அசாமின் கோக்ரஜார் மற்றும் பூட்டானின் கெலேபு நகருக்கு இடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ரயில் இணைப்பு அமைப்பது குறித்து இந்தியாவும் பூட்டானும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மியன்மாரின் உள்நாட்டு நிலைமை, இலட்சிய முத்தரப்பு நெடுஞ்சாலை முயற்சி உட்பட பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு சவால்களை உருவாக்கியுள்ளன.
இந்தியா - மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலைத் திட்டம், பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
மியன்மாரின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு சவால்கள் உருவாக்கியுள்ளன. 2014 ஆம் ஆண்டிலிருந்து எல்லை உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியா அதிக வர்த்தகம் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை பூட்டானுடன் உருவாக்க முயல்கிறது.
அஸ்ஸாம் எல்லையில் கெலேபு - கோக்ரஜாரில் இருந்து ஒரு ரயில் இணைப்பு குறித்து ஆராயப்பட்டுள்ளது. இது வர்த்தகம் மற்றும் சுற்றுலா இரண்டையும் ஊக்குவிக்கும். மேலும் பங்களாதேஷில் சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களை செயல்படுத்துவது வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு பொருளாதார ரீதியாக பெரிதும் உதவும்.
ஐந்து செயல்பாட்டு பேருந்து சேவைகள், மூன்று எல்லை தாண்டிய பயணிகள் ரயில் சேவைகள் மற்றும் இரண்டு உள்நாட்டு நீர்வழி வழித்தடங்கள் மக்களிடையே தொடர்புகளை எளிதாக்குகின்றன என்று அவர் கூறினார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM