கல்வி கற்று அரசாங்க பணிகளை செய்வதற்கான வாய்ப்பு பெறாதவர்கள்... சுய தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று விரும்புபவர்கள்... தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டு, வாழ்க்கையை தொடர்ந்து நடத்த வேறு வழி இல்லாமல் வணிக நிறுவனத்தை அல்லது விற்பனை நிலையத்தை தொடங்கி இருப்பவர்கள்... என பலரும் தாங்கள் தொடங்கி இருக்கும் தொழில் அல்லது வியாபாரம் வெற்றி அடைய வேண்டும் என்று நாளாந்தம் இறைவனை பிரார்த்திப்பர்.
ஆனால் சிலருக்கு தொழிலில் சூட்சுமம் தெரிந்திருந்தும் மக்களின் வருகையின்மையால் நஷ்டத்தை எதிர்கொள்ள தொடங்குவர். சிலருக்கு லாபத்தின் பங்கு குறைய தொடங்கும்.
வேறு சிலர் வேறு வழி தெரியாமல் தொடர்ந்து நட்டத்தில் இயக்கி வருவர். இவர்கள் அனைவரும் வெற்றி பெறுவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் நாளாந்தம் மேற்கொள்ள வேண்டிய எளிய வழிமுறையினை முன்மொழிந்திருக்கிறார்கள்.
வெள்ளிக்கிழமைகள் அல்லது பௌர்ணமி தினத்தன்று பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால் வெற்றிலை பாக்கு பாயாசம் கற்கண்டு பழங்கள் ஆகியவற்றை, உங்களது வணிகநிலையத்தில் இருக்கும் மகாலட்சுமி புகைப்படத்திற்கு முன் வைத்து வழிபட வேண்டும்.
இதன் போது விளக்கேற்றி 'ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே! உன் முழு உருவத்துடன் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்துடன் இத்தீபத்தில் எழுந்தருளி எம்முடைய நிதி தேவைகளை பூரணமாக பூர்த்தி செய்யும் அளவிற்கு வளமான வாழ்வை தந்த அருள வேண்டும்' என பிரார்த்தித்துக் கொண்டு தீபத்தை ஏற்றி வணங்க வேண்டும்.
பிறகு தீபம் குளிர்ந்ததும் அல்லது குளிர்விக்கப்பட்டதும் அந்த திரியில் இருக்கும் கருக்கை சிறிதளவு நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். இது எதிர்பார்த்த பலனை தரும்.
இந்த கருக்கை நெற்றியில் வைக்கும் தருணத்தில் மனதில்,
'ஸ்ரீ சுக்ல மகாசுக்ல
நவாங்கே ஸ்ரீ மகாலட்சுமி
நமோ நமஹ'
என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொள்ள வேண்டும்.
இதனை நாளாந்தம் ஒருமுகமான மனதுடன் உச்சரிக்கும் போது, உங்களுடைய வணிக நிறுவனம் மற்றும் விற்பனை நிலையத்திற்கு நாலா திசைகளிலிருந்தும் ஜன வசியமும், தன வசியமும் ஏற்பட்டு, உங்களுடைய வியாபாரமும், லாபமும் செழிக்கும்.
இந்த சூட்சமத்தை வட இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற பகுதியில் உள்ள வணிகர்கள் பின்பற்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதனை நாமும் பின்பற்றி வணிகத்தில் வெற்றி கண்டு லாபம் பெறுவோம்.
தொகுப்பு சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM