வெளிநாடுகளுக்கு சட்டரீதியாக செல்லுங்கள் - தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

Published By: Digital Desk 3

14 Jul, 2023 | 03:58 PM
image

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சட்ட ரீதியாக செல்லுங்கள். ஏமாற்று, மோசடிகாரர்களை நம்பி பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டாம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாட்டு வேலை வாய்ப்பில் அதிகளவான மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். வெளிநாடு செல்பவர்கள் சட்டரீதியாக செல்லாது, அங்கு சென்று பல இன்னல்களுக்கு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். அது தொடர்பில் நாம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறோம்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. வெளிநாட்டுக்கு அனுப்பவுதாக சட்டவிரோத நபர்கள் பணமோசடிகள் செய்கின்றனர். இவற்றை ஊடக செய்தியாக மட்டும் வெளியிடாமல், அமைச்சுக்கும் அது தொடர்பில் முறைப்பாடுகள் அளிக்கும்போதே நடவடிக்கை எடுக்க முடியும். அதனூடாகவே ஏனையவர்களையும் பாதிப்பில் இருந்து காப்பாற்ற முடியும்.

தென்மாகாணத்தில் மோசடிகள் பற்றி சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கின்றனர். பாதிக்கப்பட்ட சம்பவங்கள், ஏமாற்றியவர்கள் தொடர்பில் பதிவுகளை வெளியீடுகின்றனர். ஆனால் வடமாகாணத்தில் அவ்வாறு செய்வது மிக குறைவு என்றார்.

அதேவேளை, தமிழில் உங்களோடு உரையாட முடியாதமைக்கு மனம் வருந்துகிறேன். அதற்கு நான் காரணமல்ல முன்னர் இருந்த அரசியல்வாதிகள் எங்களை பிரித்து விட்டார்கள். 

வடக்கு கிழக்கில் ஏற்பட்ட பிரச்சனைகள் நாம் சகோதரத்துவம் இல்லாமல் போனதற்கு அரசியல்வாதிகளே காரணம். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படலை. இந்த பிரச்சனைக்கு காரணத்தை கண்டறியாமல், சர்வதேசத்திற்கும், மனிதவுரிமை ஆணைக்குழுவிற்கும் என ஏதோ சாட்டுக்களை கூறிக்கொள்கின்றனர்.

தற்போது ஜனாதிபதி இவற்றை தீர்க்கும் முகமாக வடபகுதி மக்களின் காணிகளை அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

மதவாதம், இனவாதம் என பிரிந்து வாழாமல் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17
news-image

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்கு...

2023-12-11 16:58:39
news-image

மலையக மக்கள் குறித்து பேச்சு வார்த்தை...

2023-12-11 16:59:13
news-image

பேலியகொடையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

2023-12-11 17:08:33
news-image

யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளை

2023-12-11 17:06:33
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு...

2023-12-11 16:00:40
news-image

பங்களாதேஷ் பெண்ணிடம் கொள்ளையிட்ட இருவர் கைது

2023-12-11 15:57:02
news-image

கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து...

2023-12-11 16:03:35
news-image

அநுராதபுரம், களுத்துறை மாணவிகள் மத்தியில் போதை...

2023-12-11 15:20:09
news-image

பண்டாரகமவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர்...

2023-12-11 15:19:19
news-image

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் தபால்...

2023-12-11 15:46:41
news-image

எல்பிட்டியில் தாயும் மகனும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில்...

2023-12-11 13:47:47