பலஸ்தீனம் சுயாதீன நாடாக எழுவதற்கு உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் - மஹிந்த

Published By: Dinesh Silva

18 Jul, 2023 | 09:51 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பலஸ்தீனம் சுயாதீன நாடாக எழுவதற்கு சட்டப்படியான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தாம் தொடர்ந்தும் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி  வேளையில் கிங்ஸ் நெல்சன் எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பலஸ்தீனத்தில் ஏழு தசாப்தங்களாக நிலவும் பிரச்சினையால் ஆயிரக்கணக்கான உயிர்களை அந்த நாடு இழந்துள்ளதுடன் மேலும் ஆயிரக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

சிறுவர்கள் முதல் அனைவரும் இந்த மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமளவான மக்கள் இன்னும் அகதிகளாகவே வாழ்கின்றனர்.அந்த அகதி முகாம்களை இலக்கு வைத்து தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன. 

இதனை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு உலக நாட்டுத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அது தொடர்பில் இங்கே கலந்துரையாட வேண்டியது எமது கடமையாகும்.

பலஸ்தீனத்தை ஒரு நாடாக இலங்கை 1988 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டது. அப்போதிலிருந்து இலங்கை அந்நாட்டு மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றது.

ஐ.நா மாநாட்டில் அரச தலைவராக உரையாற்றிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் அந்த மக்களுக்காக குரல் எழுப்பியுள்ளதுடன் அவர்களுக்கு உதவிகளையும் வழங்கியுள்ளோம். 

பலஸ்தீனம் சுயாதீன நாடாக எழுவதற்கு சட்டப்படியான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் தொடர்ந்தும் உள்ளோம்.அந்த மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதனையும் நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-19 12:20:01
news-image

இலங்கை அரசியலுக்கு மகா சங்கத்தின் வழிகாட்டுதலும்...

2025-03-19 12:08:33
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு வைபவம் ஆரம்பம்...

2025-03-19 12:24:56
news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36