கோட்டாவை நாங்கள் தனிமைப்படுத்தவில்லை அவரே தனித்து செயற்பட்டு நெருக்கடிக்குள்ளானார் - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

01 Aug, 2023 | 07:00 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கோட்டபய ராஜபக்ஷவை நாங்கள் தனிமைப்படுத்தவில்லை. ராஜபக்ஷர்களிடமிருந்து விலகி தனித்து செயற்படுவதாக காண்பிப்பதற்காக அவர் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டு பொதுஜன பெரமுன அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தவர்களை அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். 

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் தனியார் தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தேசிய பாதுகாப்பு,தேசியம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு 69 இலட்ச மக்கள் கோட்டபய ராஜபக்ஷவை தலைவராக தெரிவு செய்தார்கள். நெருக்கடியான சூழ்நிலையில் அவர் 69 இலட்ச மக்களாணையை பாதுகாக்கவில்லை.

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீது நாட்டு மக்கள்  கொண்டிருந்த நம்பிக்கை,69 இலட்ச மக்களாணை என்பன பலவீனமடைய கூடாது என்பதற்காகவே அரசியலமைப்பின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னர் நாட்டில் உண்ண உணவு இல்லாமல் எவரும் நெருக்கடிக்குள்ளாகவில்லை. வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் எரிபொருள்,எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது. 

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாட்டில் எமது அமைச்சரவை உறுப்பினர்கள் முன்னிலை வகித்தார்கள்.

எரிபொருள்,எரிவாயு தட்டுப்பாடு,மின்விநியோக துண்டிப்பு ஆகிய காரணிகளால் நாட்டில் பாரிய நெருக்கடி ஏற்பட்டது. பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 

மாறாக ராஜபக்ஷர்களிடமிருந்தும்,பொதுஜன பெரமுனவில் இருத்தும் தனித்து செயற்படுவதாக மக்களுக்கு காண்பிக்கும் வகையில் தனித்து செயற்பட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த விஜயதாஸ ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, விதுர விக்கிரமநாயக்க, ரொஷான் ரணசிங்க ஆகியோரை இறுதி கட்டத்தில் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார்.

பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட தலைவர்களின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்காமல் பஷில் ராஜபக்ஷவை நிதியமைச்சர் பதவியில் இருந்தும்,மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்தும் விலகுமாறு கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரத்தின் தீர்மானத்துக்கு மதிப்பளித்து அவர்கள் பதவி விலகினார்கள்.கடந்த ஜூன் 09 ஆம் திகதி போராட்டத்தின் போது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அருகில் இருந்தவர்கள் அனைவரும் அவரை விட்டுச் சென்றார்கள்.

நெருக்கடியான நிலையில் பஷில் ராஜபக்ஷ,மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மாத்திரமே அவரை பாதுகாத்தார்கள்.ஆகவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை ஒருபோதும் தனிமைப்படுத்தவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசபந்து தென்னக்கோனின் மனைவி, மகனிடமிருந்து வாக்குமூலம்...

2025-03-15 15:09:45
news-image

பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” உட்பட...

2025-03-15 14:48:51
news-image

சர்வதேச வர்த்தக மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...

2025-03-15 14:22:12
news-image

நானுஓயாவில் ரயில் தடம் புரண்டதால் மலையக...

2025-03-15 14:17:53
news-image

வனவிலங்குகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்

2025-03-15 13:31:02
news-image

லுணுகம்வெஹெர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-15 13:16:50
news-image

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-03-15 13:13:56
news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12