சட்ட ஆலோசனைக்கமைய குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்த எதிர்பார்ப்பு - விதுர விக்கிரமநாயக்க

Published By: Vishnu

21 Jul, 2023 | 04:50 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சட்ட ஆலோசனைகளுக்கு அமைய குருந்தூர் மலையை 'பௌத்த தொல்லியல் பகுதியாக 'பிரகடனப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர உரையாற்றியதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்தூர் மலை பகுதியில் பிரிவினைவாதம் மற்றும் அடிப்படையாத கொள்கையுடைய தமிழ் அரசியல்வாதிகளின் தலைமைத்துவத்தில் கடந்த 14 ஆம் திகதி அங்கு பொங்கல் பொங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் தலையீட்டினால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது.

குருந்தூர் மலை  1931 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 'பௌத்த தொல்லியல் பிரதேசம் 'என வர்த்தமானி  ஊடாக பிரகடனப்படுத்தப்பட்டது.

ஆனால் பிற்பட்ட காலங்களில் அப்பகுதில் பல ஆய்வுகள் முன்னெடுக்கப்ட்டன. இருப்பினும் குருந்தூர் மலையில் தமிழர்கள் வாழ்ந்ததற்கும், இந்து வழிபாடுகள் இடம்பெற்றதற்கும் எவ்வித சான்றுகளும் கிடைக்கப் பெறவில்லை.

இவ்வாறான பின்னணியில் குருந்தூர் மலை பகுதியில்  தமிழ் அடிப்படைவாதிகள் முரண்பாடுகளை தோற்றுவிக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் தேசிய நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும்.

பல முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில் குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதி என ஏன் இதுவரை பிரகடனப்படுத்தவில்லை என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனைகளை பெற்று இவர் ( ஜயந்த சமரவீர) முன்வைத்த யோசனையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-06-18 05:57:37
news-image

வீட்டில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

2025-06-18 03:45:48
news-image

தண்டவாளத்தில் இருந்த இளைஞர் ரயில் மோதியதால்...

2025-06-18 03:43:45
news-image

மாத்தறை வெலிகம துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட...

2025-06-18 03:37:28
news-image

தியோகுநகரிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு...

2025-06-18 03:31:18
news-image

அருண் ஹேமச்சந்திரவின் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த...

2025-06-18 03:22:24
news-image

எதிர்க்கட்சித் தலைவருக்கு நாட்டை வங்குரோத்து நிலைக்கு...

2025-06-18 03:13:35
news-image

ஆண்டு இறுதி வரையில் காத்துக்கொண்டிருக்காது நேரகாலத்துடன்...

2025-06-18 02:55:43
news-image

காரில் கடத்தி செல்லப்பட்ட 4 கிலோகிராம்...

2025-06-18 02:51:05
news-image

பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதி செய்வது...

2025-06-18 02:48:30
news-image

மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஸ்திரமான தீர்மானமொன்று...

2025-06-17 20:19:17
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2025-06-17 20:15:29