முக அழகை கெடுக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று முகப்பரு. கன்னங்கள், நெற்றி, தாடை என்று ஆங்காங்கே தோன்றும் பருக்கள், உடலின் ஆரோக்கிய குறைபாட்டை பிரதிபலிக்கும் அறிகுறிகளாகவும் இருக்கின்றன. அந்தவகையில் முகப்பருக்கள் உணர்த்தும் ஆரோக்கியம் குறித்த செய்திகள் என்னவென்று இங்கே தெரிந்துகொள்வோம்.
கன்னங்கள்: அதிகமாக புகை பிடிப்பதாலும், மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதாலும் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதாலும் கன்னத்தில் பருக்கள் வரலாம். தலையணை உறைகளில் உள்ள நுண்கிருமிகள் சருமத்தை பாதிப்பதாலும், கன்னங்களில் பருக்கள் வரக்கூடும். இதைத் தடுக்க மூன்று நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறையை மாற்ற வேண்டும். வெளியில் செல்லும்போது துணியால் முகத்தை மூடிக்கொண்டு செல்வது நல்லது. வீட்டுக்கு வந்ததும் ரசாயனங்கள் கலக்காத மென்மையான சோப்பால் முகத்தைக் கழுவ வேண்டும்.
புருவங்களுக்கு மத்தியில்: இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம், கல்லீரலுடன் தொடர்புடையது. மது அருந்துபவர்களுக்கும், கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிடுபவர்களுக்கும் இந்த இடத்தில் அடிக்கடி பருக்கள் உண்டாகும். உணவுகள் ஏற்படுத்தும் ஒவ்வாமையினாலும் சிலருக்கு பருக்கள் வரக்கூடும். இதனைத் தவிர்க்க பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கன்னங்களின் ஓரங்கள்: உடலில் ஹோர்மோன் குறைபாடுகள் ஏற்படும்போது கன்னங்களின் ஓரத்தில் சிறியதாக பருக்கள் தோன்றும். மாதவிடாய் காலங்களின்போது மட்டும் பெண்களுக்கு இந்த இடத்தில் பருக்கள் அதிகமாக வருவதைக் காணலாம். சிலருக்கு மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே, அதன் அறிகுறியாகப் பருக்கள் தோன்றும்.
மேல் நெற்றி: உண்ணும் உணவு முழுமையாக செரிமானம் ஆகாமல் இருந்தால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரிக்கும். அதன் விளைவாக மேல் நெற்றியில் பருக்கள் உண்டாகும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, ஆன்டி-ஆக்சிடென்டுகள் அதிகமாக இருக்கும் கிரீன் டீ, மஞ்சள், ஒரேஞ்ச், சிவப்பு, கருநீல நிற காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிட வேண்டும். கோப்பி மற்றும் குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது.
கீழ் நெற்றி: புருவங்களுக்கு மேலே பருக்கள் வந்தால், போதுமான அளவு தூக்கமில்லை என்று அர்த்தம். மனஅழுத்தம், மனச்சோர்வு, சீரற்ற ரத்த ஓட்டம் போன்றவற்றாலும் பருக்கள் ஏற்படும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்துக்கு நான்கு நாட்கள் உடற்பயிற்சி செய்வது நல்லது. தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை ஆழ்ந்து தூங்க வேண்டும்.
காதுகள்: கொபின் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் உணவுகளைச் சாப்பிடுவது, உடலில் நீர்ச்சத்து குறைவது போன்ற காரணங்களால் காதுகளில் பருக்கள் தோன்றும். உணவில் உப்பை அளவாகச் சேர்த்துக்கொள்வது மற்றும் அதிக அளவு தண்ணீர், பழச்சாறு, மோர் ஆகியவற்றை பருகுவதன் மூலமும் இதைத் தடுக்கலாம்.
மூக்கு: இதயம் அல்லது ரத்த அழுத்தத்தில் பிரச்சினை ஏற்படும்போது மூக்கில் பருக்கள் தோன்றும். இதைப் போக்க, மனஅழுத்தத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தியானம் அல்லது பிடித்த விஷயங்களில் நேரத்தைச் செலவிடுங்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
தாடை: ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவதால் தாடைப் பகுதியில் பருக்கள் வரும். இந்தப் பகுதியில் பருக்கள் உள்ளவர்கள் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், பீன்ஸ், கீரை வகைகளை அதிகமாக சாப்பிடுவது நல்லது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM