(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசாங்கத்தினால் சட்டக்கல்லூரி கல்வி நடவடிக்கைக்கு வழங்கப்படுவதில்லை. அதனால்தான் சட்டக்கல்லூரிக்கான அனுமதிக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டி ஏற்படுகிறது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றோன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விக்கு பதிவளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
சஜித் பிரேதமாச குறிப்பிடுகையில், சட்டக்கல்லூரிக்கு அனுமதிப்பதற்காக 15ஆயிரம் ரூபா அறவிடப்படும் நிலையில், பரீட்சை கட்டணமாக 1200ரூபா அறவிடுவதன் மூலமும் மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதற்கு முன்னர் சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பம் கோரி இருப்பது பிரச்சினைக்குரிய விடயமாகும். இது தொடர்பில் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், புதிய வர்த்தமானி ஒழுங்குவிதிகள் பிரகாரம் சட்டக்கல்லூரி அனுமதிக் கட்டணத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கட்டண அதிகரிப்பு மேற்கொள்வதற்கு முன்னர் சட்ட கல்வி கவுன்சிலுடன் நீண்டவகையில் கலந்துரையாடி, இது தொடர்பாக தேடிப்பார்த்தோம்.
சட்டக்கல்லூரியில் 5ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் சட்டக்கல்லூரியில் மேற்கொண்டு வருகிறது. ஆனால் சட்டக்கல்லூரிக்கு அரசாங்கத்தினால் எந்த நிதியும் வழங்குவதில்லை. சட்டக்கல்லூரிக்கு வேறு வருமான வழிகளும் இல்லை.
அதனால் மாணவர்களிடம் அறவிடப்படும் பணத்தில் இருந்தே ஒட்டுமொத்த சட்டக்கல்லூரி மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேநேரம் சட்டக்கல்லூரிக்கு தற்போது விண்ணப்பம் கோரி இருப்பது தொடர்பாக தேடிப்பார்த்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM