பேராதனை பல்கலையின் முன்னாள் பேராசிரியையின் 70 இலட்சம் ரூபா கொடுப்பனவு போலி ஆவணங்கள் மூலம் மோசடி!

Published By: Digital Desk 3

10 Aug, 2023 | 11:44 AM
image

பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தில் பணியாற்றியபோது உயிரிழந்த பேராசிரியை ஒருவருக்கு உரித்தான சுமார் 70 இலட்சம் ரூபா பணத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அவரது கணவருக்கு வழங்கிய சம்பவம் ஒன்று கணக்காய்வாளர் நாயகம் அம்பலப்படுத்தியுள்ளார்.

புதன்கிழமை (09)  கணக்காய்வாளர் நாயகம் அந்த பல்கலைக்கழக நிர்வாகத்தை கோப் குழுவின் முன் அழைத்தபோது இது தெரிய வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவம் போலி ஆவணங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட மோசடி எனத் தெரிவித்த கணக்காய்வாளர் நாயகம், இது தொடர்பில் இதுவரையில் ஏன் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு  அபகீர்த்தியை ஏற்படுத்தும் இவ்வாறான சம்பவங்களை நிறுத்துவதற்கு நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும் என கோப் குழு வலியுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34