யதார்த்தத்தை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டிய தருணம் இது

24 Jul, 2023 | 04:07 PM
image

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யுடன் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க நடத்­திய பேச்­சு­வார்த்­தையின் போது அர­சியல் தீர்வு, அதி­காரப் பர­வ­லாக்கல் மற்றும் 13ஆவது திருத்தச் சட்­டத்தின் அமு­லாக்கல் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

13ஆவது திருத்தச் சட்­டத்தின் அமு­லாக்­கத்தின் அவ­சியம் தொடர்­பிலும் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

இந்­திய – இலங்கை ஒப்­பந்­தத்தின் கீழ் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட 13ஆவது திருத்தச் சட்­ட­மா­னது இன்­னமும் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. மாகாண சபை முறை­மை­யா­னது அரை­குறை அதி­கா­ரத்­துடன் செயற்­ப­டுத்­தப்­பட்­டதே தவிர முழு­மை­யான அதி­கா­ரங்­கள்  இது­வரை வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இந்­நி­லை­யில்தான் தற்­போது 13ஆவது திருத்தச் சட்­டத்தின் முழு­மை­யான அமு­லாக்கம் தொடர்­பிலும் மாகாண சபைத் தேர்­தல்­களை நடத்த வேண்­டி­யதன் அவ­சியம் குறித்தும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க பத­வி­யேற்று ஒரு வருடம் தற்­போது கடந்து விட்­டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி அவர் ஜனா­தி­ப­தி­யாக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­தி­ருந்தார். ஜனா­தி­ப­தி­யாக அவர் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­படும் என்றும் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வுக்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்தார்.

கடந்த பெப்­ர­வரி மாதம் 4ஆம் திகதி கொண்­டா­டப்­பட்ட 75ஆவது சுதந்­திர தினத்­துக்கு முன்னர் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என்று அவர் தெரி­வித்­தி­ருந்தார். அதற்­கான ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கு­மாறும் பாரா­ளு­மன்­றத்­திலும் அதற்கு வெளி­யிலும் அர­சியல் கட்­சி­க­ளுக்கு அவர் அழைப்பு விடுத்­தி­ருந்தார்.

தமிழ் மக்களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு மற்றும் அடிப்­படை பிரச்­சி­னை­யான இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்கத் தரப்பின் பிர­தி­நி­திகளுக்கும் தமிழ் தேசிய கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்­கு­மி­டையில் பேச்­சுக்­களும் இடம்­பெற்­றி­ருந்­தன.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில்  கடந்த டிசம்பர் மாதமும் ஜன­வரி மாதமும் இரண்டு தட­வைகள் சர்­வ­கட்சி குழுக் கூட்­டமும் இடம்­பெற்­றி­ருந்­தன. இதனை விட இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான தமி­ழ­ரசுக் கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளு­டனும் அர­சாங்கத் தரப்­பினர் பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்­தனர்.

13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்பேன் என்று பெப்­ர­வரி மாதம் நடை­பெற்ற இரண்­டா­வது சர்­வ­கட்சி குழுக் கூட்­டத்தில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறுதி வழங்­கி­யி­ருந்தார்.

அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள 13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். அவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­தாது தொடர்ந்தும் செயற்­பட முடி­யாது. அர­சி­ய­ல­மைப்பில் உள்ள விட­யத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தாது விட்டால் அது குறித்து சர்­வ­தேச சமூகம் எம்­மிடம் கேள்­வி­யெ­ழுப்பும் என்றும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறிப்­பிட்­டி­ருந்தார்.

13ஆவது திருத்தச் சட்­டத்தில் உள்ள காணி, பொலிஸ் அதி­கா­ரங்­களை எவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­து­வது என்­பது தொடர்­பிலும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வர்­க­ளுடன் அர­சாங்கப் பிர­தி­நி­திகள் கலந்­து­ரை­யா­டி  இருந்­தனர். ஜனா­தி­ப­தியின் அறி­விப்பு மற்றும் இத்­த­கைய கலந்­து­ரை­யா­டல்கள் 13ஆவது திருத்தச் சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்தக் கூடிய சூழல் உரு­வாகும் என்ற நம்­பிக்கையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

ஆனாலும் பௌத்த பீடங்­களின் எதிர்ப்பு மற்றும் பௌத்த பிக்­கு­களின் போராட்டம் என்­ப­வற்­றை­ய­டுத்து 13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தும் ஜனா­தி­ப­தியின் உறுதி மொழி நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. மாறாக தற்­போது 13ஆவது திருத்தச் சட்­டத்தில் பொலிஸ் அதி­காரம் அற்ற ஏனை­ய­வற்றை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு தயார் என்றும் இதற்கும் பாரா­ளு­மன்­றத்தின் ஒத்­து­ழைப்பை பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வித்­தி­ருக்­கின்றார்.

இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­வ­தற்கு முன்னர் கடந்த 18ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களைச் சேர்ந்த தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க சந்­தித்து பேசி­யி­ருந்தார். இந்தச் சந்­திப்பில் பொலிஸ் அதி­கா­ரங்­களை தவிர்த்து ஏனைய அதி­கா­ரங்­க­ளுடன் 13ஆவது திருத்தச் சட்டம் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­படும். 13ஆவது திருத்தச் சட்­டத்தின் முதலாம் இலக்கப் பட்­டி­யலின் ஏற்­பா­டு­களும் 3ஆம் இலக்க பட்­டி­யலின் ஒரு சில ஏற்­பா­டு­களும் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­படும் என்று ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென்று அறி­வித்­தி­ருந்த ஜனா­தி­பதி தற்­போது பொலிஸ் அதி­கா­ர­மற்ற ஏனைய அதி­கா­ரங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுப்­ப­தாக கூறி­யி­ருப்­பது அவர் தனது நிலைப்­பாட்­டி­லி­ருந்து மாறி­யுள்­ளதை எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

பொலிஸ் அதி­கா­ர­மற்ற மாகாண சபை முறை­மையை அமுல்­ப­டுத்தும் அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சி நிரா­க­ரித்­துள்­ளது. அதன் பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன், இந்த விட­யங்கள் தொடர்பில் விளக்கம் அளித்­தி­ருக்­கின்றார்.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற சந்­திப்பில் கலந்­து­கொண்ட இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் மூத்த தலைவர் இரா. சம்­பந்­தனும் அதி­காரப் பர­வ­லாக்கல் என்று கூறி எம்மை ஏமாற்ற முய­ல­வேண்டாம் என்றும் இனி­மேலும் பொறுமை காக்க முடி­யாது என்றும் கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.

தற்­போது தமிழ் மக்­களின் அன்­றாட பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைக் காண்­ப­துடன் 13ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தி ஓர­ள­வுக்கு அதி­கா­ரத்தை வழங்­கு­வதே அர­சாங்­கத்தின் திட்­ட­மா­க­வுள்­ளது. அத்­துடன் வடக்கு, கிழக்கில் அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுப்­பதும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் உண்மை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை அமைத்து நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­துமே அர­சாங்­கத்தின் நோக்­க­மா­க­வுள்­ளது.

இதனை முன்­னிறுத்­தியே வடக்கு, கிழக்கு தமிழ் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டான சந்­திப்­பின்­போது திட்­ட­வ­ரை­பொன்றை ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைத்­தி­ருக்­கின்றார். அந்த திட்­ட­வ­ரைபை அமுல்­ப­டுத்­து­வதே அர­சாங்­கத்தின் தற்­போ­தைய நோக்­க­மா­க­வுள்­ளது. தற்­போ­தைய நிலையில் அதற்கு அப்பால்  செல்­வ­தற்கு ஜனா­தி­பதி விரும்­ப­வில்­லை­யென்றே தெரி­கின்­றது.

உண்­மை­யி­லேயே தமிழ் மக்கள் தமது அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யக் கூடிய வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி தீர்­வையே கோரி நிற்­கின்­றனர்.

கடந்த மூன்று தசாப்த கால­மாக இடம்­பெற்ற யுத்­தத்தில் பேர­ழி­வு­களை சந்­தித்த தமிழ் மக்கள் தமக்­கான அர­சியல் தீர்வை கோரி நிற்­கின்­றனர். அது கௌர­வ­மா­ன­தாக அமைய வேண்டும் என்­பதே அவர்­களின் நிலைப்­பா­டா­க­வுள்­ளது. அத்­த­கைய ஒரு தீர்வை நோக்­கிய பய­ணத்தை மேற்­கொள்ள வேண்டும் என்­பதே தமிழ் தலை­வர்­க­ளது கோரிக்­கை­யா­க­வு­முள்­ளது.

ஆனால் தற்­போ­தைய நிலையில் தமிழ் மக்களின் அபி­லா­ஷை­களை பூர்த்­தி­செய்யக் கூடிய முழு­மை­யான தீர்வு சாத்­தி­யமா என்ற விடயம் தொடர்­பிலும் ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது.

13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தப் போவ­தாக ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வித்­த­தை­ய­டுத்து நான்கு பௌத்த பீடா­தி­ப­தி­களும் அதற்கு கடும் எதிர்ப்­பினை தெரி­வித்­தி­ருந்­தனர். 

இந்த விடயம் தொடர்பில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு கடி­தத்­தையும் அனுப்­பி­யி­ருந்­தனர். போராட்­டங்­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் அடுத்­த­கட்­ட­மாக நாட்டில் ஜனா­தி­பதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்வுகூறல் விடுக்கப்பட்டுள்ள வேளையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சமஷ்டி தீர்வு குறித்து ஆராய்வதற்கு ஒருபோதும் தயாராகப் போவதில்லை. அதற்கான சாத்தியப்பாடுகளும் ஒருபோதும் ஏற்படப் போவதில்லை.

தற்போதைய நிலையில் கிடைப்பதை பெற்றுக்கொண்டு அடுத்தகட்டத்தை நோக்கி செல்வதற்கு முயலவேண்டும். 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்துமாறு கோருவதுடன் அதனை மேற் கொள் வதற்கான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும்.

அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தி 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும். இதனைவிடுத்து அவசரப்பட்டு முடிவுகளை எடுத்து இருப்பதையும் இழப்பதற்கு முனையக்கூடாது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தற்போதைய நிலையில் யதார்த்ததை உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு...

2025-02-01 13:18:06
news-image

குற்றச் செயல்களின் பின்னணியும் கடந்தகால வரலாற்று...

2025-01-26 16:38:59
news-image

இந்தியாவின் வகிபாகத்தை பெறுவதற்கான வழி என்ன?

2025-01-19 15:02:55
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அவசியம்

2025-01-12 14:32:54
news-image

பொறுப்புக்கூறல் விடயத்தில் இனியும் இழுத்தடிப்பு வேண்டாம்

2025-01-05 15:33:27
news-image

புதிய அரசியலமைப்புக்கான முயற்சி உடனடியாக செயலுருப்பெற...

2024-12-29 08:58:38
news-image

அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும்

2024-12-15 22:38:25
news-image

தமிழர்கள் மீதான அக்கறையை பின்தள்ளும் பூகோள...

2024-02-12 01:49:22
news-image

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மைத்­துவ போட்­டிக்கு முடிவு கட்ட...

2024-02-04 15:03:03
news-image

தமிழ் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை...

2024-01-28 14:04:47
news-image

குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­வதை விடுத்து யதார்த்­த­பூர்­வ­மான தீர்­வுக்கு...

2024-01-21 21:05:37
news-image

நல்லிணக்கத்துக்கான அரசாங்கத்தின் முயற்சியும் யதார்த்த நிலைமையும்

2024-01-14 11:49:14