அரும்பாடுபட்டு உழைத்த பணத்தை சிக்கனமாக செலவு செய்து சேமித்தாலும்.. திடீரென்று ஏற்படும் எதிர்பாராத சூறாவளி செலவுகளால் எம்முடைய ஒட்டுமொத்த சேமிப்பும் கரைந்து, கடன் வாங்கும் சூழல் ஏற்படும்போது.. சூழலை சமாளிக்க கடனை வாங்குவதை விட.., நம்மிடம் மீண்டும் பணம் வருவதற்கும், சிறிய அளவில் சேமிப்பதற்கும், சிறிய அளவில் சேமித்து வைத்திருக்கும் பணத்தை பெருக்குவதற்கும்… எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் முன்மொழிந்திருக்கும் சில தாந்திரீக... சூட்சம... வாழ்வியல் பரிகாரங்களை பின்பற்றலாம். அவற்றை கடைபிடித்து பணத்தை வரவழைத்து அதனை தக்க வைத்து பெருக்கிக் கொள்ளுங்கள்.
அமாவாசை தினத்தன்று எம்முடைய வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. நீங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்தாலும் உங்களது வாசலில் கோலம் போடுவதை தவிர்க்கவும். காலைப் பொழுதில் பூஜை செய்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அன்று சூரிய உதயம் முதல் சூரியன் உச்சம் செல்லும் வேளை வரை அதாவது நண்பகல் வரை பித்ருக்களை மட்டுமே வணங்க வேண்டும். இதனை தொடர்ந்து வணங்கி வந்தால்... பணம் வரத் தொடங்கும்.
பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடமும், இறைபணியில் ஈடுபட்டிருப்பவர்களிடமும், இறைவனின் நாமத்தை சதா சர்வ காலமும் உச்சரித்துக் கொண்டு, சுய ஒழுக்கத்துடனும்... சமூகத்தில் முன்னுதாரணமான இறைத் தொண்டனாகவும் வாழ்பவர்களிடம் ஆசி பெற்றால்… எம்முடைய புண்ணியத்தின் வலிமை அதிகரித்து, பண வரவு ஏற்பட தொடங்கும்.
வாடகை வீட்டில் வசித்தாலும் அல்லது சொந்த வீட்டில் வசித்தாலும் அந்தி சாய்ந்த பிறகு அதாவது சூரியன் மறைந்த பிறகு பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகளை யாருக்கும் தரக்கூடாது. அதாவது இவைகள் அனைத்தும் எந்த வழியிலும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது. உங்களுடைய இரக்கம் காரணமாகவோ அல்லது அதீத நட்பின் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோ மேற்கூறியவற்றை நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்தால்... உங்களிடமிருந்த தன வரவு குறைந்து, பற்றாக்குறை உண்டாகும். சிலருக்கு இவை நீடிக்கவும் செய்யும்.
எம்முடைய வீட்டிற்கு வருகை தரும் சுமங்கலி பெண்களுக்கு வெள்ளி பாத்திரத்திலோ அல்லது தாமிர பாத்திரத்திலோ அல்லது வேறு ஏதேனும் கோப்பையிலோ அவர்கள் அருந்துவதற்கு குடிநீர் தர வேண்டும். அவர்கள் பேசிவிட்டு விடைபெறும்போது மறவாமல் மஞ்சள், குங்குமத்தை தர வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வரும் போது எம்முடைய வீட்டில் எம்மையும் அறியாமல் குடி கொண்டிருக்கும் தரித்திரம் நீங்கி, பணவரவு வரத் தொடங்கும்.
எம்முடைய சமையலறையில் தவறாமல் இடம் பிடித்திருக்கும் ஒரு உணவுப் பொருள் ஊறுகாய். பசியாறும்போது சுவைக்காக பலரும் ஊறுகாயை சுவைப்பர். உங்களுடைய வீட்டில் ஊறுகாய் இல்லையென்றால்... உடனே அதனை வாங்கி வைத்துக் கொள்ளவும். சிலருக்கு சாப்பிட ஊறுகாய் பிடிக்காது என்றாலும், ஊறுகாயை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பணத்தின் அதிபதியான குபேரனுக்கு ஊறுகாய் என்றால் மிகவும் பிடிக்கும். ஊறுகாய் இருக்கும் இடத்தில் அவருடைய ஆசிகள் நிறைந்திருக்கும் என்பதால், நீங்கள் ஊறுகாயை வாங்கி வைத்தால்.. குபேரனின் அருள் கிட்டும். தன வரவும் உண்டாகும்.
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் வரும் குரு ஓரை காலத்தில் குபேரனை வழிபட்டால் பணம் வரும்.
எம்முடைய வீடுகளில் முல்லை, மல்லிகைப்பூ போன்ற வெண்மை நிற பூச்செடிகளை வளர்க்கத் தொடங்கினால் பண தட்டுப்பாடு நீங்கி, தொடர்ந்து பண வரவு இருக்கும்.
எம்முடைய வீடுகளில் காலை மற்றும் மாலை வேளையில் விளக்கு ஏற்றும் போது குறிப்பாக காமாட்சி விளக்கினை ஏற்றும் போது தீபத்தில் டைமன் கல்கண்டு ஒன்றினை பொடித்து தீபம் ஏற்ற வேண்டும். இப்படி செய்யும் போது லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு பணவரவு உண்டாகும்.
மேற்கூறிய எளிய பரிகாரங்கள் எம்மவர்களால் பின்பற்றப்பட்டு பலன் கிடைத்த பிறகு எடுத்துரைக்கப்படுவதால்.., இதனை நீங்களும் கடைபிடித்து பண தட்டுப்பாடின்றி பணவரவை உண்டாக்கிக் கொள்ளுங்கள்.
தொகுப்பு: சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM