ஜனாதிபதி ரணில் இன்று டெல்லி விஜயம்

Published By: Digital Desk 3

20 Jul, 2023 | 10:35 AM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை இந்தியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இது அமைந்துள்ளன.

தனது டெல்லி விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய ஜனாதிபதி  திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தை மையப்படுத்தி 5 முக்கிய ஒப்பந்தங்களும் கைசாத்திடப்படவுள்ளன. 

புதுப்பிக்கதக்க ஆற்றல் சக்தி, இரு நாடுகளுக்கு இடையில் கடலூடான எரிபொருள் குழாய் மற்றும் மின்சார கேபில் இணைப்புகளை ஏற்படுத்தல், திருகோணமலையில் பொருளாதார வலயம்,  மருந்து பொருட்களை நேரடியாக கொள்வனவு செய்தல், பால் உற்பத்தி ஆகியவை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களே இவ்வாறு கைச்சாத்திடப்பட உள்ளன.  

கடந்த 10ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார செயலர் வினய் மோகன் குவத்ரா குறித்த 5 ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்ததுடன், இலங்கை - இந்திய நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் இருதரப்பு பொருளாதாரத உறவுகளை மேம்படுத்தும் வகையிலுமே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்த விஜயமானது இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் சாதகமான மாற்றத்துக்கான ஒரு புள்ளியாக அமையும் என்றும், இந்தியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அன்பான வரவேற்பு காத்திருக்கிறது என்றும் வெளிவிவகார செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறப்பு அதிரடிப்படையினரால் ரூ.35 மில்லியன் மதிப்புள்ள...

2025-06-20 19:29:53
news-image

மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-06-20 18:44:35
news-image

முதலீடுகளை ஈர்ப்பதற்கு புதிய வழிமுறையில் கவனம்...

2025-06-20 18:31:53
news-image

புதைக்கப்பட்ட எம்மவர் உயிருக்கு நீதிவேண்டும்-செம்மணியில் போராட்டம்

2025-06-20 20:04:10
news-image

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்:...

2025-06-20 18:25:28
news-image

கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த சந்தேக...

2025-06-20 17:37:13
news-image

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர் தம்புத்தேகம மத்திய...

2025-06-20 17:47:41
news-image

முல்லைத்தீவு- உடையார்கட்டில் காலாவதியான பொருட்கள் விற்பனை...

2025-06-20 17:47:04
news-image

சட்டவிரோத தொழிலாளர்களின் அடாவடித்தனத்தை கண்டித்தல் தொர்பான...

2025-06-20 17:18:43
news-image

தேசபந்து தென்னக்கோன் சார்பில் 28 சாட்சியாளர்கள்...

2025-06-20 17:13:06
news-image

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் போதைப்பொருளுடன்...

2025-06-20 16:36:42
news-image

சபாநாயகரை சந்தித்தார் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்

2025-06-20 17:09:00