மசாஜ் நிலையத்தை அகற்றுமாறு கோரி வவுனியா தேக்கவத்தை ஏ-9 வீதியின் இரு பகுதியிலும் சுதந்திரதினத்தில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் பெரும்பான்மையின மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் தேக்கவத்தை தெவட்ட செவன என்னும் பெயரில் மசாஜ் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இதனை அகற்றுமாறு பொலிசார் உள்ளிட்ட பல தரப்பிடமும் அப்பகுதி மக்கள் தெரிவித்த போதும் இதுவரை எந்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையிலேயே சுதந்திர தினம் இன்று நாடு பூராகவும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் வவுனியாவில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டபோது அப்பகுதி மக்கள் குறித்த மசாஜ் நிலையம் தொடர்பில் முறைப்பாடு செய்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM