தூய்மைக்குப் பெயர்போன சிங்கப்பூர் அரசியல் கறை படிந்த தேசமாக மாறுகிறதா?

Published By: Vishnu

23 Jul, 2023 | 06:05 PM
image

சதீஷ் கிருஷ்­ண­பிள்ளை

சிங்­கப்­பூரைப் பார்த்து பொறா­மைப்­ப­டாத நாடு­களே இல்லை எனலாம். ‘எமது தேசத்தை சிங்­கப்­பூ­ராக்கிக் காட்­டுவேன்’ என்று அர­சி­யல்­வா­திகள் பெருமை பேசு­வார்கள். சிங்­கப்பூர் பிர­பலம் பெற்­றது, அதன் அப­ரி­மி­த­மான வளர்ச்­சியால் மாத்­திரம் அல்ல. அதற்கு வழி­வ­குத்த ஆட்சி நிர்­வாக முறை­யாலும் தான்.

அர­சியல் இழு­ப­றி­களோ, விவ­கா­ரங்­களோ இல்­லாத நாடு சிங்கப்பூர் என்­பார்கள். இதுவே சிங்­கப்­பூரின் வணிக அடை­யா­ள­மா­கவும் திகழ்­கி­றது. உலக நாடு­களைச் சேர்ந்த முத­லீட்­டா­ளர்கள் தூய்­மை­யான அர­சியல் மீது நம்­பிக்கை வைத்து போட்டி போட்டிக் கொண்டு சிங்­கப்­பூரில் முத­லீடு செய்­வார்கள்.

இப்­போது சிங்­கப்­பூரின் மீது கண்­பட்டு விட்­டதோ தெரி­ய­வில்லை. அடுத்­த­டுத்து அர­சியல் விவ­கா­ரங்கள். ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள். இவை ஆட்சி அதி­கா­ரத்தின் மீது மக்கள் வைத்­தி­ருந்த நம்­பிக்­கையை ஆட்டம் காணச் செய்­துள்­ளது போன்­ற­தொரு தோற்­றப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

முதலில், முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் விவியன் பால­கி­ருஷ்ணன், உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் கே.சண்­முகம் ஆகியேர் மீதான குற்­றச்­சாட்டு.

இவர்­களின் பிரச்­சினை கடந்த மே மாதம் தலை­தூக்­கி­யது. இவர்கள் வாட­கைக்கு பெற்ற கால­னித்­துவ ஆட்­சி­கால பங்­க­ளாக்கள் பற்றி எதிர்க்­கட்சி உறுப்­பினர் கேள்வி கேட்டார்.

இரு அமைச்­சர்­க­ளுக்கு எந்த அடிப்­ப­டையில் ஆகவும் குறைந்த வாட­கைக்கு பங்­க­ளாக்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன என்­பது கேள்­வியின் சாராம்சம். விவியன், கே.சண்­முகம் பற்றி விசா­ரிக்­கு­மாறு பிர­தமர் உத்­த­ர­விட்டார். விசா­ர­ணை­களின் முடிவில் இரு­வரும் குற்­ற­மற்­ற­வர்கள் என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டது.

இந்த விசா­ர­ணையை மேற்­பார்வை செய்யும் பொறுப்பு இன்­னொரு அமைச்­ச­ருக்கு வழங்­கப்­பட்­டதால், விசா­ர­ணையின் பெறு­பே­று­களை எதிர்க்­கட்­சிகள் விமர்­சித்­தி­ருந்­தன. ஒரு அமைச்சர் குற்றம் செய்­தி­ருந்தால், அதனை மற்­றொரு அமைச்சர் ஒப்புக் கொள்­வரா, பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­து­வாரா என்று எதிர்க்­கட்சி உறுப்­பினர் கேள்வி எழுப்­பினார்.

அடுத்து, போக்­கு­வ­ரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்­வரன் தொடர்­பான ஊழல் குற்­றச்­சாட்டு. இவ­ருடன் வணிகப் பெரும்­புள்­ளி­யான கோடீஸ்­வரர் ஒரு­வரும் கைது செய்­யப்­பட்டார்.

இவர்கள் மீதான விசா­ரணை மிகவும் வெளிப்­ப­டை­யா­ன­தாக இருக்கும், எதுவும் மறைக்­கப்­பட மாட்­டா­தென சிங்­கப்­பூரின் துணைப்­பி­ர­தமர் அறி­வித்தார்.

இருந்­த­போ­திலும், இரு­வரும் கைது செய்­யப்­பட்ட இரு நாட்கள் கழித்தே கைது பற்றி செய்தி ஊட­கங்­களில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டது.

அமைச்சர் ஈஸ்­வரன் செல்­வாக்­கான அர­சி­யல்­வாதி. கொவிட் நெருக்­க­டிக்குப் பின்னர் சிங்­கப்­பூரை விமான மற்றும் கப்பல் போக்­கு­வ­ரத்து கேந்­தி­ர­மாக மாற்ற பாடு­ப­டு­பவர்.

சிங்­கப்­பூ­ரின கடந்த 40 வரு­ட­கால அர­சியல் வர­லாற்றில்  இவ­ருக்­குமுன் எந்­த­வொரு அமைச்­ச­ரவை அமைச்­சரும் ஊழல் குற்­றத்­திற்­காக கைது செய்­யப்­பட்­ட­தில்லை.

இப்­போது  அடுத்­த­தாக சிங்­கப்பூர் நாடா­ளு­மன்ற சபா­நா­ய­கரின் பதவி விலகல். அவர் பதவி துறக்க வேண்­டு­மென தாம் தீர்­மா­னித்­த­தாக பிர­தமர் அறி­வித்­துள்ளார்.

சபா­நா­யகர் டான் சுவான் ஜின்னின் பிரச்­சினை, திரு­ம­ணத்­திற்கு அப்­பாற்­பட்ட உறவு. இவர் பெண் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருடன் உறவில் இருந்­த­தாக குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது.

சபா­நா­ய­க­ருக்கு 54 வயது. அவர் திரு­ம­ண­மா­னவர். இவ­ருக்கு ஆளும் கட்­சியைச் சேர்ந்த செங் லி ஹூயி என்ற பெண்­ணுடன் இருக்கும் உறவு சக­லரும் அறிந்த விடயம்.

தனித்து வாழும் ஹூயி உடன் கொண்­டுள்ள முறை­கே­டான உறவை நிறுத்­துங்கள் என்று கடந்த பெப்­ர­வரி மாதமே பிர­தமர் எச்­ச­ரித்­தி­ருந்தார். இரு­வரும் கேட்­க­வில்லை. மாறாக, எது­வித கார­ணங்­க­ளையும் தெரி­விக்­காமல், இரு­வரும் தத்­த­மது பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­தார்கள்.

இந்த மூன்று விவ­கா­ரங்­களும் சிங்­கப்­பூரில் தீவிர பேசு­பொ­ரு­ளாக மாறி, அர­சி­யலை ஆட்டிப் படைப்­ப­தற்கு கார­ணங்கள் உண்டு.

இவை சுதந்­திர சிங்­கப்­பூரை 1959ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சி செய்து வரும் மக்கள் செயற்­பாட்டு கட்­சியின் (பிஏபி) அர­சியல் திட­சங்­கற்­பத்­துடன் தொடர்­பு­பட்­டவை. இன்று பல நாடு­களும் அண்­ணாந்து பார்க்கும் அள­விற்கு சிங்­கப்பூர் உயர்ந்­தி­ருக்­கி­றது என்றால், அதன் வளர்ச்­சிக்­கு­ரிய பிர­தான காரணம் பிஏபி அர­சாங்­கத்தின் கொள்­கைகள்.

தமது எந்­த­வொரு மக்கள் பிர­தி­நி­தியும் மிகவும் ஒழுக்­க­முள்­ள­வ­ராக இருக்க வேண்டும் என்­பதில் பிஏபி கட்சி மிகவும் உறு­தி­யாக இருக்­கி­றது. இந்த உறு­திப்­பாட்டை பேணு­வ­தற்கு கட்­சிக்குள் கடு­மை­யான விதி­மு­றைகள் இருக்­கின்­றன. இவை தீவி­ர­மாக அமு­லாக்­கப்­பட்டும் வரு­கின்­றன. பிஏபி கட்­சியின் ஸ்தாபகத் தலைவர் ஒருவர் கூறி­யதைப் போல, இந்தக் கட்­சியில் சேர்­வது பாதி­ரி­யா­ராக துற­வ­றத்தில் இணை­வ­தற்கு ஒப்­பா­னது என்­பார்கள்.

சிங்­கப்­பூரின் அர­சியல் கறை­ப­டி­யா­த­தாக இருந்­த­தாயின், ஆளும் கட்­சியின் இறுக்­க­மான கொள்­கை­களால் கட்­டி­யெ­ழுப்­ப­பட்ட தூய அர­சியல் கலா­சா­ரமே காரணம். ஆளும் கட்சி அர­சியல் சட்­டப்­பேறு (Political Legitimacy) என்ற பதத்தை அடிக்­கடி உப­யோ­கப்­ப­டுத்­து­வது வழக்கம். அதா­வது, அர­சியல் ரீதி­யாக ஏற்­பு­டைய தன்மை.

தூய்­மை­யான மற்றும் ஊழல் இல்­லாத ஆட்சி நிர்­வா­கத்தை முன்­னெ­டுத்தால் மாத்­தி­ரமே மக்கள் தமது கட்­சியை அர­சியல் ரீதி­யாக ஏற்றுக் கொள்­வார்கள் என்­பதை பிஏபி தாரக மந்­தி­ர­மாக கொண்­டுள்­ளது.

இந்தக் கட்சி நேர்மை, நாணயம், நன்­னெ­றி ஆகிய நற்­கு­ணங்­க­ளுடன் ஆட்சி செய்­வ­தற்கு பெயர் பெற்­றுள்­ளதால், கட்­சியின் மீது சிங்­கப்பூர் மக்கள் அப­ரி­மி­த­மான நம்­பிக்கை வைத்­தி­ருந்­தார்கள்.

வேறு நாடு­களைப் போலல்­லாமல், சிங்­கப்­பூரில் ஆளும் கட்­சியின் அர­சி­யல்­வா­திகள் கௌர­வ­மாக மதிக்­கப்­ப­டு­தற்கு இதுவே காரணம். வேறு நாடு­களைப் போலல்­லாமல் அர­சி­யல்­வா­திகள் உயர்ந்த சம்­பளம் பெறு­வ­தற்கும் இதுவே கார­ண­மாக உள்­ளது.

எவரும் ஊழல் செய்து பணம் ஈட்ட முய­லக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவும், சிறந்த திற­மை­களை ஈர்ப்­ப­தற்­கா­கவும் சிங்­கப்­பூரில் அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு ஆகக் கூடு­த­லான சம்­பளம் வழங்­கப்­ப­டு­கி­றது.

அந்­நாட்டில் அமைச்சர் ஒரு­வ­ருக்­கான சம்­பளம் 1.1 மில்­லியன் சிங்­கப்பூர் டொலர்­களை எட்­டு­கி­றது. அமெ­ரிக்க டொலரின் அடிப்­ப­டை­யில ஆராய்ந்தால், அமைச்­சரின் வரு­டாந்த சம்­பளம் 822,000 டொலர்கள்!

இத்­த­கைய பின்­பு­லத்தில், அடுத்­த­டுத்து நிகழும் ஊழல் மோசடி பிரச்­சி­னைகள் சிங்­கப்பூர் மக்கள் மத்­தியில் பேர­திர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன என்றால், அது மிகை­யில்லை. இந்த மக்கள் அர­சியல் பிரச்­சி­னை­களை அறி­யா­த­வர்கள்.

சமீ­பத்­திய ஊழல் மற்றும் ஒழுக்­க­மீறல் பிரச்­சி­னைகள் சிங்­கப்பூர் அர­சாங்­கத்­திற்கு பெரும் சவா­லாக அமையப் போவதில் சந்­தேகம் இல்லை. இந்தப் பிரச்­சி­னை­களை அர­சாங்கம் எவ்­வாறு கையாளப் போகி­றது என்­பது முக்­கி­ய­மா­னது.

இவை பற்றி பிர­தம மந்­திரி லீ ஹ்சியென் லூங் பெரிதும் அலட்டிக் கொள்­வ­தற்­காக தெரி­ய­வில்லை. சில சந்­தர்ப்­பங்­களில் எல்லாம் ஒன்றின் மேலாக ஒன்று குவி­வது உண்டு தான் சரி­யா­னதை சரி­யான இடத்தில் வைத்து, இதற்கு தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறு­கிறார்.

ஆளும் பிஏபி கட்­சியின் மற்­றொரு பலம் இது தான். தமது உறுப்­பி­னர்கள் மத்­தியில் பிரச்­சினை இருக்­கி­ற­தென கண்­ட­றிந்தால், முறை­யான ஒழுக்­காற்று விசா­ர­ணை­களை நடத்தி, உரிய தீர்வு காணக்­கூ­டிய ஆற்றல் இருக்­கி­றது என்ற நம்­பிக்கை ஆளும் கட்­சியின் தலை­வர்­க­ளுக்கு உண்டு.

இந்த நம்­பிக்கை எதில் கட்­டி­யெ­ழுப்பப்­பட்­டுள்­ளது என்­பது முக்­கி­ய­மா­னது. குற்­ற­மொன்­றிற்­காக விசா­ரிக்­கப்­படும் நபர் பலம் பொருந்­திய அமைச்­ச­ராக இருக்­கலாம். அவரை விசா­ரிப்­ப­தற்­கு­ரிய முறை­யான பொறி­மு­றை­யொன்று அர­சாங்­கத்தில் உள்­ளது என்­பதன் அடிப்­ப­டை­யி­லான நம்­பிக்­கை­யாக இருந்தால் அது ஆரோக்­கி­ய­மா­னது.

மாறாக, மக்கள் தம்­மீது நம்­பிக்கை கொண்­டி­ருக்­கி­றார்கள். தாம் சரி­யாகத் தான் விசா­ரிப்போம் என்ற மம­தையின் அடிப்­ப­டை­யி­லான நம்­பிக்­கை­யெனில், அது சரி­யா­ன­தாக அமை­யாது. இது மிகவும் தவ­றான முன்­னு­தா­ர­ண­மாக அமையும். மக்கள் அர­சாங்­கத்தின் மீதும், ஆளும் கட்­சியின் மீதும் வைத்­தி­ருக்கும் நம்­பிக்­கையை சிதைத்து விடும்.

இதில் உள்ள பிரச்­சினை யாதெனில், தற்­போது சிங்­கப்பூர் முக்­கி­ய­மான அர­சியல் நிலை­மாற்­றத்தை நோக்கி நகர்­கி­றது. கடந்த 19 வரு­டங்­க­ளாக பிர­த­ம­ராக கட­மை­யாற்றும் லீ-யிற்கு இப்­போது 71 வயது. அவர் ஓய்வு பெறு­வது பற்றி அடிக்­கடி பேசி வந்தார்.  சிங்­கப்­பூரின் அர­சியல் தலை­மைத்­து­வத்தை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பதில் ஆர்வம் காட்டினார்.

இன்று அரசியல் பிரச்சினைகள் ஆளும் கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை உலுக்கியுள்ள பின்புலத்தில், அவரது திட்டம் சற்றுத் தாமதமாகியிருப்பதாக தெரிகிறது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். அடுத்தாண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தப் போவதில்லையென கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளாரெனின், ஆளும் கட்சியின் இருப்பு பற்றி அவரும் அச்சம் கொண்டுள்ளார் என்பது தானே அர்த்தம்?

இந்த விவகாரங்கள் ஆளும் கட்சியை ஓரங்கட்டச் செய்து, எதிர்க்கட்சிகளுக்கு பாதை அமைத்துக் கொடுக்கும் என்று உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், இதற்காக ஆளும் கட்சி அதிக விலையை செலுத்தக்கூடியதாக இருக்கும் என்பதே உண்மை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'உள்நாட்டு அரசியல் குற்றம்சாட்டப்பட்டவர்களை பாதுகாத்தாலும் பொறுப்புக்கூறலை...

2025-03-26 13:31:44
news-image

அபிவிருத்திக்கான தடைகளை அகற்றுதல்

2025-03-26 14:11:02
news-image

கடந்த கால நினைவுகளால் என்ன பயன்?

2025-03-26 14:14:36
news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53