நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயம் செய்யுமாறு சிறீதரன் கோரிக்கை

Published By: Vishnu

13 Jul, 2023 | 11:12 AM
image

வடக்கு மாகாணத்தில் அதிக நெல் உற்பத்தி மேற்கொள்ளப்படும் விவசாய மாவட்டமான கிளிநொச்சியில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஆளுகையில் ஏழு நெற்களஞ்சியங்கள் உள்ளபோதும், உரிய நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாத காரணத்தால் நெல் சந்தைப்படுத்தல் சபையினரால் எமது மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல்லை முழுமையாகக் கொள்வனவு செய்யமுடியவில்லை.

இதனால் தென்பகுதியிலிருந்தும் ஏனைய பகுதிகளிலிருந்தும் வருகைதரும் நெல் கொள்வனவாளர்கள், இடைத்தரகர்கள் என்போர் தமது சுயலாபம் கருதி நிர்ணயிக்கின்ற மிகக்குறைந்த விலைக்கே  நெல்லை விற்பனை செய்ய வேண்டியுள்ளதால் நெற்செய்கையை மட்டுமே நம்பியுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளும் அவர்களது குடும்பங்களும் அந்தரித்து நிற்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 23 கமக்கார அமைப்புகளை ஒருங்கிணைக்கும் அமைப்பான இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனத்தினால் பெருமளவு விசாயிகளின் பங்கேற்புடன் 2023.06.28 ஆம் திகதி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட கவனவீர்ப்புப் போராட்டத்தின் முடிவில், நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்ட மனுவை மேற்கோள் காட்டி கடந்த 2023.07.04 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் ஜனாதிபதியிடம் நேரடியாக கையளிக்கப்பட்ட கடிதத்திலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; 

இந்த ஆண்டு சிறுபோக நெற்செய்கையில், ஒரு கிலோ நெல்லின் உற்பத்திக்கு ஒரு விவசாயி செலவு செய்துள்ள தொகை 80.00 ரூபா முதல் 89.00 ரூபா வரையாகும். இவ்வாண்டு சிறுபோகத்தில் கிளிநொச்சியில் 16,000 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஏக்கர் ஒன்றின் அறுவடை அண்ணளவாக 2 மெற்றிக் தொன்  என கணிக்கப்படின், சிறுபோக அறுவடையில் மட்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் 32,000 மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். 

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்ட நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு உரிய நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வதன் மூலம் அதன் கீழுள்ள களஞ்சியசாலைகளின் கொள்ளளவுக்கமைய மொத்த அறுவடையின் 1/7 பங்கினையாவது (5000மெற்றிக்தொன்) நியாயமான உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்ய முடியும். 

அரிசி இறக்குமதியால் ஏற்பட்ட நெல்லின் விலை வீழ்ச்சியை எதிர்கொள்ள முடியாத நிலையில் ஏற்கனவே 72,000 ஏக்கர் காலபோக நெற்செய்கை அறுவடைமூலம் கிடைக்கப்பெற்ற நெல்லைக்கூட விற்பனைசெய்யாது தேக்கி வைத்திருக்கும் எமது விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி, மாவட்டம் தோறும் நெல் கொள்வனவுக்கான நிர்ணய விலையை உறுதி செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"கண்டி பெருநகர அபிவிருத்தி” வேலைத்திட்டத்துக்கு 1,500...

2023-11-30 11:50:14
news-image

கிளிநொச்சி பளை பகுதியில் மோட்டார் சைக்கிள்...

2023-11-30 12:59:15
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-11-30 12:49:18
news-image

அமுல்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்களில் மாற்றமில்லை இரண்டாம் தவணை...

2023-11-30 12:42:01
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்றத்தை எதிர்வரும்...

2023-11-30 12:31:04
news-image

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த...

2023-11-30 12:23:54
news-image

பெண்ணின் முச்சக்கர வண்டி கொள்ளை ;...

2023-11-30 11:49:48
news-image

பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிப் பிரயோக...

2023-11-30 11:48:43
news-image

ராகம வைத்தியசாலையின் புற்றுநோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கு ...

2023-11-30 11:45:52
news-image

சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடித்த...

2023-11-30 12:10:39
news-image

இவ் வருடத்தில் 21 ஆயிரம் மில்லியன் ...

2023-11-30 11:42:48
news-image

கொள்ளுப்பிட்டியில் சுற்றிவளைக்கப்பட்ட போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

2023-11-30 12:15:34