ரிதிதென்ன பவுஸர் விபத்தில் மரணமான 6 வயது சிறுவன் ருஸ்திக்கிக்கு நீதி கேட்டு பாரிய ஆர்ப்பாட்டமொன்று புதன்கிழமை (2) முன்னெடுக்கப்பட்டது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பகுதியில் கடந்த சனிக்கிழமை (29) தண்ணீர் பவுஸர் விபத்தில் 6 வயது சிறுவன் ஒருவன் மரணமடைந்தார்.
இந்த விபத்துக்கு காரணம் அந்தப் பகுதியில் இயங்கி வரும் மண் அகழ்வு நடவடிக்கையே காரணம் எனத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ரிதிதென்ன பிரதான வீதியிலிருந்து சுமார் ஆறு கிலோ மீற்றர் தொலைவிலுள்ள புதிய கிராமத்துக்கு அருகிலுள்ள குளம் ஒன்றிலேயே மண் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
சனநடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதி வீதிகளால் கனரக வாகனம் வேகமாக செல்வதால் பாரிய அச்சத்தில் தாம் வாழ்ந்து வருவதாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தின்போது தெரிவித்தனர்.
மண்ணை ஏற்றிக் கொண்டு செல்ல வேறு பாதைகள் உள்ள போதும் தங்களது அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி குடியிருப்பு வீதிகளால் வாகனங்கள் செல்வதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மண் அகழ்வு நடவடிக்கையின் போது மரணமான சிறுவனுக்கு நீதி வேண்டியும் வாகனங்கள் வேறு வீதிகளால் செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து மரணமடைந்த சிறுவனின் பெற்றோர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM