அல்குர்ஆன் எரித்தல் : கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் என்ற பாசாங்கு

Published By: Vishnu

16 Jul, 2023 | 01:51 PM
image

சதீஷ் கிருஷ்­ண­பிள்ளை

இந்த உலகம் விசித்­தி­ர­மா­னது. இங்கு கோட்­பா­டுகள் மோதிக் கொள்ளும். கோட்­பாட்டு மோதல் ஆரோக்­கி­ய­மான கருத்­தா­டல்­க­ளாக மாறலாம். அத­னு­டாக புதிய கோட்­பா­டுகள் தோன்­றலாம். மாறாக, மாறு­பட்ட கோட்­பா­டு­களைப் பின்­பற்­று­ப­வர்கள் அடித்துக் கொண்டு சாகலாம். சண்­டையை உரு­வாக்­கிய காரணம் சல்­லிக்கும் பெறுமதியற்ற­தாகக் கூட இருக்க முடியும். 

இன்றும் கோட்­பாட்டு மோதல் நீடிக்­கி­றது. ஒரு மேலைத்­தேய நாட்டில் அர­சியல் தஞ்சம் கோரிய மனிதன். இவ­னுக்கு உலகின் கவ­னத்தை ஈர்க்க வேண்­டிய தேவை. தகா­தது என்­பதை அறிந்தும் தாம் செய்த செயல் மூலம் ஒரு மோத­லுக்குக் கார­ண­மாக இருந்­தி­ருக்­கிறான். அதிர்ஷ்­ட­வ­ச­மாக, இது ஆயு­த­மோ­த­லாக பரி­ண­மிக்­க­வில்லை.

ஈராக்கில் இருந்து சுவீடன் சென்ற சல்வான் மொமிக்கா. ஹஜ்ஜூப் பெருநாள் விடு­மு­றையின் முதல் நாளன்று ஸ்டொக்ஹொம் நகர பெரிய பள்­ளி­வாசல் முன்னால் நின்றார். திருக்­குர்ஆன் பக்­கங்­களைக் கிழித்தார். காலால் உதைத்தார். பின்னர், தீயிட்டுக் கொளுத்­தினார். இந்தக் காட்­சியை சமூக வலை­த­ளங்­களில் சேர்த்தார். 

இது­வொன்றும் எதேச்­சை­யான சம்­பவம் அல்ல. ஏற்­கெ­னவே திட்­ட­மிட்­டதுதான். அல்­குர்ஆன் பிர­தியை எரிப்­ப­தற்கு அனு­மதி கேட்­ட­போது, சுவீடன் பொலிஸார் ஆரம்­பத்தில் மறுப்புத் தெரி­வித்­தார்கள். எனினும், மொமிக்­காவின் கோரிக்­கையை ஏற்று, அவர் நினைத்­ததை செய்ய நீதி­மன்றம் அனு­மதி வழங்­கி­யது. இது அவ­ரது கருத்துச் சுதந்­திரம் என்­பதன் அடிப்­ப­டையில். 

மொமிக்­காவின் செயல் சுவீ­டனில் மாத்­தி­ர­மன்றி உல­கெங்­கிலும் வாழும் முஸ்­லிம்­களை ஆத்­தி­ரப்­ப­டுத்­தி­யதில் வியப்­பில்லை. இதன் கார­ண­மாக, உலகின் பல பாகங்­க­ளிலும் ஆர்ப்­பாட்­டங்கள் தீவிரம் பெற்­ற­திலும் ஆச்­சர்­ய­மில்லை. மொமிக்­காவை மாத்­தி­ர­மன்றி, சுவீ­ட­னையும் பெரும்­பா­லான நாடுகள் கண்­டித்­தன. சில முஸ்லிம் நாடுகள் ராஜ­தந்­திர ரீதி­லான நட­வ­டிக்கை எடுத்­தன. 

கடை­சி­யாக, இந்த விவ­காரம் ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் பேர­வைக்கு வந்­தது. குர்ஆன் எரிப்பு சம்­ப­வத்தின் அடிப்­ப­டையில், மனித உரி­மைகள் பேர­வையில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. தீர்­மா­னத்தை அமெ­ரிக்­காவும், ஐரோப்­பிய நாடு­களும் அடங்­கிய மேற்­கு­லகம் கடு­மை­யாக ஆட்­சே­பித்­தது.

மறு­பு­றத்தில், இந்­தியா, பாகிஸ்­தா­னுடன் சேர்ந்து தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தது. ஈற்றில், 28 நாடுகள் ஆத­ர­வா­கவும், 12 நாடுகள் எதி­ரா­கவும் வாக்­க­ளிக்க தீர்­மானம் நிறை­வே­றி­யது.

மேற்கு நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில், கருத்து வெளிப்­பாட்டு சுதந்­திரம் என்­பது ஜன­நா­ய­கத்தின் தூண். சர்­வ­தேச சட்­டத்தில் அடிப்­படை உரி­மை­யாக சேர்க்­கப்­பட்ட விடயம். எந்த விதத்­திலும், எவ­ருக்­கா­கவும் கருத்து வெளிப்­பாட்டு சுதந்­தி­ரத்தை விட்டுக் கொடுக்க முடி­யாது என்று மேற்­கு­லகம் கரு­து­கி­றது.

மறு­பு­றத்தில், திருக்­குர்ஆன் என்­பது வெறும் புத்­தகம் அல்ல. அது சமய ரீதி­யா­கவும், ஆன்­மீக ரீதி­யா­கவும் மிகவும் முக்­கி­யத்­துவம் பெறும் புனித வச­னங்­களின் தொகுப்பு. அது இஸ்­லா­மிய மத நம்­பிக்­கையின் அடை­யாளம். திருக்­குர்­ஆனை எரித்தல் என்­பது எல்லாம் வல்ல இறை­வனை அவ­மா­னப்­ப­டுத்­து­வ­தற்கு சம­மா­னது என இஸ்­லா­மிய மக்கள் கரு­து­வார்கள்.

சுவீடன் கருத்துச் சுதந்திரத்தை தீவி­ர­மாக மதிக்கும் நாடாக இருந்­தாலும், திருக்­குர்­ஆனை எரிப்­பதை கருத்து வெளிப்­பாட்டுச் சுதந்­திரம் என்ற கோட்­பாட்­டுக்குள் அங்­கீ­க­ரிக்க முடி­யுமா? கருத்து வெளிப்­பாட்டு சுதந்­தி­ரத்தின் கீழ், ஒருவர் சகித்துக் கொள்ள முடி­யா­ததை கூறலாம். ஏசலாம். வசை பாடலாம்.  இந்த எதுவும் எந்­த­வொரு தனி­ந­ப­ருக்கோ, குழு­விற்கோ எதி­ராக வன்­மு­றையைத் தூண்­டு­வ­தாக, வெறுப்பைக் கட்­ட­விழ்த்து விடு­வ­தாக இருக்­கக்­கூ­டாது.

இது சர்­வ­தேச சட்­டங்கள் தாண்­டிய அடிப்­படை மனி­த­நேய தர்மம் என்று கூட சொல்லாம். எனவே, எங்­கெல்லாம் கருத்துச் சுதந்­திரம் பற்றி பேசப்­ப­டு­கி­றதோ, அங்­கெல்லாம் மற்­ற­வர்­க­ளுக்கு தீங்கு விளை­விக்கக் கூடி­யதைத் தவிர்த்தல் என்ற கோட்­பாட்டை ஞாபகம் வைத்­தி­ருப்­பது அவ­சி­ய­மா­கி­றது.

திருக்­குர்ஆன் எரிப்புச் சம்­ப­வத்தை கருத்து வெளிப்­பாட்டுச் சுதந்­தி­ரத்தை மதிக்கும் ஜன­நா­யகம் என்ற கோட்­பாட்­டுக்கும், அடிப்­படை மத நம்­பிக்­கை­களை மதித்தல் என்ற கோட்­பாட்­டுக்கும் இடை­யி­லான மோத­லாகக் கருத முடி­யாது. இங்கு கருத்து வெளிப்­பாட்டுச் சுதந்­திரம் என்ற பெயரில், சில மேலைத்­தேய நாடு­களில் கட்­ட­விழ்த்து விடப்­பட்ட தகாத செயல்கள் வன்­மு­றை­களில் முடிந்­தி­ருக்­கின்­றன.

2005ஆம் ஆண்டில் டென்மார்க் பத்­தி­ரி­கை­யொன்று நபி பெரு­மானின் உரு­வத்தை கேலிச்­சித்­தி­ரங்­க­ளாக வரைந்து, கருத்து வெளிப்­பாட்டு சுதந்­தி­ரத்தை சோதிக்க முற்­பட்­டமை தொடக்கம், கடந்த ஜன­வரி மாதம் சுவீ­டனில் தீவிர வல­து­சாரி அர­சி­யல்­வாதி ஒருவர் திருக்­குர்­ஆனை எரித்­தமை வரையில் எத்­த­னையோ சம்­ப­வங்­களை உதா­ர­ண­மாகக் காட்ட முடியும்.

இவை­யெல்லாம் கருத்தை சுதந்­தி­ர­மாக வெளிப்­ப­டுத்­து­வதை நோக்­க­மாக கொண்ட செயல்­களா அல்­லது கருத்து வெளிப்­பாட்டு சுதந்­தி­ரத்தின் பெயரால் வெறுப்பை உமிழும் செயல்­களா என்ற கேள்வி இஸ்­லா­மிய சமூ­கத்தில் உள்­ளது.

கருத்து வெளிப்­பாட்டு சுதந்­திரம் என்­பது இஸ்­லாத்­திற்கு எதி­ராக காழ்ப்­பு­ணர்ச்­சியைம், வெறுப்­பையும் வெளிப்­ப­டுத்­து­வற்­கு­ரிய கரு­வி­யாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றதா என்ற வினாவும் இருக்­கி­றது. வன்­மமும், தீய­நோக்­கமும் கொண்ட எந்­த­வொரு மனி­தரும் இஸ்­லாத்தை அவ­தூறு செய்­யலாம், அத்­த­கைய மனி­த­ருக்கு கருத்து வெளிப்­பாட்டு சுதந்­திரம் என்­பதன் பெயரால் மேற்­கு­லகம் பாது­காப்பு வழங்கும் என்று இஸ்­லா­மிய நாடுகள் கரு­து­கின்­றன.

ஸ்டொக்­ஹோமில் திருக்­குர்­ஆனை எரித்த மொமிக்­காவின் பின்­பு­லத்தை பார்க்­கலாம். இதனை ஆராய்ந்தால், இந்த மனிதர் இஸ்­லாத்தை இழி­வு­ப­டுத்த வேண்டும் என்று கங்­கணம் கட்டிக் கொண்டு செயற்­பட்­டி­ருப்­பதை தெளி­வாக அறிய முடியும். இந்த மனிதர் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுவீ­டனில் கால்­ப­தித்­தி­ருக்­கிறார்.

மூன்று வரு­டங்­க­ளுக்குப் பின்னர் இவ­ருக்கு அகதி அந்­தஸ்து கிடைத்­தி­ருக்­கி­றது. சுவீடன் குடி­வ­ரவு அமைப்பு மொமிக்­கா­விற்கு வழங்­கிய மூன்று வரு­ட­கால வதி­விட அனு­மதிப் பத்­திரம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலா­வ­தி­யா­கி­றது. இதற்குள் ஏதா­வது செய்ய வேண்­டு­மென்ற திட்­ட­மி­ட­லுடன் அவர் இயங்­கி­யி­ருக்­கிறார்.

தமது பேஸ்­புக்கில் தம்மை நாத்­தி­க­ரா­கவும், அறி­வு­பூர்­வ­மான அர­சி­யல்­வா­தி­யா­கவும், சிந்­த­னா­வா­தி­யா­கவும், எழுத்­தா­ள­ரா­கவும் விப­ரித்­தி­ருக்­கிறார்.

தமது பேஸ்புக், டிக்டொக் கணக்­கு­களை பிர­சார கரு­வி­யா­கவே பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். தாம் ஏதா­வது வீடி­யோவை சமூக வலை­த­ளங்­களில் சேர்த்தால், அதனை ஆகக்­கூ­டு­த­லான முஸ்லிம் நாடு­களில் பார்க்­கக்­கூ­டிய (ஹேஷ்டெக்) ஏற்­பா­டு­களை செய்­தி­ருக்­கிறார். தாம் செய்யத் திட்­ட­மிட்­டுள்ள சாகசக் காரியம் ஆகக்­கூ­டு­த­லாக பேசப்­பட வேண்டும் என்ற நோக்­கத்­துடன் மொமிக்கா இயங்­கி­யி­ருப்­பது தெரி­கி­றது.

எனினும், இந்த மனிதர் ஈராக்கில் வாழும் காலத்தில் ஈரா­னுடன் நெருங்­கிய தொடர்­பு­களைப் பேணிய இமாம் அலி படை­யணி என்ற கிளர்ச்­சிக்­கு­ழு­வுடன் சேர்ந்து இயங்­கி­ய­மைக்­கான ஆதா­ரங்கள் கிடைத்­துள்­ளன. ஈராக்கில் உள்ள மற்­றொரு கிறிஸ்­தவ ஆயுதக் கிளர்ச்சிக் குழுவின் தலை­வ­ருடன் அதி­காரப் போட்­டியின் விளைவால், மொமிக்கா சுவீ­ட­னுக்கு தப்பிச் சென்­ற­தாகத் தெரி­கி­றது.

இங்கு இவர் ஸ்வீடிஷ் டெமொக்ரட்ஸ் என்ற தீவிர வல­து­சாரி தேசி­ய­வாதக் குழு­வுடன் தொடர்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். இந்த மனி­த­ருக்குத் தேவை சுவீ­டனில் நிரந்­தர வதி­விடம் பெற்று சுவீடன் பிர­ஜை­யாக மாறு­வது தான். இதற்­கா­கவே திருக்­குர்ஆன் எரிப்பு நாட­கத்தை அரங்­கேற்­றி­யி­ருப்­ப­தாகக் கருத முடியும். 

எது எவ்­வா­றா­யினும், இந்தச் சம்­ப­வத்தின் எதிர்­வி­ளை­வுகள் உயிர் கொல்லும் வன்­மு­றை­களின் திசையில் செல்­லாமல், கருத்து வெளிப்­பாட்டுச் சுதந்­தி­ரத்தின் எல்­லைகள் பற்­றியும், மற்­ற­வர்களுக்கு ஊறு­வி­ளைத்­தலை தவிர்த்தல் பற்­றியும் தீவிர கருத்­தா­டலை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­பது அதிர்ஷ்­ட­வ­ச­மா­னது எனலாம். அது ஆரோக்­கி­ய­மா­னதும் கூட. 

திருக்­குர்ஆன் எரிப்பு சம்­ப­வத்தால் சுவீடன் சமூகம் பற்றி எரி­கி­ற­தாயின், இம்­முறை உலகப் பஞ்­சா­யத்தில் தண்ணீர் ஊற்­று­வது எவ்­வாறு என்­பது பற்றி ஆரா­யப்­பட்­டி­ருக்­கி­றது. உலக நாடுகள் மத வெறுப்பு அதி­க­ரிப்­பது பற்றி பேசியிருக்கின்றன. மத நம்பிக்கைகளை சகித்துக் கொள்வதில் உள்ள குறைபாடுகளை விவாதித்திருக்கின்றன. இதன் அடிப்படையில், பகைமையும், பாரபட்சமும், வன்முறை களும் தூண்டிவிடப்படுவது பற்றி ஆராய்ந்தி ருக்கின்றன.

இது தவிர, மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், சமீபகால மாக திருக்குர்ஆனை அவமதிக்கும் வகையில் கட்டவிழ்த்து விடப்பட்ட செயல்கள் வன்மை யாக கண்டிக்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை உலகப் பொது அமைப்பாக இருக்கையில், அதன் மனித உரிமைகள் பேரவையில் ஜனநாயக ரீதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லாவிட்டாலும், அதனை அனு சரித்து நடக்க வேண்டிய நிர்ப்பந்தம் மேற்கு நாடுகளுக்கும் உண்டு. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘தோட்ட மக்களாகவே’  அவர்கள் இருப்பதற்கு யார்...

2025-02-16 16:19:01
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக் கட்சியின் அஸ்தமித்துப்போன...

2025-02-16 15:54:02
news-image

இந்தியா, சீனாவை இலங்கை ஜனாதிபதி எவ்வாறு...

2025-02-16 15:08:22
news-image

நமீபிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர் சாம்...

2025-02-16 15:01:55
news-image

'வார்த்தை தவறும் அரசாங்கமும் பலவீனமான எதிர்க்கட்சியும்'

2025-02-16 14:24:02
news-image

'இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்' என்ற...

2025-02-16 12:44:24
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறந்த வேட்பாளர்கள்...

2025-02-16 12:03:58
news-image

தையிட்டி விகாரை இனஅழிப்பின் குறியீடு

2025-02-16 12:03:38
news-image

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க உறுதியான நிலைப்பாடு...

2025-02-16 12:01:43
news-image

குழப்புகின்ற கட்டமைப்புகள்

2025-02-16 11:53:51
news-image

இழப்பீடு எனும் செஞ்சோற்றுக் கடன்

2025-02-16 10:43:21
news-image

அரசுக்கு சவாலான விகாரை

2025-02-16 10:42:10