குள் நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே, 2026 FIFA உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை இலங்கைக்கு வழங்க FIFA மற்றும் AFC தீர்மானிதுள்ளமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM