முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குளத்தில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இராணுவத்தினர் : பொலிஸாரும் உடந்தை என்கிறார் பீற்றர் இளஞ்செழியன்

06 Aug, 2023 | 10:45 AM
image

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குளம் பகுதியில் ஹெண்டர் வாகனத்தில் வந்திருந்த இராணுவத்தினர் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட பொலிஸார் துணை போகின்றனரா என சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சனிக்கிழமை (05) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் கூறுகையில்,

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் நானும் அவ்விடத்துக்கு கள விஜயம் செய்தபோது இராணுவத்தினர் மணல் அகழ்வில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.  

தண்ணிமுறிப்பு - குருந்தூர் மலை பகுதியில் பாதுகாப்பு கடமையில் நிற்கும் இரு பொலிஸார் மண் அகழ்வினை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றனர். இராணுவத்துக்கு ஒரு சட்டம், மக்களுக்கு இன்னொரு சட்டமா என கேள்வி எழுப்பியுள்ளார். 

அத்தோடு, பொலிஸாரும் சட்ட விரோத மண் அகழ்வுக்கு உடந்தையாக செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21