மாலபே சந்திரிகா குமாரதுங்க மாவத்தையின் வாவிக்கரை வீதியிலுள்ள காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் கொத்தொட்டுவ நானாவத்தை பகுதியைச் சேர்ந்த பசிந்து சாமர மதுசங்க (29) என்ற இளைஞனின் சடலம் என குடும்ப உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை மிரிஹான விசேட புலனாய்வு அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொட்டிகாவத்தை முல்லேரிய பிரதேச சபை உறுப்பினர் சுமுதுவின் கொலையுடன் இந்தக் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த இளைஞன் வேறொரு பகுதியில் கொல்லப்பட்டு அவரது சடலம் வாவிக்கரை வீதிக்கு கொண்டுச் சென்று போடப்பட்டிருக்கலாம் எனவும் அவரது உடல் முழுவதும் தாக்கப்பட்டதில் பல காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகில் இரண்டு கைத்தொலைபேசிகளையும் விசாரணைக் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கடுவலை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடுவலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM