நிந்தவூர், கல்லடி பகுதிகளில் திருடிய பெறுமதியான மோட்டார் சைக்கிள்களுடன் இருவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது

23 Jul, 2023 | 12:45 PM
image

ம்பாறை - நிந்தவூர் மற்றும் மட்டக்களப்பு - கல்லடி பகுதிகளில் திருடப்பட்ட இரணடு பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சில பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களை வெள்ளிக்கிழமை (21) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அதன்படி, நிந்தவூரில் கடந்த 18ஆம் திகதி திருடப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் 32 வயதுடைய ஒருவரையும், கல்லடியில் திருடப்பட்ட மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் காத்தான்குடி ஊர்வீதியில் 19 வயதுடைய மற்ற சந்தேக நபரையும் காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதோடு, அந்த இருவரிடமிருந்து சுமார் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 மோட்டார் சைக்கிள்கள், 1 லெப்டொப், 1 டிவீடி இயந்திரம், வீடுகளில் கொள்ளையிடுவதற்காக பயன்படுத்தும் ஆயுதங்கள் அடங்கிய பையொன்று மற்றும் சிறிய கம்பித்துண்டு ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது, குறித்த சந்தேக நபர்களில் ஒருவர் ஆரையம்பதியையும் மற்றொருவர் காத்தான்குடியையும் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மையான தேசிய பிரச்சினையை அறிந்து அவற்றுக்கு...

2025-01-22 16:56:52
news-image

சம்மி சில்வாவிடம் மண்டியிட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்...

2025-01-22 20:43:28
news-image

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா...

2025-01-22 23:49:25
news-image

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை...

2025-01-22 16:57:24
news-image

மாகாண திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மாகாண...

2025-01-22 20:19:28
news-image

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

2025-01-22 23:00:13
news-image

கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க...

2025-01-22 17:10:47
news-image

சீனாவின் 500 மில்லியன் யுவான் நன்கொடை...

2025-01-22 20:50:37
news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41