(எம்.ஆர்.எம்.வசீம்)
தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்து காரணமாகவா நோயாளர்கள் மரணிக்கிறார்கள் என்பது தொடர்பில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது, தொழில்நுட்ப குழுவொன்றை அமைத்து அது வழங்கும் அறிக்கையின் அடிப்படையிலாகும். மாறாக, ஊடக களியாட்டங்கள் ஊடாக அல்ல. அத்துடன் தற்போது வரை மரணமடையக்கூடிய அல்லாத நோயாளர்கள் குறிப்பிடத்தக்க அளவில் நியாயமற்ற முறையில் மரணித்திருப்பதை சாதாரணமாக கருத முடியாது என சிவில் உரிமைகள் தொடர்பான வைத்திய தொழில் சங்க கூட்டணியின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சன்ஜீவ தெரிவித்தார்.
வைத்தியசாலைகளில் ஏற்றப்படும் மயக்க மருந்து தொடர்பாக பலராலும் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி மற்றும் மயக்க மருந்து தொடர்பாக பல்வேறு தரப்பினரும் ஊடக சந்திப்புகளை நடத்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் பேராதனிய வைத்தியசாலையில் இடம்பெற்ற எதிர்பாராத மரணங்களுக்கு தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்து பொருட்களா காரணம் என்பதை தேடிப்பார்க்க தொழிநுட் குழு அமைத்து, அந்த குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே அது தொடர்பில் தீர்மானத்துக்கு வரவேண்டும்.
அவ்வாறு இல்லாமல் ஊடக களியாட்டங்களை நடத்தி தெரிவிக்கப்படும் கருத்துக்களை அடிப்படையாக்கொண்டு உறுதிப்பாட்டுக்கு வரமுடியாது. அத்துடன் தற்போது வரை மரணமடையக்கூடிய அல்லாத நோயாளர்கள் குறிப்பிடத்தக்களவில் நியாயமற்ற முறையில் மரணித்திருப்பதை சாதாரணமாக கருத முடியாத காரணமாகும்.
மேலும் மயக்க மருந்து தொடர்பாக தொடர்ந்தும் வைத்தியர்கள் ஒரு சில கருத்துக்களை வெளியிட்ட பின்னர் தற்போது பயன்படுத்திய தடுப்பூசியை பாவனையில் இருந்து நீக்குவதற்கு தீர்மானித்திருக்கிறது. அதற்கு பதிலாக இந்தியாவில் இருந்து புதிதாக கொண்டுவருவதாக தெரிவிக்கப்படும் தடுப்பூசி, முறையான பரிசோதனையின் பின்னரா கொண்டுவருகிறது என கேட்கிறோம்.
மேலும் அரச வைத்தியசாலைகளில் நிலவிவரும் பாரிய மருந்து தடுப்பாட்டுக்கு மத்தியில் தரமற்ற மருந்து வகைகளை கொண்டுவருவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பெறுமதிமிக்க உயிர்கள் அழிந்த பின்னர் அதற்கு பல்வேறு காரணங்களை தேடிக்கொண்டு ஊடக சந்திப்புக்களை நடத்துவேண்டி ஏற்பட்டாலும். அதில் இருந்து முடிவடையாமல் ஒட்டுமொத்த சுகாதார துறையும் வீழ்ச்சியடையும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM