வைத்தியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் பண மோடி செய்த நிதி நிறுவன உரிமையாளர் தலைமறைவு

28 Jul, 2023 | 01:13 PM
image

குருநாகல் பகுதியில் நிதி நிறுவனமொன்றில் 6 சதவீத வட்டி தருவதாக கூறி பணத்தை முதலீடு செய்தவர்களை ஏமாற்றிய சந்தேக நபரொருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக பயணத்தடை பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நிதி நிறுவனத்தில் வைத்தியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், ஓய்வுபெற்ற பாதுகாப்பு அதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களது பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

குறித்த நபர்  கடந்த 2020 ஆம் ஆண்டு 6 சதவீத வட்டியை வழங்வதாக கூறி நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளதாகவும், கடந்த சில வருடங்களில் சுமார் 8000 முதலீட்டாளர்கள் இந்த நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது . 

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஆரம்பத்தில் 6 சதவீத வட்டி வழங்கப்பட்டுள்ளதாவும் பின்னர் அது 3 சதவீதமாக குறைக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் பின்னர் முதலீடு செய்தவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேலை வாய்ப்புக்காக நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற...

2023-12-02 10:02:05
news-image

மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைத்...

2023-12-02 09:54:39
news-image

நுகேகொடையில் வீதி மூடல் !

2023-12-02 09:56:19
news-image

15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இந்திய தூதுவரால்...

2023-12-02 09:31:46
news-image

மாதகலில் மிதிவெடி கண்டெடுப்பு

2023-12-02 09:13:55
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைதுகள் -...

2023-12-02 07:46:15
news-image

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை...

2023-12-02 07:12:09
news-image

திருகோணமலைக்கு சற்றுத் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்...

2023-12-02 06:51:41
news-image

வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியிலும் ஓரவஞ்சனை -...

2023-12-01 17:13:04
news-image

எல்.ஈ.டி. திரைகளை கொள்வனவு செய்வதில் இலங்கை...

2023-12-01 17:20:46
news-image

நிலையியற் கட்டளையை துஷ்பிரயோகம் செய்த எதிர்க்கட்சித்...

2023-12-01 19:33:37
news-image

தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை...

2023-12-01 19:28:21