தலைமைத்துவத்தை பொதுஜன பெரமுனவுக்கு வழங்குவது பாராளுமன்றத்தை அவமதிப்பதாகும் - ஹர்ஷன ராஜகருண

Published By: Vishnu

18 Jul, 2023 | 05:35 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நிதி வங்குரோத்து தொடர்பில் ஆராய சாகர காரியவசம் தலைமையில் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு  தற்போது வங்குரோத்து அடைந்துள்ளது.

தெரிவுக்குழுவின் தலைவர் பதவியை பொதுஜன பெரமுனவுக்கு வழங்குவது பாராளுமன்றத்தை அவமதிப்பதாக கருதப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நிதி வங்குரோத்து தொடர்பில் ஆராய பாராளுமன்றத்தில் விசேட தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்திட்டு வலியுறுத்தினோம்.

தெரிவுக்குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

எமது கோரிக்கைக்கு அமைய நிதி வங்குரோத்து நிலை  தொடர்பில்  ஆராய தெரிவுக்கு நியமிக்கப்பட்டது.

ஆனால் தெரிவுக்குழுவின் தலைவர் பதவி வங்குரோத்துக்கு பொறுப்புக் கூற வேண்டிய  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தெரிவுக்குழு நியமனத்தில் நேர்ந்துள்ள தவறை திருத்திக் கொள்ளும்  வாய்ப்பு சபாநாயகருக்கு உண்டு.

பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையில் நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வங்குரோத்து தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு தற்போது வங்குரோத்து அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த தெரிவுக்குழுவை புறக்கணித்துள்ளனர்.

நிதி  வங்குரோத்து தொடர்பில் ஆராயும் தெரிவுக்குழுவில் தலைவர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் அதனை விடுத்து தலைவர் பதவியை பொதுஜன பெரமுனவுக்கு வழங்குவது பாராளுமன்றத்தை அவமதிப்பாக கருதப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41