சர்­வ­கட்சிக் கூட்டம் இன்­னொரு பாடம்

Published By: Vishnu

30 Jul, 2023 | 11:12 AM
image

என்.கண்ணன்

13 ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­முறைப்­ப­டுத்­து­வது குறித்து ஆராய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க அழைப்பு விடுத்த சர்­வ­கட்சிக் கூட்டம், வழக்­கம்­போ­லவே, எந்த முடிவும் இல்­லாமல் முடிந்­தி­ருக்­கி­றது.

கடந்த புதன்­கி­ழமை மாலை கிட்­டத்­தட்ட 3 மணி நேரம் இந்த சர்­வ­கட்சிக் கூட்டம் இடம்­பெற்­றி­ருந்­தது.

இந்தக் கூட்­டத்தில், தமிழ்க் கட்­சிகள் மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­மாறும், மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை பகிர்ந்து கொடுக்­கு­மாறும் வலி­யு­றுத்த, சிங்­களக் கட்­சிகள் பல, அதி­காரப் பகிர்­வுக்கு எதிர்ப்புத் தெரி­வித்­ததால் முதல் குழப்பம் ஏற்­பட்­டது.

அதி­காரப் பகிர்வு என்­பதை தீண்­டத்­த­காத ஒன்­றா­கவே சிங்­களக் கட்­சிகள் பார்க்­கின்­றன. அதி­காரப் பகிர்வை பிரி­வி­னை­யாக அர்த்­தப்­ப­டுத்­து­கின்ற போக்கு அவர்­க­ளிடம் உள்­ளது.  

இத்­த­கைய நிலையில் 13 ஆவது திருத்­தச்­சட்ட அமு­லாக்க விட­யத்தில் சிங்­களக் கட்­சி­க­ளிடம் கருத்து ஒற்­று­மையை எதிர்­பார்ப்­பது முட்­டாள்­தனம்.

இதுதான் நிலைமை என்­பது ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் நன்­றா­கவே தெரியும். இந்­நி­லை­யில்தான் அவர் இவ்­வா­றான சர்­வ­கட்சிக் கூட்­டங்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கிறார்.

சர்­வ­கட்சிக் கூட்­டங்­களில் இறு­தி­யான முடிவை எடுக்க முடி­யாது. குழப்­பங்கள் ஏற்­படும், ஒரு கட்­டத்­துடன் அந்தக் கூட்டம் முடி­வுக்கு வந்து விடும்.

அதற்கு பின்னர், அந்த விவ­காரம் குறித்து அதிகம் பேச வேண்டி வராது, தன்­னிடம் கேள்­வி­களை எழுப்­பு­வோ­ருக்கு, “சர்­வ­கட்சி கூட்­டத்தை கூட்­டினேன், யாரும் ஆத­ர­வ­ளிக்க முன்­வ­ர­வில்லை” என்று நழுவிக் கொள்­ளலாம்.

இதுதான் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் திட்டம். அவ­ரது கட்­சிக்கு ஒற்றை ஆசனம் மட்டும் இருப்­பதும் வச­தி­யான ஒன்று. பொறுப்­புக்­கூற வேண்­டிய தேவை அவ­ருக்கு இல்லை.

அண்­மையில் கூட அவர், ‘என்னால் யோச­னை­களை முன்­வைக்க முடி­யுமே தவிர, ஏனைய கட்­சிகள் தான் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்து தீர்­மா­னிக்க முடியும்’ என கையைக் காண்­பித்து விட்டுத் தப்­பி­யி­ருந்தார்.

இந்­தி­யா­வுக்குப் புறப்­பட முன்னர் அவர் தமிழ்க் கட்­சி­களின் பிர­தி­நி­தி­களைச் சந்­தித்து, 13 ஆவது திருத்தச் சட்­டத்தை தீர­வாக ஏற்றுக் கொள்ள செய்யும் முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்தார்.

ஆனால், அவர் எதிர்­பார்த்­தது போன்ற கருத்­தொற்­று­மையை அவரால் ஏற்­ப­டுத்த முடி­ய­வில்லை.

இப்­போது ஜனா­தி­பதி ரணில், சர்­வ­கட்சிக் கூட்­டத்தைக் கூட்டி சிக்­கலை மேலும் மோச­மாக்­கி­யி­ருக்­கிறார்.

சர்­வ­கட்சிக் கூட்­டத்தில் 13 ஆவது திருத்தச் சட்ட அமு­லாக்கம் அல்­லது அதி­கா­ரப்­ப­கிர்வு தொடர்­பாக எந்த முடி­வையும் எடுக்க முடி­யாது.

ஏனென்றால் இது இன­வாத தேசம். பேரி­ன­வாதச் சிந்­த­னை­களும், தமி­ழர்­களை விரோ­த­மாக பார்க்­கின்ற போக்கும் இங்கு அதிகம். அதனை மீறி ஒரு தீர்வை எந்த சிங்­களத் தலை­வ­ராலும் வழங்க முடி­யாது.

எந்­த­வொரு சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கும் ஒரு­மித்த நிலைப்­பாட்டை எட்­டு­வது கடினம் அல்ல. ஆனால், தமிழர் பிரச்­சி­னைக்­கான தீர்வு என்ற அடை­யா­ளத்­துடன் எந்த தீர்வைக் கையில் எடுத்­தாலும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­வார்கள்.

இது சிங்­களக் கட்­சி­களின் பாரம்­ப­ரியம். இந்த வழக்­கத்தை அவர்­களை மாற்­றவும் மாட்­டார்கள், அதி­லி­ருந்து மாறவும் மாட்­டார்கள்.

இத்­த­கை­ய­தொரு நிலை­மையில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒரே கல்லில் இரண்டு காய்­களை வீழ்த்த திட்டம் போட்டார். அந்த திட்டம் தான் சர்­வ­கட்சி மாநாடு.

சர்­வ­கட்சி மாநாட்டில் 13 ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தற்கு எதிர்ப்புக் கிளம்பும். அது அவ­ருக்கு சாத­க­மான விடயம்.

ஏனைய கட்­சிகள் ஒத்­து­ழைக்­கா­ததால், சட்­ட­வாக்க அதி­கா­ரத்தைக் கொண்­டி­ராத தன்னால், எதையும் செய்ய முடி­யாது என்று இல­கு­வாக சர்­வ­தேச அழுத்­தங்­களில் இருந்து தப்­பித்துக் கொள்ள முடியும்.

அதே­போன்று தான், தமிழ்க் கட்­சிகள் மத்­தியில் அண்­மைக்­கா­லத்தில் ஏற்­பட்­டுள்ள கொள்கைத் தளம்­பல்­களை ரணில் விக்­கி­ர­ம­சிங்க சரி­யாகப் பயன்­ப­டுத்திக் கொள்­கிறார்.

அவர் தமிழ் அர­சி­யல்­வா­திகள், கட்­சி­களை சரி­யாகப் புரிந்து கொண்­டி­ருக்­கிறார். ஐதேக ஆட்­சியில் இருந்த காலத்தில், அர­சாங்­கத்­துடன் ஒட்டிக் கொண்­டி­ருந்த தமிழ்க் கட்­சி­களைப் பயன்­ப­டுத்தி முரண்­பா­டு­களை தீவி­ரப்­ப­டுத்தி வரு­கிறார்.

இது அவ­ருக்­குள்ள இரண்­டா­வது சாத­க­மான விடயம்.

தமிழ்க் கட்­சிகள் எந்தச் சந்­தர்ப்­பத்தில் முரண்­பா­டு­களை வெளிப்­ப­டுத்­து­கின்­ற­னவோ அந்தக் கட்­டத்தில் தன்னை விடு­வித்துக் கொள்ள முடியும் என்­பது ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்குத் தெரியும்.

அதனை ஊகித்தே அவர் தமிழ்க் கட்­சி­களின் கூட்­டங்­க­ளையும், சர்­வ­கட்சி கூட்­டங்­க­ளையும் அடிக்­கடி நடத்திக் கொள்­கிறார்.

தமிழ்க்­கட்­சி­க­ளுக்கு மத்­தியில் முரண்­பா­டு­களை தோற்­று­விப்­பதும், அந்த முரண்­பா­டு­களின் ஊடாக தான் வெளியே வரு­வதும் தான் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தந்­திரம்.

விடு­தலைப் புலி­க­ளையும் அவர் இவ்­வாறே கையாண்டார். ஆரம்­பத்தில் பிரச்­சி­னை­களை தீர்க்க பேச்­சுக்­களை நடத்த ஆரம்­பித்து, உள் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­தினார். அதனால் ஆரம்­பத்தில் தீர்­வுக்­காக நடத்­தப்­பட்ட பேச்­சுக்கள் பின்னர் போகப் போக, பேச்­சுக்­கான பேச்­சுக்­க­ளாக மாறி­யது.

புலி­களை பேச்­சுக்­களில் இருந்து விலகும் சூழ்­நி­லையை தோற்­று­வித்து சர்­வ­தே­சத்தின் முன்­பாக அவர்­களை பயங்­க­ர­வா­திகள் என்று அடை­யா­ளப்­ப­டுத்­தினார்.

அவ­ரது அடுத்த கட்டம், புலி­களை அழிக்கும் இரா­ணுவ நகர்­வா­கவே இருந்­தி­ருக்கும். சந்­தி­ரிகா முந்திக் கொண்டு அவ­ரது அர­சாங்­கத்தைக் கலைத்து, தேர்­தலை நடத்­தி­யதால் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் திட்டம் பிச­கி­யது.

ஆனாலும், புலி­களை அழித்தல் என்ற ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் நீண்­ட­கால இலக்கு மட்டும் நிறை­வே­றி­யது.

அதே­போன்று தான் இப்­போது, அவர் சர்­வ­ கட்சிக் கூட்டம், 13 ஆவது திருத்தம் என்று காய்­களை நகர்த்­து­கிறார்.

13 ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு எந்த நட­வ­டிக்­கை­யையும் அவர் முன்­னெ­டுக்­க­வில்லை.

இவ்­வா­றான நிலையில் பொலிஸ் அதி­கா­ரங்­களைப் பகிர்­வது குறித்து எல்லா கட்­சி­களின் ஒத்­து­ழைப்பை பெற வேண்டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.

இவ்­வா­றான நிலையில் சர்­வ­கட்சிக் கூட்­டத்தில், தமிழ்க் கட்­சிகள் மாகா­ண­சபைத் தேர்­த­லையும், அதி­காரப் பகிர்­வையும் வலி­யு­றுத்த, கிடைத்த சந்­தர்ப்­பத்தை சரி­யாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கிறார் ரணில்.

அதி­காரப் பகிர்வு வேண்­டுமா? மாகாண சபைத் தேர்தல் வேண்­டுமா? ஏதா­வது ஒன்றை தீர்­மா­னி­யுங்கள் என்று நிபந்­தனை விதிக்க, இரண்டும் தேவை என்று தமிழ்க்­கட்­சிகள் வலி­யு­றுத்த, ரணி­லுக்கும் சுமந்­தி­ர­னுக்கும் இடையில் வாக்­கு­வா­தங்கள் ஏற்­பட்­டன.

அந்த வாக்­கு­வா­தங்­களை அடுத்து, ஜனா­தி­பதி ரணில் கூட்­டத்தை முடித்துக் கொள்­வ­தாக எழுந்து போக, வழக்­கம்­போ­லவே சர்­வ­கட்சிக் கூட்டம், முடி­வேதும் இன்றி முடி­வுக்கு வந்­தது.

விடு­தலைப் புலி­க­ளுடன் பேச்­சுக்­களை ஆரம்­பித்த முன்னாள் ஜனா­தி­பதி பிரே­ம­தா­சவும் 1990இல் சர்­வ­கட்சி கூட்­டத்தை தடல்­புட­லாக நடத்­தினார்.

விடு­தலைப் புலி­களின் சார்பில் யோக­ரட்ணம் யோகி அதில் பார்­வை­யா­ள­ராக கலந்து கொண்­டி­ருந்தார். அந்த சர்­வ­கட்சி கூட்­டமும் எந்த முடிவும் இல்­லா­மலே முடிந்­தது.

அது­போல, சந்­தி­ரிகா, மஹிந்த, மைத்­தி­ரி­பால சிறி­சேன என்று ஆட்­சி­யா­ளர்கள் பல­ரும சர்­வ­கட்சிக் கூட்­டங்­களை நடத்­தி­னரே தவிர, அதன் ஊடாக எந்த முடி­வையும் எடுக்­க­வில்லை.

இப்­போது ரணில் விக்­கி­ர­ம­சிங்க தேர்­தலா,-  அதி­கா­ரப்­ப­கிர்வா என்று கேட்டு விட்டு, தமிழ்க் கட்­சிகள் முதலில் ஒரே நிலைப்­பாட்­டுக்கு வர வேண்டும் என்று பந்தை தூக்கி வீசி விட்டுப் போயி­ருக்­கிறார்.

தமிழ்க்­கட்­சிகள் மத்­தியில் குழப்பம் இருப்­பதால் தன்னால் முடி­வெ­டுக்க முடி­ய­வில்லை என்று கூறு­வது தான் ரணிலின் திட்டம்.

ஆனால், அதி­கா­ரப்­ப­கிர்வு என்றால் மாகாண சபைகள் இருக்க வேண்டும். மாகாண சபைகள் இயங்­கினால் தானே அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்த முடியும்.  இவ்வாறான நிலையில் அதுவா- இதுவா என்ற கேள்விக்கு இடமில்லை, அதுவும், இதுவும் வேண்டும் என்பதே ஒரே நிலைப்பாடு என்று தமிழ்க்கட்சிகள் கூறுகின்றன.

அதையெல்லாம் ஜனாதிபதி ரணில் கண்டு கொள்ளவில்லை. ஜே.ஆர் ஆட்சியில் இருந்தபோது, போரா, சமாதானமா எதற்கும் தயார் என்று தமிழர்களைப் பார்த்து சவால் விட்டார். ஆனால், ரணில் சற்று வித்தியாசமாக, தேர்தலா, அதிகாரப்பகிர்வா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்தப் பிரச்சினை தீர்வதற்குள், விவகாரம் வேறொரு கட்டத்துக்குப் போயிருக்கும் அல்லது திசை திருப்பி விடப்பட்டிருக்கும்.

இதனை தான் ஆட்சியாளர்கள் எதிர்பார்க் கிறார்கள். ஏமாற்றுவதையே வழக்கமாக கொண்ட சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து நியாயமான தீர்வை எட்ட முடியாது என்ற பாடத்தை தமிழர்களுக்கு மீண்டும் கற்பிக்கப் போகிறார் ரணில்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடந்த கால நினைவுகளால் என்ன பயன்?

2025-03-26 03:57:33
news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56