அமைச்சர் பதவி விலக வேண்டும் - சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உண்ணாவிரத போராட்டம்

Published By: Vishnu

18 Jul, 2023 | 09:36 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள அழிவுக்கு சுகாதார அமைச்சர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர்  உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சுகாதார அமைச்சுக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (18) மதியம் முதல் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த உண்ணாவிரதத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டிருந்தனர். 

இதேவேளை இவர்கள் சுகாதார அமைச்சுக்கு முன்பாக உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க முயன்ற போது பொலிஸாரினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த இலஞ்சம், ஊழல், வீண் விரையத்திற்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார கூறுகையில்,

நாட்டு மக்கள் உயிரிழப்பது இவர்களுக்கு தெரியவில்லை. அதற்காக நாம் குரல் கொடுக்கும் போது பொலிஸார் தலையிட்டு சண்டித்தனம் காட்டுகிறார்கள். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரப்பிரச்சினையால் வெளியேறினார்.

சுகாதார பிரச்சினையால் உங்களுக்கு செல்ல வேண்டி ஏற்படும். இதனை ஜனாதிபதிக்கு கூறிக்கொள்கிறோம். சுகாதார அமைச்சர் பதவி விலக வில்லை என்றால் ஜனாதிபதி அவரை உடனடியாக பதவி நீக்க வேண்டும். நீங்கள் நீக்கவில்லை என்றால் அவர் வீடு செல்வதற்கான ஆரம்ப கட்டமாக இது அமையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விபத்தில் காயமடைந்த இளங்குமரன் எம்.பியை பார்வையிட்ட...

2025-02-16 10:55:45
news-image

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட உள்ளடக்கம்...

2025-02-16 10:12:56
news-image

இரத்தினபுரி - குருவிட்ட பகுதியில் கொள்ளையடித்த...

2025-02-16 10:08:34
news-image

இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கும்...

2025-02-16 09:48:30
news-image

புதன்கிழமை இலங்கை வரும் இன விவகாரங்களுக்கான...

2025-02-16 09:42:59
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது கடினம்...

2025-02-16 09:22:20
news-image

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் விரைவில் மீட்கப்படுவர்...

2025-02-16 09:13:12
news-image

அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்...

2025-02-16 09:11:44
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை...

2025-02-15 17:53:42
news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த...

2025-02-15 17:54:48
news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25