ராஜபக்ஷ, கப்ரால் வகுப்பில் பகுதியளவு கல்வி கற்றவர்கள் ரணில் வகுப்பில் பட்டம் பெற முயற்சி - எரான்

Published By: Vishnu

21 Jul, 2023 | 04:24 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் இன்று பொருளாதார மீட்சி தொடர்பில் எமக்கு பாடம் புகட்டுகிறார்கள். ராஜபக்ஷர்களின் வகுப்பில் பகுதியளவு அரசியலையும், கப்ராலின் வகுப்பில் பகுதியளவு பொருளாதாரத்தை கற்றவர்கள் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் வகுப்பில் பட்டம் பெற முயற்சிக்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தின் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நடுத்தர மக்கள் பொருளாதார பாதிப்பால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு திருத்தங்களுடன் ஆதரவு வழங்கினோம்.

மத்திய வங்கி சட்டமூலத்துக்கும் ஆதரவு வழங்கினோம்.பாரம்பரியமான எதிர்க்கட்சிகளை போல் இல்லாமல் மாறுப்பட்ட வகையில் செயற்படுகிறோம்.பாராளுமன்றத்தில்  மிளகாய் தூள்  வீசி,தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் செயற்பட்டதை போல் நாங்கள் செயற்பட போவதில்லை.

தேசிய கடன் மறுசீரமைப்பால் நடுத்தர மக்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.  அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் இலங்கை வங்கி,மக்கள் வங்கி ஆகிய இரு பிரதான அரச வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களை மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

ஆகவே வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களை முறையாக மீள பெற்றுக்கொள்ள நிதியமைச்சு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

நுண்கடன் நிதி திட்டம் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.வறுமை நிலையில் உள்ளவர்களை இலக்காக கொண்டு நுண்கடன் நிறுவனங்கள் செயற்படுகின்றன.

கடனை  திருப்பி செலுத்த முடியாதவர்களிடம் நுண்கடன் நிறுவனங்கள் பாலியல் இலஞ்சம் கோருகிறது.இந்த பிரச்சினையை 2018 ஆம் ஆண்டு நாங்கள் குறிப்பிட்டோம்.துரதிஷ்டவசமாக ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.நுண்கடன் திட்ட நிறுவனங்கள் முறையற்ற வகையில் செயற்படுவதை  துரிதப்படுத்திக் கொண்டது.

நுண்கடன் திட்டம் தொடர்பில் மத்திய வங்கி விசேட கவனம் செலுத்த வேண்டும்.மத்திய வங்கியின் சுயாதீன தன்மை கேள்விக்குள்ளாகும் போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திரதன்மையை இழக்கும் இதுவே காலம் காலமாக இடம்பெற்றுள்ளது.ஆகவே இந்நிலையை புதிய சட்டத்தின் ஊடாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெய்ரா ஏரியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய...

2025-01-24 08:12:12
news-image

முன்னாள் ஜனாதிபதிளுக்கு அரச இல்லங்களை விட்டு...

2025-01-23 16:06:37
news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48
news-image

புதிய விண்ணப்பதாரர்களுக்காக  ஒரு இலட்சத்து 25...

2025-01-23 23:56:46
news-image

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும்...

2025-01-23 23:53:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

2025-01-23 22:09:21