மனித எச்சங்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் -  அமைச்சர் டக்ளஸ்

Published By: Vishnu

28 Jul, 2023 | 05:34 PM
image

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸாரின் சாக்குப்போக்குகளையும் உறுதிமொழிகளையும் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒரு மாத காலத்தினுள் உறுதியான தீர்வு காணப்பட வேண்டும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே அமைச்சரினால் இவ்வாறு கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிராம மட்டத்திலான விழிப்பு குழுக்களை உருவாக்குவதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வு, போதைப் பொருள் பயன்பாடு உட்பட்ட சமூக விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என்பது சிவபுரம் கிராமத்தில் நிரூபனமாகியுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் விழிப்புக் குழுக்களை வலுப்படுத்தி பொலிஸாருடன் இணைந்து செயற்படுத்துவதற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, சிவபுரம் கிராமத்தில் கடந்த காலங்களில் சமூக விரோதச் செயல்கள் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்திருந்தது.

இந்நிலையில் குறித்த கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து விழிப்புக் குழுவினை உருவாக்கி கிராமத்தினை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனடிப்படையில் குறித்த கிராமத்தில் சமூக விரோதச் செயற்பாடுகள் கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர்  வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.என். சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் சுகாதாரம், கல்வி, விவசாயம், சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு முக்கிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், வடக்கு, கிழக்கில் மக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் கடையடைப்பு கோரிக்கையை நிராகரிக்கும் வகையில்  கூட்டத்தில் கலந்து கொண்ட அரச அதிகாரிகள் மற்றும்  சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் நன்றியை தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொக்குளாய் கொக்குத் தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடாக இருக்கின்ற போதிலும், மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்படும் வகையிலான செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த மனித எச்சங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், விஞ்ஞான ஆய்வுகளின்  ஊடாக அவை எந்தக் காலப் பகுதிக்குரியவை என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வலியுறுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23