முறைப்பாடு தொடர்பில் இங்கிரிய பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தவர் திடீர் மரணம்!

18 Jul, 2023 | 11:09 AM
image

முறைப்பாடு ஒன்று  தொடர்பில் இங்கிரிய பொலிஸ் நிலையத்துக்கு  அழைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து   நேற்றிரவு (17) இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்ததாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  நிஹால் தல்துவ தெரிவித்தார்.   

42 வயதுடைய வஜிரா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்  இங்கிரிய பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளருடன் சில ஆவணங்கள் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதன்போது அவர் வர்த்தகரை  கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பில் வர்த்தகர் இங்கிரிய பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம்,  அவர் வரவழைக்கப்பட்டு, எதிர்காலத்தில் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னர்  அவர் திடீரென நோய்வாய்ப்பட்டு  இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்படுகொலைக்கு எதிரான கருத்தை அமைச்சர் விஜித...

2025-05-23 17:58:41
news-image

கொழும்பில் ஆட்சி அமைக்க அரசாங்கத்துக்கு ஆதரவு...

2025-05-23 17:54:50
news-image

நீர் கட்டண அதிகரிப்பு குறித்து கலந்துரையாடவில்லை...

2025-05-23 16:57:10
news-image

தமிழின அழிப்பு விவகாரத்தில் கனடாவின் ஆதரவுக்...

2025-05-23 19:54:15
news-image

மூடப்பட்ட நெக்ஸ்ட் நிறுவனம் : ஊழியர்களின்...

2025-05-23 17:50:41
news-image

சர்வதேச நாணய நிதியம் குறித்த வாக்குறுதிகளை...

2025-05-23 16:51:08
news-image

வவுனியாவில் வெடிமருந்துகள் மற்றும் சிறப்புப் படை...

2025-05-23 19:09:15
news-image

புத்தளம் - மன்னார் வீதியை மீண்டும்...

2025-05-23 17:37:15
news-image

முக்கிய அரச பதவிகளில் தேசிய மக்கள்...

2025-05-23 16:57:44
news-image

பாராளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு பாராளுமன்ற...

2025-05-23 16:29:28
news-image

அரச வெளிநாட்டுக் கடன்களில் 20 ரில்லியனுக்கு...

2025-05-23 16:29:01
news-image

''சஞ்சாரக உதாவ 2025” ஜனாதிபதி தலைமையில்...

2025-05-23 16:28:33