மலையக மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பில் விவாதம் நடத்த தயார் - இராதாகிருஷ்ணன் எம்.பிக்கு அமைச்சர் ரமேஷ் பத்திரண பதில்

Published By: Digital Desk 3

19 Jul, 2023 | 03:28 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டுமென்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பியுமான வீ.இராதாகிருஷ்ணன் சபையில் கோரிக்கை விடுத்த நிலையில் அந்த விவாதத்திற்கு தாம் இணங்குவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (19) பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இராதாகிருஷ்ணன் எம்.பி இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக  அவர் கூறுகையில்,

தோட்டப்புறங்களில் பல பிரச்சினைகள் உள்ளன. அவை தொடர்பில் சபையில் ஒருநாள் விவாதமொன்றை நடத்த நாளொன்றை வழங்குங்கள். தோட்ட நிர்வாக பிரச்சினைகள் உள்ளன. அங்குள்ளவர்கள் சிறிய அறையொன்றை அமைக்கும் போது அவர்களை அங்கிருந்து வெளியேற்றுகின்றனர். இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்களும் செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் அடுத்த வாரத்தில் இது தொடர்பில் விவாதத்திற்கு நாளொன்றை வழங்குங்கள் என்றார்.

இதன்போது, சபையில் இருந்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்  ரமேஷ் பத்திரன பதிலளிக்கையில்,

நீங்கள் கூறும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் தலையீடுகளை செய்கின்றோம். அதேபோன்று நீங்கள் கோரும் விவாதத்திற்கும் நாங்கள் இணங்குகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தில் மக்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த எதிர்க்கட்சித்...

2025-01-16 13:51:26
news-image

அரசியல் பழிவாங்கலுக்காக எதிரணியினர் கைது செய்யப்படலாம்...

2025-01-16 16:43:57
news-image

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கு முழுமையாக...

2025-01-16 22:20:40
news-image

அரசாங்கம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்...

2025-01-16 20:15:08
news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54