அமெரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சியொன்றில் இரசிகர்களால் 2.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்படுத்தப்பட்டதாக புவியியல் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டன் மாநிலத் திலுள்ள சியாட்டில் நக ரில் கடந்த 22 ஆம் திகதி மேற்படி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின்போது 2.3 ரிக்டர் அளவி லான நில அதிர்வு பதிவாகியதாக வெஸ் ட்டர்ன் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியல் பேராசிரியரான ஜெக்கி கெப்லன் அவ்ர்பாக் தெரிவித்துள்ளார். இரசிகர்களின் செயற்பாடுகள் அல்லது ஒலிபெருக்கிகளினால் இப்பாரிய அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
சியாட்டில் நகரில் இரசிகர்களின் செயற்பாடுகளால் ஏற்பட்ட நில அதிர்வில் இது புதிய சாதனையாகும். இதற்குமுன் 2011 ஆம் ஆண்டு சியாட்டில் சீஹாவ்க்ஸ், நியூ ஓர்லீன் செயின்ற் அணிகளுக்கு இடையிலான அமெரிக்கப் பாணி உதைபந்தாட்டப் போட்டியின்போது 2 ரிக்டர் நில அதிர்வு பதிவாகியிருந்தது.
டெய்லர் ஸ்விப்ட்டின் சியாட்டில் இசை நிகழ்ச்சி கடந்த 22, 23 ஆம் திகதிகளில் நடைபெற்றபோது மொத்தமாக 144,000 இரசிகர்கள் இந்நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்டிருந்தனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM