பௌத்தத்துக்கு சாபக்கேடு

Published By: Vishnu

16 Jul, 2023 | 04:57 PM
image

கார்வண்ணன்

அண்மைக் காலத்தில் சமூக ஊட­கங்­களில், காவி அணிந்த மூன்று பௌத்த பிக்­குகள் தொடர்­பான காணொ­ளிகள் அதி­க­ளவில் பகி­ரப்­பட்­டன.

விகா­ரையில் உள்ள அறைக்குள் தாயும், மக­ளு­மான இரண்டு பெண்­க­ளுடன் இருந்த போது, அகப்­பட்ட பல்­லே­கம சுமண தேரர் தொடர்­பான காணொளி முத­லா­வது.

புத்தர் கூறிய பரி­நிர்­வாண நிலைக்கு மாறாக- பௌத்த தர்­மத்­துக்கு விரோ­த­மாக பெண்­க­ளுடன் நிர்­வாண நிலையில் இருந்த பல்­லே­கம சுமண தேரரை சிலர் விகா­ரைக்குள் புகுந்து தாக்கி, காணொளி எடுத்து சமூக ஊட­கங்­களில் பகிர்ந்­தி­ருந்­தனர்.

பௌத்த பிக்­குவை அம்­ப­லப்­ப­டுத்­து­வது என்ற போர்­வையில், சிலர் நடந்து கொண்ட முறை அதை­விடக் கேவ­ல­மா­னது. குறித்த பெண்­களின் தனிப்­பட்ட சுதந்­திரம், மனித உரி­மை­கள் அப்­பட்­ட­மாக மீறப்பட்டது.

அதே­வேளை, தமி­ழ­ருக்­கெ­தி­ராக இன­வாதம் கக்­கிய பிக்­கு­களில் ஒரு­வ­ரான பல்­லே­கம சுமண தேரரின் மறு முகத்தை  தேர­வாத பௌத்­தத்தை பின்­பற்றும் மக்கள் மத்­தியில் அம்­ப­லப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது அந்தக் காணொளி என்­பதில் சந்­தேகம் இல்லை.

ஜப்­பானில் ஓர் இளை­ஞ­னுடன் பாலியல் உறவு கொள்ள முயன்­ற­தாகக் கூறப்­படும் மாகல்­கந்தே சுதந்த தேர­ருடன் மக்கள் வாக்­கு­ வா­தப்­படும் காணொ­ளியும் அண்­மையில் வெளி­யா­னது.

சிங்­கள ராவய அமைப்பின் பொதுச் செய­லா­ள­ரான மாகல்­கந்தே சுதந்த தேரர், தமி­ழ­ருக்கு எதி­ரான இன­வாதச் செயற்­பா­டு­களில் மாத்­தி­ர­மன்றி, சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வாதச் செயற்­பா­டு­க­ளிலும் ஈடு­பட்­டவர்.

பொது பல­சே­னாவின் பொதுச்­செ­யலர் கல­கொ­ட­ அத்தே ஞான­சார தேர­ருடன் இணைந்து செயற்­ப­டு­கின்­றவர்.

அவர் ஜப்­பானில் இவ்­வா­றா­ன­தொரு சம்­ப­வத்தில் சிக்­கி­யி­ருப்­பது, தேர­வாத பௌத்­தத்தைப் பின்­பற்­று­வோ­ருக்கு மாத்­தி­ர­மன்றி சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கும் தலை­கு­னிவை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

மூன்­றா­வது காணொளி, மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரையின் விகா­ரா­தி­பதி, அம்­பிட்­டியே சுமண தேரர் தொடர்­பா­னது.

பொலி­ஸ­ருடன் வாக்­கு­வாதம் செய்யும் அவர், திடீ­ரென தன் முன்­பாக நின்ற பொலிஸ் அதி­காரி ஒரு­வரின் முகத்தில் குத்தி தாக்­கு­கிறார். அம்­பிட்­டியே சுமண தேரரின் வர­லாற்றை அறிந்­த­வர்­க­ளுக்கு இது ஆச்­ச­ரி­ய­மில்லை.

ஏனென்றால் கடந்த காலங்­களில் அவர் பல தடவை பொலி­ஸாரை தாக்க முயன்­றி­ருக்­கிறார். தூற்­றி­யி­ருக்­கிறார். ஆவே­ச­மாக நடந்து கொண்­டி­ருக்­கிறார்.

மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக இருந்த போது, மட்­டக்­க­ளப்­புக்கு சென்­றி­ருந்த வேளையில்  அவர் தன்னை வந்து சந்­திக்­க­வில்லை என்­ப­தற்­காக, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் திரை­நீக்கம் செய்­யப்­பட்ட கல்­வெட்டு ஒன்றை சுத்­தி­யலால் அடித்து உடைத்­தவர் அம்­பிட்­டியே சுமண தேரர்.

அது­போல, தமி­ழர்­களின் காணி­களை அப­க­ரிப்­ப­திலும், இன­வாத செயற்­பா­டுகள் போராட்­டங்­க­ளிலும் சண்­டித்­தனம் செய்து வரு­பவர் அவர். இந்த மூன்று காணொ­ளி­க­ளாலும் சர்ச்­சையில் சிக்­கி­யி­ருக்கும் பௌத்த பிக்­கு­களை, அர­சியல் பிக்­குகள் என்று குறிப்­பிட்­டி­ருக்­கிறார் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் மனோ கணேசன்.

இவர்கள் பௌத்த மதத்தை போதிக்கும், பௌத்­தர்­க­ளுக்கு வழி­காட்டும், அவர்­களை வழி­ந­டத்தும் துற­வி­க­ளாக இருந்­தி­ருந்தால், தமி­ழர்கள் அவர்­களைப் பற்றி விமர்­சிக்கும் நிலைக்குச் சென்­றி­ருக்­க­மாட்­டார்கள்.

மாறாக, இவர்கள் மூவரும், தமி­ழ­ருக்கு எதி­ரான இன­வாத உணர்­வு­களை கிளப்பி வரு­ப­வர்கள். தமி­ழரின் நிலங்­க­ளையும் உரி­மை­க­ளையும் அப­க­ரிக்கும் எண்ணம் கொண்­ட­வர்கள். தமி­ழ­ருக்கு எதி­ரான திட்­ட­மிட்ட சிங்­கள பௌத்த பேரி­ன­வாத நிகழ்ச்சி நிரலை முன்­னெ­டுத்துச் செல்­ப­வர்கள்.

அதனால் இந்த மூவரின் நடத்­தைகள் தொடர்­பான காணொ­ளிகள் தமிழர் மத்­தியில் அதிக பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருப்­பது ஆச்­ச­ரி­ய­மில்லை. நாடா­ளு­மன்­றத்தில் சரத் வீர­சே­கர,இது சிங்­கள பௌத்த நாடு என்­பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று தமிழ் நீதி­ப­தியை எச்­ச­ரிக்­கிறார்.

ஆனால், சிங்­கள பௌத்­தத்தை போதிக்கும் பௌத்த பிக்­கு­களில் சிலர், தாம் சார்ந்த பௌத்த மதத்­தையே இன்று சந்தி சிரிக்கும் நிலைக்கு கொண்டு வந்­தி­ருக்­கி­றார்கள்.

பௌத்த மதத்தை கேவ­லப்­ப­டுத்து­ப­வர்கள் வேறெ­வரும் அல்ல. அதனைப் பின்­பற்­று­ப­வர்கள் தான், அந்த மதத்தின் புனி­தத்தை கெடுக்­கி­றார்கள். அதன் உண்­மை­யான போத­னை­களை நிந்­திக்­கி­றார்கள்.

பௌத்தம் அன்­பையும் அறத்­தையும் போதிக்கும் மதம். ஆனால், இலங்­கையின் வர­லாற்றில், தமி­ழ­ருக்கு எதி­ரான அநீ­தி­க­ளுக்கும் குரோ­தங்­க­ளுக்கும் வழி­காட்­டி­யாக இருந்­தது பௌத்த பிக்­கு­களும், பௌத்த பீடங்­களும் தான்.

பௌத்த மதத்தில் மூன்று பிர­தான பிரி­வுகள் உள்­ளன. தேர­வாத பௌத்தம், மகா­யான பௌத்தம், வஜ்­ர­யான பௌத்தம் ஆகி­ய­னவே அந்த மூன்று பிரி­வுகள்.

இலங்­கையில் பிர­தா­ன­மாக பின்­பற்­றப்­ப­டு­வது தேர வாத  பௌத்தம். இது புத்­தரின் வழி­களை அப்­ப­டியே பின்­பற்­று­வது. அவ­ரது காலத்தில் துற­வறம் எவ்­வாறு பின்­பற்­றப்­பட்­டதோ அது­போன்று கடைப்­பி­டிக்கும் முறை.

உலகில் தேர­வாத பௌத்­தத்தின் தலை­மை­ய­க­மாக இலங்­கையே விளங்­கு­கி­றது.

இந்த பௌத்த மார்க்­கத்தைப் பின்­பற்றும் பௌத்த பிக்­கு­க­ளுக்கு பல கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

பாலியல் உற­வு­களை-, ஆசை­களை துறக்க வேண்டும். திருடக் கூடாது. எந்தச் சிறிய உயி­ருக்கும் தீங்கு விளை­விக்கக் கூடாது. இயற்­கைக்கு மாறான எந்த அருஞ்­செ­ய­லையும் தன்னால் செய்ய முடியும் என காட்டக் கூடாது.

துற­வ­றத்தில் புத்­தா­டை­களை அணியக் கூடாது. பழந்­து­ணி­க­ளையும், பிணங்­களைப் போர்த்­திய ஆடை­க­ளை­யுமே உறங்­கு­வ­தற்கு பயன்­ப­டுத்த வேண்டும். கந்­த­லா­டை­களைக் கூட மூன்­றுக்கு மேல் வைத்­தி­ருக்க கூடாது, வரு­மானம் ஈட்ட முயற்­சிக்கக் கூடாது, வீடு­களில் பிச்சைப் பாத்­திரம் ஏந்திச் சென்றே உண­வ­ருந்த வேண்டும் என்று கட்­டுப்­பா­டுகள் உள்­ளன.

ஆனால், இந்த வழி­களை பின்­பற்­று­கின்ற பௌத்த பிக்­குகள் நாட்டில் எத்­தனை பேர் உள்­ளனர்? பௌத்த பிக்­குகள் அறத்­தையும், அன்­பையும், போதித்த காலம் போய், இன­வா­தத்­தையும், இனக்­கு­ரோ­தத்­தையும் தூண்டி விட்­டது தான் வர­லாறு.

இப்­போது, அவர்­களின் பாலியல் நடத்­தைகள் பௌத்த மதத்தின் சிறப்­பி­யல்­பு­க­ளையே கேள்­விக்­குட்­ப­டுத்­து­கி­றது.

தேர­வாத பௌத்தம் துற­வ­றத்தில் உள்ள பௌத்த பிக்­கு­களின் பாலியல் இச்­சை­க­ளையும் தடை செய்­கி­றது. அதே­வேளை தென்­கி­ழக்­கா­சிய நாடு­களில் பின்­பற்­றப்­படும் மகா­யான பௌத்­தத்தில், பௌத்த பிக்­கு­க­ளுக்கு இந்த தடை இல்லை.

உலகில் மகா­யான பௌத்தம் தான், 53 வீத­மா­னோரால் பின்­பற்­றப்­ப­டு­கி­றது. தேர­வாத பௌத்­தத்தை, 36 வீத­மா­ன­வர்­களும், வஜ்­ர­யான பௌத்­தத்தை 6 வித­மா­ன­வர்­களும் பின்­பற்­று­வ­தாக கூறு­கி­றது ஆய்வு.

மகா­யான பௌத்தம் புத்தர் அழி­வற்­றவர் என்­கி­றது. போதி­சத்­து­வர்கள் மீது நம்­பிக்கை கொள்­கி­றது. இதுவே பிர­தான பௌத்த மார்க்கம் என்றும் கூறு­கி­றது.

இப்­போது இலங்­கையில் ஏக­போ­கத்தைக் கொண்­டி­ருக்கும் தேர­வாத பௌத்­தத்தைக் கடைப்­பி­டிப்­ப­வர்கள், கோட்­பாட்டு ரீதி­யான பிளவு ஒன்றை நோக்­கியும் செல்லத் தொடங்­கி­யுள்­ளனர். கத்­தோ­லிக்க மதத்தில் துறவு சார்ந்த வாழ்க்கை நெறி வலி­யு­றுத்­தப்­பட்­டதால், பிள­வுகள் தோன்­றின.

அதே­நிலை இப்­போது தேர­வாத பௌத்­தத்­துக்கும் ஏற்­ப­டு­கின்ற நிலை தோன்­றி­யி­ருக்­கி­றது. பௌத்த பிக்­குகள் பலரின் பாலியல் நடத்­தைகள், அவர்கள் தேர­வாத பௌத்­தத்தில் நீடிப்­ப­தற்கு தகு­தி­யற்ற நிலையை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

அவ்­வாறு வெளி­யேற்­றப்­படும் பௌத்த பிக்­குகள், மகா­யான பௌத்­தத்தை ஆத­ரிக்கத் தலைப்­படக் கூடும்.அது இலங்கையில் தேரவாத பௌத்தம் சிதைவடையும் நிலைக்கு வித்திடலாம்.

இது ஒரே நாளில் நடந்து விடக் கூடியதல்ல. படிப்படியாக நடந்தேறலாம்.

காலமாற்றமும், பராயமடையாத- குழந்தைப் பருவத்திலேயே துறவறத்துக்குள் தள்ளப்படுவதும், துறவறத்தை சரியாகப் பின்பற்ற முடியாமல் போவதும், இந்த நிலையை தோற்றுவிக்கும்.

இலங்கையில் பௌத்த மதம், அமைதி, சாந்தி, அன்பு போன்றவற்றுக்குப் பதிலாக வன்முறைகளையும், தமிழருக்கு எதிரான வன்மங்கள், குரோதங்களையும், ஆக்கிரமிப்பையுமே கற்றுக் கொடுத் திருக்கிறது.  தங்களைப் பின்பற்றும் பௌத்தர்களுக்கும் போதித்திருக்கிறது.

இதுதான் இன்றைய இலங்கையின் சீரழிவுக்கு வித்திட்டது. தமிழருக்கு எதிரான பேரினவாதச் செயற்பாடுகளின் எதிர்விளைவுகள் இப்போது தேரவாத பௌத்தத்துக்கே சாபமாக மாறிக் கொண்டி ருக்கிறது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right