வவுனியாவை அதிரவைத்த இரட்டை கொலை வழக்கு ; பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 3

05 Aug, 2023 | 09:14 AM
image

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 11 திகதி  வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கைது செய்யப்பட்ட  பிரதான சந்தேகநபரை  நேற்று வெள்ளிக்கிழமை (04) வவுனியா சட்ட வைத்திய  அதிகாரியிடம் முற்படுதிய பின்னர்  வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில்  குற்ற புலனாய்வுத்திணைக்களத்தின் கொலை விசாரணை பிரிவினர்  ஆஜர்படுத்தினர்.

இதன்போதே, சந்தேக நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை  அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான்  அஹமட் ரசீம்  உத்தரவிட்டார்.

கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தொடர்பில், சட்டத்தரணி அருள்மொழிவர்மன் கொன்சியஸ் ஆஜராகி சந்தேகநபர் சம்பவம் நடைபெற்ற அன்று   தனது பிள்ளைக்கு சுகயீனம் காரணமாக   சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக,   யாழ்பாணம் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிறிந்ததாகவும், சம்பவதினத்தன்று  கைது   செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர்  வவுனியாவில் இல்லை என்றும்,  சந்தேகநபரின் நலனுரித்துக்கள் தொடர்பில் கவனம்  செலுத்துமாறும் சந்தேகநபர் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை  குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரனை பிரிவினரான பொலிஸ் பரிசோதகர் இக்பால், பொலிஸ் பரிசோதகர் பொல்வத்த, பொலிஸ் சார்ஜன்ட் சந்தரூவன், பொலிஸ்காஸ்டபிள் விஜரட்ண மதுசங்க பண்டார  ஆகியோர் இணைந்து       மன்றுக்கு முற்படுத்தினர். பின்னர்   சந்தேகநபர்  அனுராதபுரம் சிறைச்சாலை  உத்தியோகத்திரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“கௌரவ” என்று விளிப்பதா? இல்லையா? -...

2026-05-20 15:45:32
news-image

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின்...

2026-05-20 15:44:36
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்...

2026-05-20 15:26:54
news-image

உலக சுகாதார மாநாட்டில் பங்களாதேஷ், பூட்டான்...

2026-05-20 15:38:05
news-image

சமூக ஊடகங்களில் தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து...

2026-05-20 15:22:19
news-image

திருகோணமலை - கண்டி வீதியில் வாகன...

2026-05-20 14:53:21
news-image

காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிக்குடியில் விசாரணைகள்...

2026-05-20 14:14:27
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2026-05-20 13:48:40
news-image

மூதூரில் மரம் சாய்ந்து விழுந்ததில் மீனவர்களின்...

2026-05-20 13:32:51
news-image

நாளை பாராளுமன்றத்தில் பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு...

2026-05-20 13:12:04
news-image

கச்சத்தீவு மீட்பு விடயத்தை தேர்தல் கால...

2026-05-20 12:28:10
news-image

பொகவந்தலாவையில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து மோதி...

2026-05-20 12:44:06