பூகோள அரசியலும் ரணிலின் பயணமும்

Published By: Vishnu

16 Jul, 2023 | 04:46 PM
image

ஹரி­கரன்

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இந்­தியப் பய­ணத்தின் போது, எரி­சக்தி, மின்­சக்தி மற்றும் துறை­முகத் திட்­டங்கள் குறித்து, கலந்­து­ரை­யா­டல்கள் நடத்­தப்­படும் என்று வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி கூறி­யி­ருக்­கிறார்.

இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர் வினய் மோகன் குவாத்ரா, கொழும்பு வந்து இறங்­கு­வ­தற்கு முன்னர், அலி சப்ரி கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் இதனைக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஜனா­தி­பதி ரணில் விக்கி­ர­ம­சிங்­கவின் இந்­தியப் பயணம் தொடர்­பான ஒழுங்­கு­களை மேற்­கொள்­வ­தற்­காக, கொழும்பு வந்த வினய் மோகன் குவாத்ரா தனது பய­ணத்தின் முடிவில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில், இலங்கை,- இந்­தியா இடை­யி­லான உறவில் நேர்­ம­றை­யான மாற்றம் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக கூறி­யி­ருந்தார்.

பத­வி­யேற்று ஒரு வரு­டத்­துக்குப் பின்னர் இந்­தி­யா­வுக்குச் செல்லும் ரணில் விக்­கிர­ம­சிங்­க­விடம், புது­டெல்லி பல விட­யங்­களை எதிர்­பார்க்­கி­றது என்­பது தெளி­வாகத் தெரி­கி­றது.

ரணில் விக்கி­ர­ம­சிங்­கவின் இந்­தியப் பய­ணத்தை பய­னுள்­ள­தா­கவும் வெற்­றி­க­ர­மா­ன­தா­கவும் மாற்­று­வ­தற்­கான பேச்­சுக்­களை முன்­னெ­டுக்­கவே இந்­திய வெளி­வி­வ­காரச் செய­லாளர் கொழும்பு வந்­தி­ருந்தார். இது இரண்டு தரப்­பு­க­ளுக்­கு­மி­டை­யி­லான பேச்சு நிகழ்ச்சிநிரலை இறுதி செய்து, முக்­கி­ய­மான உடன்­பா­டு­களை எட்­டு­வ­தற்­கான ஒரு நட­வ­டிக்­கை­யாகத் தெரி­கி­றது.

1987இல், இந்­திய- இலங்கை உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­ப­டு­வ­தற்கு முன் னர், இந்­திய வெளி­வி­வ­காரச் செய­லாளர் மேனன் பல­முறை கொழும்­புக்குப் பயணம் மேற்­கொண்டு, அப்­போ­தைய இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்­தியின் கொழும்புப் பய­ணத்­துக்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்தார்.

அதே­போன்று தான் தற்­போது, இந்­திய வெளி­வி­வ­காரச் செய­லாளர் கொழும்பு வந்­தி­ருக்­கிறார். ரணில் விக்­கி­ர­ம­சிங்க எத்­த­கைய தயார்­ப­டுத்­தல்­க­ளுடன் வர­வேண்டும் என்­பதை திட்­ட­வட்­ட­மாக தெரி­விப்­பது தான் அவ­ரது இலக்கு எனக் கரு­தப்­ப­டு­கி­றது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை புது­டெல்­லிக்கு அழைப்­ப­தற்கு இந்­தியா பல்­வேறு நிபந்­த­னை­களை விதித்­தி­ருப்­ப­தாக கொழும்பு அர­சியல் வட்­டா­ரங்­களில் பல வாரங்­க­ளா­கவே பேச்சு அடி­பட்டுக் கொண்­டி­ருந்­தது.

அதா­வது, இந்­தி­யாவின் திட்­டங்­க­ளுக்கு காணப்­ப­டு­கின்ற இடை­யூ­று­களை களைதல், சீனாவின் ஆதிக்­கத்­துக்கு முட்­டுக்­கட்டை போடுதல், தமிழர் பிரச்­சி­னைக்­கான தீர்வு போன்ற விட­யங்­களில் இந்­தியா வாக்­கு­று­தி­களை எதிர்­பார்க்­கி­றது. இந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு கொழும்­புக்கு நிபந்­த­னை­களை விதிப்­ப­தா­கவும், அழுத்­தங்­களைக் கொடுப்­ப­தா­கவும் கூறப்­பட்­டது.

மாகாண சபைத் தேர்­தல்­களை அறி­விக்க வேண்டும், என்­பதும் அவ்­வா­றான நிபந்­த­னை­களில் ஒன்­றாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

ஆனால், மாகா­ண­சபைத் தேர்­தல்­களை நடத்­து­வ­தற்­கான எந்த அறி­விப்­பையும் வெளி­யி­டாமல், 13 ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான எந்த ஏற்­பாட்­டையும் முன்­னெ­டுக்­கா­ம­லேயே ரணில் விக்­கி­ர­ம­சிங்க புது­டெல்­லியில் சென்று இறங்கப் போகிறார்.

இது ரணில் விக்கி­ர­ம­சிங்க விட­யத்தில் இந்­தி­யாவின் எதிர்­பார்ப்பு பொய்த்துப் போயி­ருப்­பதைக் காட்­டு­கி­றதா அல்­லது, இந்­தி­யாவின் நிபந்­த­னைகள் தொடர்­பாக பர­விய கதைகள் உண்­மைத்­தன்­மை­யற்­ற­வையா என்ற கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளது.

எவ்­வா­றா­யினும், ரணில் விக்கிர­ம­சிங்­கவின் இந்தப் பயணம், பூகோள அர­சி­ய­லுடன் நெருங்­கிய தொடர்பு கொண்­டது என்­பதில் சந்­தேகம் இல்லை.

இலங்­கையும் இந்­தி­யாவும் அண்டை நாடுகள். நீண்­ட­கால கலா­சார, வாழ்­வியல் தொடர்­பு­களைக் கொண்ட நாடுகள்.

இவ்­வா­றான இரண்டு நாடு­க­ளுக்­கி­டையில் தலை­வர்கள் பயணம் மேற்­கொள்­வதில் என்ன பூகோள அர­சியல் இருக்கப் போகி­றது எனக் கேள்வி எழுப்­பு­வோரும் உளர்.

இலங்­கையின் ஒவ்­வொரு அர­சியல், இரா­ஜ­தந்­திர, இரா­ணுவ நகர்­வு­க­ளிலும்- பூகோள அர­சியல் இருக்­கி­றது. பூகோள அர­சி­யலின் தாக்கம் எதி­ரொ­லிக்­கி­றது.

இலங்­கையின் அமை­விட முக்­கி­யத்­துவம் தான், இந்தப் பூகோள அர­சியல் சூதாட்­டத்தின் மைய­மாக விளங்­கு­கி­றது. இந்த அமை­விட முக்­கி­யத்­துவம் இல்­லை­யென்றால், இந்­தி­யாவோ, சீனாவோ, அமெ­ரிக்­காவே எட்­டியும் பார்க்­காது.

இந்­தி­யா­வுக்குத் தெற்­காக, மிக அண்­மையில் அமைந்­தி­ருக்­கின்ற இந்த தீவை தங்­களின் கைக்குள் போட்டுக் கொள்­வதன் மூலம், இந்­தி­யாவின் மீது பொரு­ளா­தார ரீதி­யாக மாத்­தி­ர­மன்றி பாது­காப்பு ரீதி­யா­கவும் அழுத்­தங்­களைக் கொடுக்­கலாம் எனச் சிந்­திக்­கி­றது சீனா.

இந்­தி­யாவை பொரு­ளா­தார மற்றும் பாது­காப்பு ரீதி­யாக சுற்­றி­வ­ளைத்தல் என்ற சீனாவின் வியூ­கத்­துக்குள் இலங்­கையை ஒரு பாத்­தி­ர­மாக மாற்றும் முயற்­சி­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

இந்த வியூ­கத்­துக்குள் இலங்கை எந்த இடத்தில் இருக்கப் போகி­றது என்­பதை தீர்­மா­னிப்­பதில் ரணில் விக்­கிர­ம­சிங்­க வின் இந்­தியப் பயணம் கணி­ச­மான தாக்கம் செலுத்தும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

பொரு­ளா­தார நெருக்­க­டிக்குப் பிந்­திய இலங்­கையில், அதா­வது ரணிலின் தலை­மைத்­துவம் உறுதி செய்­யப்­பட்ட இலங்­கையில், இந்­தியா- சீனா என்ற இரண்டு போட்டி நாடு­க­ளையும், அமெ­ரிக்கா- ரஷ்யா என்ற இரண்டு வல்­ல­ர­சு­க­ளையும், எவ்­வாறு கையா­ளு­வது என்ற தீர்க்­க­மான முடி­வு­களை எடுக்க வேண்­டிய கட்டம் இது­வாகும்.

இலங்கை நெருக்­க­டியில் சிக்­கிய போது, எந்த நாட்­டுக்கும் வழங்­கா­த­ள­வுக்கும், எந்த நாடும் வழங்­கா­த­ள­வுக்கும் 4 பில்­லியன் டொலர்­களை கொடுத்து உத­விய நாடு இந்­தியா.

இந்­தி­யாவின் அந்த உத­விகள் கிடைக்­காது போயி­ருந்தால், பட்­டினி , நோய்கள் போன்ற பல கார­ணி­களால் ஆயி­ரக்­கணக்­கான உயி­ரி­ழப்­புகள் நேர்ந்­தி­ருக்கும். சமூக குழப்­பங்­களும் உரு­வா­கி­யி­ருக்கும்.

சீனாவின் கடன்­பொ­றி­யினால் தான் இலங்கை நெருக்­க­டிக்குள் சிக்கிக் கொண்­டது என்ற குற்­றச்­சாட்­டுகள் சீனா­வுக்கு அசௌ­க­ரி­யங்­களை ஏற்­ப­டுத்­தி­யதும், இந்­தியா, அமெ­ரிக்­காவின் அழுத்­தங்­களும், இலங்­கையின் போக்கும் சீனா நெருக்­க­டி­யான தரு­ணத்தில் வரை­ய­றுக்­கப்­பட்ட மனி­தா­பி­மான உத­வி­க­ளையே பெரும்­பாலும் வழங்­கி­யது.

அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில், நெருக்­க­டியில் இருந்து மீட்கும் சர்­வ­தேச முயற்­சி­களை ஒருங்­கி­ணைத்துக் கொடுத்­த­துடன், மனி­தா­பி­மான உத­வி­க­ளையும் வழங்­கி­யது.

இலங்­கைக்கு வெளி­நாட்டு நாணய உழைப்பை அளிக்கும், சுற்­றுலாத் துறையை தூக்கி விடு­வதில் ரஷ்யா கணி­ச­மான பங்­க­ளித்­தி­ருக்­கி­றது.

இவ்­வா­றான நாடு­க­ளுடன் உற­வு­களை பேணு­வதும் கையா­ளு­வதும் மிக முக்­கி­ய­மா­னது.

ஒன்­றுடன் ஒன்று முரண்­ப­டாத வகையில், ஒன்­று­ட­னான உறவு, இன்­னொன்­றுக்கு புண்­ப­டுத்­த­தாத வகையில், நகர்­வு­களை மேற்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது.

இந்த நாற்­பக்க வியூ­கத்­துக்குள் இலங்கை சரி­யான இடத்தை தெரிவு செய்யத் தவ­றினால், எல்­லாமே பிழைத்து விடும்.

அதற்­கான கவ­ச­மா­கவே அணி­சேரா கொள்­கையை இலங்கை பயன்­ப­டுத்திக் கொள்­கி­றது. ஆனால், இது எல்லா நேரங்­க­ளிலும் பொருத்­த­மா­னதோ, எல்லா நாடு­க­ளையும் சமா­ளிக்க கூடி­ய­தா­கவோ இருக்கும் என்­றில்லை.

குறிப்­பாக, இந்­தியா- சீனா விட­யத்தில், ‘ஏறச் சொன்னால் எரு­துக்கு கோபம், இறங்கச் சொன்னால் முட­வ­னுக்கு கோபம்’  என்ற நிலை தான் காணப்­ப­டு­கி­றது.

பொரு­ளா­தார நெருக்­க­டிக்குப் பிந்­திய இலங்கை, எரி­சக்தி, மின்­சக்தி துறை­களில் முத­லீ­டு­களை எதிர்­பார்க்­கி­றது. அதற்கு தேவையும் அதிகம் இருப்­பதால், இந்த துறை­களில் முத­லீட்டை ஈர்க்க முனை­கி­றது.

அது­போ­லவே துறை­முகத் திட்­டங்­க­ளையும் விரை­வு­ப­டுத்­து­வதன் மூலம், கடல் போக்­கு­வ­ரத்து வாய்ப்­பு­களை இல­கு­ப­டுத்த அர­சாங்கம் எதிர்­பார்க்­கி­றது.

அம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனா­வுக்கு வழங்­கப்­பட்­டுள்ள நிலையில், இந்­தி­யா­வுக்கு திரு­கோ­ண­மலைத் துறை­முக அபி­வி­ருத்தி திட்­டத்தை கொடுப்­பது குறித்து கவனம் செலுத்­தப்­படும் என்று தெரி­கி­றது.

திரு­கோ­ண­மலை து‍றைமுகம் மீது இந்­தி­யா­வுக்கு  நீண்­ட­ கா­ல­மா­கவே ஒரு கண் இருக்­கி­றது, அதன் அரு­கில் சீனக்­குடா எண்ணெய் குதங்­களும் இருக்­கின்­றன.

இவ்­வா­றான நிலையில் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை இந்­தி­யாவின் உத­வி­யுடன் அபி­வி­ருத்தி செய்து, பிராந்­தி­யத்தின் எண்ணெய் கேந்­தி­ர­மாக்­கு­வது அர­சாங்­கத்தின் திட்­ட­மாகத் தெரி­கி­றது.

இது இந்­தியப் பிர­தமர் மோடி 2015இல் முதல் முறை­யாக இலங்­கைக்கு வந்த போது இணங்கிக் கொள்­ளப்­பட்ட விடயம். ஆனால், 8 ஆண்­டு­க­ளா­கியும் நடை­மு­றைக்கு வர­வில்லை.

திரு­கோ­ண­மலை விட­யத்தில் இந்­தி­யா­வுக்கு அக்­க­றை­யுள்ள நிலையில், அதனை வைத்து சீனாவின் முத­லீ­டு­களின் மீதான இந்­திய அழுத்­தங்­களை குறைக்க ரணில் அர­சாங்கம் திட்­ட­மி­டு­கி­றது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க வரும் ஒக்­ரோபர் மாதம் சீனா­வுக்குச் செல்­ல­வி­ருக்­கிறார். அங்கு மேற்­கொள்ளப் போகும் முதல் பய­ணத்தில், பெருமளவில் முதலீடுகளைக் கொண்டு வரும் நோக்கம் அரசாங்கத்துக்கு உள்ளது.

சீனாவின் சினோபெக் உள்ளிட்ட இரண்டு நிறுவனங்கள், அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் பெரியளவில் முதலீட்டை மேற்கொள்ள திட்டங்களை முன்மொழிந்திருக்கின்றன.

அதுபோல பல மூலோபாயத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு சீனா விரும்புகிறது.

ரணில் விக்கிரமசிங்க சீனப் பயணத்தின் போது, இறுதி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

அதனால் அவர் புதுடெல்லிப் பயணத்தின் போது, இந்தியாவைச் சமாளிக்கும் திட் டங்களுக்கு  முன்னுரிமை அளிக்க விரும்பு கிறார்.

குறிப்பாக, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலையின் மூலம், இந்தியாவைச் சமாளிக்க அவர் முற்படுகிறார்.

ஆனால், இந்தியா, இலங்கையில் தனது நலன்களை அடைவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறதா- சீனா, நலன்களை அடைய விடாமல் தடுப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப் போகிறதா என்பதைப் பொறுத்தே, ரணில் விக்கிரமசிங்கவின் இந்த இலக்கு வெற்றிகரமானதாக அமையுமா என்பது தீர்மானிக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07