ஜனாதிபதி தேர்தல் முஸ்தீபில் ரணில்

Published By: Vishnu

16 Jul, 2023 | 01:19 PM
image

நமது அர­சியல் நிருபர்

அடுத்த வருடம் ஜனா­தி­பதித் தேர்­தலை சந்­திப்­பது குறித்து ஐக்­கிய தேசியக் கட்சி தீவி­ர­மாக ஆலோ­சித்து வரு­கின்­றது. குறிப்­பாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான குழு­வினர் இந்தத் திட்டம் குறித்து ஆலோ­ச­னை­களை நடத்தி வரு­கின்­றனர்.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க சிறு­பான்மைக் கட்சி தலை­வர்­களை ஒவ்­வொ­ரு­வ­ராக அழைத்து இந்த விட­யங்கள் தொடர்பில் ஆலோ­சித்து வரு­வ­துடன் அவர்­க­ளது ஆத­ரவை கோரும் வகையில் கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தி வரு­வ­தாக தெரி­கின்­றது.

சில தினங்­க­ளுக்கு முன்னர் கட்சித் தலைவர் ஒரு­வரை அழைத்து தனது எதிர்­கால அர­சியல் விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கின்றார். எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் மொட்டுக் கட்­சி­யுடன் செல்லப் போவ­தில்லை என்றும் அந்தக் கட்­சி­யி­லுள்ள ஒரு குழு­வி­னரை ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைத்­துக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென்றும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

அந்­த­வே­ளையில் சிறு­பான்மைக் கட்­சிகள் தனக்கு ஆத­ரவு வழங்க வேண்டும். அந்தக் கட்­சிகள் எம்­முடன் ஒன்­றி­ணைய வேண்டும். தமிழ், முஸ்லிம், சிங்­கள மக்கள் தொகையில் பெரும்­பான்­மை­யான தீர்­மானம் எடுக்­காத வாக்­குகள் (மிதக்கும் வாக்­குகள்) தற்­போது அதி­க­ரித்­துள்­ளன. அந்த வாக்­கு­களை நாம் பெற்­றுக்­கொள்ள முடியும் என்றும் ஜனா­தி­பதி நம்­பிக்கை வெளி­யிட்­டுள்ளார்.

ஜனா­தி­பதித் தேர்­தலை இணைந்து சந்­திப்­ப­தற்கு எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச முன்­வரமாட்டார். அவரை இந்தக் கணக்­கெ­டுப்பில் எடுக்­கா­ம­லேயே நாம் எமது திட்­டத்தை வகுத்து செயற்­பட வேண்­டு­மென்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­தா­கவும் தெரி­கின்­றது.

இதி­லி­ருந்து ஜனா­தி­ப­திக்­கான தேர்­தலை அடுத்த வருடம் நடத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி திட்­ட­மிட்­டுள்­ள­மையும் அதற்­கான கூட்­ட­ணியை அமைப்­பது தொடர்பில் ஆலோ­சித்து வரு­கின்­ற­மையும் நிரூ­ப­ண­மா­கி­யுள்­ள­தாக அர­சியல் வட்­டா­ரங்­களில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்­திய வெளி­யு­றவு செய­லரை சந்­திக்க முயன்ற சம்­பந்தன்

இலங்­கைக்கு கடந்த வாரம் விஜயம் செய்­தி­ருந்த இந்­திய வெளி­யு­றவுச் செய­லாளர் வினய் மோஹன் குவத்ரா ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி உட்­பட்ட அர­சாங்க தரப்­பி­னரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

எதிர்­வரும் 20ஆம் திகதி உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க புது­டில்­லிக்கு செல்­ல­வுள்ளார். அவ­ரது விஜயம் தொடர்பில் கலந்­து­ரை­யாடும் வகை­யி­லேயே இந்­திய வெளி­யு­றவுச் செய­லா­ளரின் இந்த விஜயம் அமைந்­தி­ருந்­தது.

இலங்கை வந்­தி­ருந்த வெளி­யு­றவுச் செய­லா­ளரை சந்­திப்­ப­தற்கு இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் மூத்த தலைவர் இரா. சம்­பந்தன் முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்தார். கடந்த திங்­கட்­கி­ழமை மாலை இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த இந்­திய வெளி­யு­றவுச் செய­லாளர் புதன்­கி­ழமை நாட்­டி­லி­ருந்து புறப்­பட்­டி­ருந்தார்.

ஆனாலும் அவரை சந்­திப்­ப­தற்­கான சம்­பந்­தனின் முயற்சி கைகூ­டி­யி­ருக்­க­வில்லை. இதன் கார­ண­மாக இலங்­கைக்­கான இந்­தியத் தூதுவர் கோபால் பாக்லே புதன்­கி­ழமை பிற்­பகல் சம்­பந்­தனை அவ­ரது கொழும்­பி­லுள்ள இல்­லத்தில் சென்று சந்­தித்து பேசி­யி­ருந்தார். இதன்­போது புது­டில்லி செல்லும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் இந்­திய தரப்பில் வலி­யு­றுத்­தப்­பட வேண்­டிய விட­யங்கள் தொடர்பில் சம்­பந்தன் எடுத்துக் கூறி­யுள்ளார்.

அர்த்­த­முள்ள அதி­காரப் பகிர்­வுக்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சம்­பந்தன் இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ரிடம் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். இதன்­போது இந்­திய விஜ­யத்­துக்கு முன்னர் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் சம்­பந்தன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வது நல்­லது என்று இந்­திய உயர்ஸ்­தா­னிகர் கருத்து தெரி­வித்­துள்­ள­துடன் முடிந்தால் அதற்­கான ஏற்­பா­டு­க­ளையும் மேற்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் உறு­தி­ய­ளித்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தற்கும் மாகாண சபைத் தேர்­தல்­களை உட­ன­டி­யாக நடத்­து­வ­தற்கும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி அழுத்தம் கொடுக்க வேண்­டு­மென்று கோரி ஜன­நா­யக தமிழ் தேசிய கூட்­டணி, சி.வி. விக்­னேஸ்­வரன் தலை­மை­யி­லான தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யுடன் இணைந்து கடி­த­மொன்றை அனுப்பி வைத்­துள்­ளது.

இந்தக் கடி­தத்தில் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் மூத்த தலைவர் இரா. சம்­பந்­தனின் கையொப்­பத்தை பெறு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டன. ஆனாலும் 13ஆவது திருத்தச் சட்­டத்தை மட்டும் அமுல்­ப­டுத்தக் கோரும் இந்தக் கடி­தத்தில் கையொப்­ப­மிட சம்­பந்தன் மறுப்பு தெரி­வித்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்தே இலங்கை வந்த இந்­திய வெளி­யு­றவுச் செய­லாளர் வினய் மோஹன் குவாத்­ராவை சந்­திப்­ப­தற்கு சம்­பந்தன் முயன்­ற­தாக தெரி­கின்­றது. ஆனாலும் அந்த முயற்சி பய­ன­ளிக்­காத போதும் இந்­திய உயர்ஸ்­தா­னிகர் கோபால் பாக்லே சம்­பந்­தனை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­துடன் அடுத்த கட்ட நகர்­வுகள் குறித்தும் ஆராய்ந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ரணிலை ஆத­ரிக்கும் நிலைப்­பாட்டில் மூன்று பிரி­வா­கி­யி­ருக்கும் ஐ.ம.ச.

எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சக்­திக்குள் தொடர்ந்தும் முரண்­பா­டுகள் நீடித்து வரு­கின்­றன. ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து எதிர்­கால அர­சி­யலை முன்­னெ­டுக்க வேண்டும் என்­பது தொடர்பில் ஐக்­கிய மக்கள் சக்­திக்குள் ஒரு பிரி­வி­னர் தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றனர்.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் செயற்­பட வேண்டும் என்று இந்தத் தரப்­பினர் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

மற்­றொரு தரப்­பினர் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணை­யவே கூடாது, நாம் தனித்தே தொடர்ச்­சி­யாக அர­சியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட வேண்­டு­மென்று வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

இதனை விட மூன்­றா­வது தரப்­பினர், ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க பொது­ஜன பெர­மு­னவில் அங்கம் வகிக்கும் இளம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் நல்­லு­றவை கொண்­டி­ருக்­கின்றார். அவர்­களில் 25 பேர் வரையில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வார்­க­ளா­யி­ருந்தால் அவர்­க­ளுடன் இணைந்து அடுத்த தேர்­தல்­களை சந்­திக்­கலாம் என்ற நிலைப்­பாட்டில் உள்­ள­தாக தெரி­கின்­றது.

கடந்த வாரம் இரத்­தி­ன­புரி மேல் நீதி­மன்­றத்­துக்­கான கட்­டடத் தொகுதி ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் திறந்து வைக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த நிகழ்வில் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக் ஷ, பிர­தம நீதி­ய­ரசர் ஜயந்த ஜெய­சூ­ரிய, சட்­ட மா அதிபர் உட்­பட்டோர் பங்­கேற்­றி­ருந்­தனர். இதில் ஐக்­கிய மக்கள் சக்­தி 

யின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தலாதா அத்­து ­கோ­ர­ளவும் பங்­கேற்­றி­ருந்தார். இவரும் முன் னர் நீதி­ய­மைச்­ச­ராக கட­மை­யாற்­றி­யி­ருந்­தவர்.

இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் அவர் பல தட­வைகள் அள­வ­லாவி இருந்தார். இந்த விடயமா­னது நிகழ்வில் கலந்­து­கொண்­ட­வர்­களின் கவ­னத்தை ஈர்த்­தி­ருந்­தது.

ஐக்­கிய மக்கள் சக்­தியின், ஜனா­தி­பதி ரணி­லுடன் இணைந்து செயற்­பட வேண்­டு­மென்று வலி­யு­றுத்தும் அணியில் தலதா அத்­து­கோ­ர­ளையும் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

ஆனாலும், ஐக்­கிய மக்கள் சக்­தியின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­பதி ரணில் தரப்­புடன் இணைந்து செயற்­பட வேண்டும் என்ற விட­யத்தை ஏற்­றுக்­கொள்­வ­தாக இல்லை. இந்த விவ­கா­ரத்தில் அவர் கடும் போக்கு நிலைப்­பாட்டை கொண்­டி­ருக்­கின்றார். இதனால் அடுத்த தேர்­த­லொன்று அறி­விக்­கப்­ப­டு­மி­டத்தில் ஐக்­கிய மக்கள் சக்­திக்குள் பெரும் முரண்­பாடு தலை­தூக்­கு­மென்று விட­ய­ம­றிந்த வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

புது­டில்­லியை சமா­ளிக்கும் யுக்­தியில் ஜனா­தி­பதி  

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்­வரும் 20ஆம் திகதி புது­டில்­லிக்கு விஜயம் செய்­கின்றார். 21ஆம் திகதி இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­தித்து பேசு­வ­தற்கு ஏற்­பா­டுகள் இடம்­பெற்­றுள்­ளன.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த வருடம் ஜூலை மாதம் 21ஆம் திகதி ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றி­ருந்தார். சரி­யாக ஒரு வரு­டங்­க­ளுக்குப் பின்னர் இந்­தியப் பிர­த­மரை ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க சந்­தித்து பேச­வுள்ளார். இலங்­கையில் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்கும் அர­சியல் தலை­வர்கள் உட­ன­டி­யா­கவே இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­வது வழ­மை­யாகும். ஆனாலும், ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை உட­ன­டி­யாக அழைப்­ப­தற்கு இந்­தியா விரும்­பி­யி­ருக்­க­வில்லை. இத­னால்தான் இவ்­வ­ளவு கால­தா­ம­தத்­துக்குப் பின்னர் அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­திய விஜ­யத்­தை­ய­டுத்து எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் சீனா­வுக்கு விஜயம் செய்­ய­வுள்ளார். சீனாவில் நடை­பெறும் முக்­கிய மகா­நாட்டில் பங்­கேற்­ப­தற்­கா­கவே இந்த அழைப்பு சீன அர­சாங்­கத்­தினால் விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

ஜனா­தி­ப­தியின் புது­டில்லி விஜ­யத்தின் போது இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான இரு­த­ரப்பு விவ­கா­ரங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ள­துடன் சீன விவ­காரம் தொடர்பில் ஆரா­யப்­ப­டு­மென்று தெரி­கின்­றது. இதனால் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இந்­திய விஜ­ய­மா­னது முக்­கி­யத்­துவம் உடை­ய­தாக அமைந்­துள்­ளது. அத்­துடன் இந்­திய மத்­திய அரசின் கடும்­போக்கு நிலைப்­பாடும் ஜனா­தி­ப­தி­யிடம் தெரி­விக்­கப்­படும் எனவும் கூறப்­ப­டு­கின்­றது.

ஆனாலும், சீனா தொடர்­பான இந்­தி­யாவின் நிலைப்­பா­டு­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே ஜனா­தி­பதி தனது பயணத் திட்­டத்தை தயா­ரித்­துள்­ள­தா­கவும் தெரி­கின்­றது.

டில்­லி­யா­னது சீனா­வுடன் இணைந்து வர்த்­தக தொடர்­பு­களை பேணி வரு­கின்­றது. வர்த்­தகம் தொடர்­பான அமைப்பில் அங்கம் வகிக்­கின்­றது. இவ்­வா­றி­ருக்­கையில் சீனா­வு­ட­னான எமது வர்த்­தக பொரு­ளா­தார உற­வுகள் தொடர்பில் இந்­தியா எவ்­வாறு விசனம் தெரி­விக்க முடியும் என்று ஜனா­தி­பதி அண்­மையில் தன்னைச் சந்­தித்த தலைவர் ஒரு­வ­ரிடம் கேள்­வி­யெ­ழுப்­பி­ய­தா­கவும் தெரி­கின்­றது.

இந்­திய விஜயம் கடு­மை­யா­கவே அமை­யலாம். ஆனாலும் இந்­தி­யா­வுடன் இணைந்தே, குறிப்­பாக தமிழ்­நாட்­டுடன் இணைந்து பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும். தமிழ் நாட்­டுடன் இணைந்தே வர்த்­தக ரீதியில் முன்­னே­றலாம். இரா­மேஸ்­வ­ரத்­துக்கும் மன்­னா­ருக்­கும் இ­டையில் பாலம் அமைக்­கப்­பட வேண்டும். அடுத்த ஆட்­சியில் இந்தப் பாலத்தை எத்­த­கைய எதிர்ப்­புக்கள் ஏற்­பட்­டாலும் அமைக்க திட்­ட­மிட்­டுள்ளேன். இந்­தி­யா­வுடன் சேர்ந்து பொரு­ளா­தா­ரத்தை முன்­னேற்ற வேண்டும் என்றும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த தலை­வ­ரிடம் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். இந்த விட­யங்­களை புது­டில்லி விஜ­யத்தில் சுட்­டிக்­காட்­டு­வ­தற்கு ஜனா­தி­பதி தயா­ரா­கி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

புதிய கூட்­டுக்கு முயலும் டலஸ் அணி­யினர்

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்டு தோல்­வி­ய­டைந்த டலஸ் அழ­க­பெ­ரும தலை­மை­யி­லான அணி­யினர் எதிர்­கா­லத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் தற்போது அந்த அணியினர் தாம் தனித்து புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

டலஸ் அழ­கப்­பெ­ரும தலை­மை­யி­லான அணி­யினர் சிறு­பான்மைக் கட்­சி­க­ளுடன் பேச்­சுக்­களை நடத்­த­வுள்­ளனர். மனோ கணே சன் தலை­மை­யி­லான தமிழ் முற்­போக்குக் கூட்­டணி, ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உட்­பட பல கட்­சி­களின் தலை­மை­களை அவர்கள் பேச்­சுக்கு அழைத்­துள்­ளனர். தனித்­த­னி­யாக இந்தக் கட்­சி­களின் தலை­மை­க­ளுடன் பேச்­சுக்­களை நடத்த அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இவ்­வாறு பேச்­சுக்­களை நடத்தி புதிய கூட்­ட­ணியை உரு­வாக்­கு­வ­தற்கு இந்தக் குழு­வினர் திட்­ட­மிட்­டுள்­ளனர். சம்­பிக்க ரண­வக்­க­வுடன் பேச்­சுக்­களை நடத்தி ஒன்­றி­ணைந்து ஜனாதிபதி தேர்தலை சந்திப்பது தொடர்பிலும் இவர்கள் ஆலோசித்து வரு கின்றனர்.

இதனைவிட ஜே.வி.பியுடனும் பேச்சுக் களை நடத்தி அவர்களுடன் கூட்டணி அமைப்பது தொடர்பிலும் இவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஜே.வி.பியுடன் கூட்டணி அமைத்து விட்டு ஜனாதிபதி வேட்பாளராக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினியை நியமிப்பது என்றும் பின்னர் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறும் போது பிரதம வேட்பாளராக சம்பிக்க அல்லது டலஸ் ஆகியோரில் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் இந்தத் தரப்பினர் ஆலோசித்து வருவதாக தெரிகின்றது.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தை 'யால வனத்திற்கு' மாற்ற யோசனை

சில தினங்களுக்கு முன்னர் ஆளும் கட்சி தலைவர்களை ஜனாதிபதி ரணில் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பில் 'அஸ்வெசும திட்டம்' குறித்த சர்ச்சைகள் தொடர்ந்தும் பேசப்படு கிறது. இது அரசாங்கத்திற்கு பாதகமாக அமைய லாம் என்று ஜனாதிபதியிடம் அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையை அரசியலாக்கி முன்னெடுக் கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியினரே இதனை கூடுதலாக தூண்டுகின்றனர் என்று அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் குறிப்பிட்டார்.

இந்த இரு கருத்துக்களையும் மௌனமாக செவிமெடுத்திருந்த ஜனாதிபதி ரணிலை நோக்கி, சற்று உரத்த குரலில்... முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உருவாக்கிய 'ஜனசவிய'  திட்டத்தினை இரத்து செய்துதான் 'சமுர்த்தி' திட்டம் அன்று கொண்டு வரப் பட்டது. ஆனால் 'சமுர்த்தியை' பாதுகாக்க ரணசிங்க பிரேமதாசவின் புதல்வர் இன்று துணை நிற்கின்றமை வேடிக்கையாக உள்ளது என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

இதற்கு மேலும் உரமிடுவது போல், ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக அன்று நம்பிக்கையில்லாப் பிரேரனையை கொண்டு வந்த போது, தற்போதைய ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவே அவரை பாதுகாத்தார். ஜனாதிபதி ரணில் அன்று ரணசிங்க பிரேமதாசவை பாதுகாத்திருக்கா விடின், அவரது புதல்வாரன தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அரசியலில் இருந்திருக்க மாட்டார் என்று வஜிர அபேவர்தன கூறினார்.

இந்த கருத்துக்களுக்கு மௌனித்த புன்னகையை தவிர வேறு எந்தவொரு மறுமொழியும் ஜனாதிபதியிடமிருந்து வெளிப்படவில்லை. இதன் போது அமைச்சர் பந்துல குணவர்தன, ஆளும் கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் ஒரு யோசனையை முன் வைப்பதாக கூறினார். அதாவது எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்பதே எமது யோசனை என ஜனாதிபதியை நோக்கி தெரிவித்தார்.

இதனை சற்றும் எதிர்பாராத ஜனாதிபதி உட்பட ஏனைய ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அமைச்சர் பந்துல குணவர்தனவை வியப்புடன் பார்த்தனர். இதனால் சில நொடிகள் ஜனாதிபதியின் அலுவலக அறை மௌமாகியது.

மீண்டும் கருத்துரைத்த அமைச்சர் பந்துல, "நான் என்ன கூறுகிறேன் என்றால், எதிர்க்கட்சி தலைவர் எப்போதுமே யால  வனவிலங்குகள் சரணாலயத்திலேயே  உள்ளார். எனவே கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் ஒன்றை பராமரிப்பதை விட அதனை யால வனத்திற்கு இடமாற்று வதால் அரசாங்கத்திற்கு  ஏதோவொரு வழியில் செலவுகள் குறையும் என்பதையே கூறுகிறேன்" என்றார்.  

இதனை செவிமெடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அனைத்து ஆளும் கட்சி உறுப்பினர்களும் பேரொலியுடன் சிரித்தனர். இதனை தொடர்ந்து மௌனத்தை கலைத்த ஜனாதிபதி,

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதை விட, 'அஸ்வெசும'   திட்டம் குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்துவதே முக்கியமானதாகும். அதனை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை நோக்கி கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடந்த கால நினைவுகளால் என்ன பயன்?

2025-03-26 03:57:33
news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56