இந்தியா – பாகிஸ்தான்  உறவு மேற்கில் தீர்மானிக்கப்படுகிறதா?

Published By: Vishnu

09 Jul, 2023 | 06:39 PM
image

லோகன் பர­ம­சாமி

இந்­தி­யாவும் பாகிஸ்­தானும் ஒரே விடு­தலைப் போராட்டக் குழுவில் இருந்து உரு­வா­கிய தலை­வர்­களால் உரு­வாக்­கப்­பட்ட நாடு­க­ளாகும்.  இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உறவு நிலை என்றும் பதட்ட நிலையில் உள்­ளது. ஆனாலும் மொழி, கலா­சாரம், பண்­பாட்டு ரீதி­யாக இஸ்­லா­மா­பாத்­திற்கும் புது டில்­லிக்கும் இடையில் மிக நீண்ட வர­லாற்று தொடர்­புகள் உள்­ளன. 

இவை மட்டும் அல்­லாது பிரித்­தா­னியர் காலத்தில் உருவாக்­கப்­பட்ட தொடர்ச்­சி­யான  புகை­யி­ர­தப்­பா­தைகள், வீதி போக்கு வரத்­துகள் இன்­னமும் அடிப்­படை போக்கு வரத்து தொடர்பு கட்­ட­மைப்­பு­களை கொண்­டுள்­ளன.  அது மட்­டு­மல்­லாது இந்­தி­யாவும் பாகிஸ்­தானும் இரு தரப்பு உறவு நிலையை உரு­வாக்கி கொள்ளுமிடத்து அவற்றின் பொரு­ளா­தார நிலை மிக செழிப்­பா­ன­தாக மாறும் என்­பது பொரு­ளா­தார நிபு­ணர்­களின் பார்­வை­யாகும். 

அதா­வது இலங்­கையின் பொரு­ளா­தார மீள் எழிச்­சிக்கு தமிழ் மக்­க­ளுக்­கான  அர­சியல் அதி­கார பங்­கீடு எந்த அளவு முக்­கி­ய­மா­னதோ அதே­போல பாகிஸ்­தா­னிய பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு இந்­தி­யா­வு­ட­னான சுமூக உறவு மிகவும்  முக்­கி­ய­மா­ன­தாகும்.  ஆனால் இந்­திய– பாகிஸ்­தா­னிய உறவு நிலை குறித்த எந்த ஒரு விவ­கா­ரத்­திலும் இரு நாடு­க­ளுக்கும் இடையில் இடம் பெற்ற யுத்­தங்­களே எப்­பொ­ழுதும் பட்­டி­ய­லி­டப்­ப­டு­வது வழமை­யாக உள்­ளது. 

குறிப்­பாக மேலை­த்தேய நாடு­களில் எந்த ஒரு பத்­தி­ரிகை தளத்தை எடுத்து நோக்­கி­னாலும் இந்­தியா – பாகிஸ்தான் குறித்த விவ­கா­ரத்தில் முரண்பா­டு­களை முன்­நி­றுத்­திய செய்­தி­கள் வெளி­வ­ருவதே பொதுப்­ப­டை­யாக  உள்­ளன. இந்த நிலையை வைத்து நோக்­கு­மி­டத்து  தெற்­கா­சி­யாவில் உள்ள இவ்­விரு தேசங்­களும் ஒன்­றுடன் ஒன்று  மோதிக் கொள்ளும் நிலை யாருக்கு அதிக இலாபம் தர வல்­லது என்­பதை முக்­கியமாக நோக்க வேண்­டிய தேவை உண­ரப்­ப­டு­கி­றது. 

உள்­நாட்டில் தமது அர­சியல் தளத்தை  தக்­க­ வைத்து கொள்ளும் வகையில்  பொரு­ளா­தார பளுக்­களை திசை திருப்பும் வகையில் சாதா­ரண இந்­திய– பாகிஸ்­தா­னிய மக்கள் மத்­தியில் மத குரோத உணர்வை ஊட்­டு­வதன் மூலம்  இடம் பெறும் ஒரு  பதட்ட நிலையா அல்­லது மேலைத்தேய நாடுகள் தமது பூகோள நலன்­களை அடைந்து கொள்­வ­திலும்  உலக தலை­மைத்­து­வத்தை பேணும் வகையில் இந்த விவகாரத்தை தணிய விடாது பார்த்­துக்­கொள்ளும்   ஒரு முரண் நிலையா  அல்­லது வடக்கு, தெற்கு கோட்­பாட்டில் தெற்கு நாடு­களின் வளர்ச்சி வடக்கு நாடு­களின் வியா­பார அபி­வி­ருத்­தி­க­ளுக்கு பாத­க­மா­னவை என்ற கருத்தா என்­பவை முக்­கி­ய­மா­ன­தாகும்.  

தெற்­கா­சி­யாவின் பதட்­ட ­நி­லைமை குறித்த விவ­கா­ரங்­களில் சாமுவேல் ஹன்­ரிங்ரன் , எட்வர்ட்  சையீட் போன்ற உலகத் தர சர்­வ­தேச அறி­வா­ளர்கள் இவ்­வி­வ­கா­ரங்­களில் ஆழ­மாக ஏற்­க­னவே குறிப்­பிட்டு உள்­ளதை காணக் கூடி­ய­தாக உள்­ளது.

 இத்­த­கைய ஆய்­வு­களின் அடிப்­ப­டையில் தற்­கா­லத்­திற்கு ஏற்ப  அர­சு­களின் நகர்­வு­களை முன்­வைத்து பார்க்கும் பொழுது வல்­ல­ர­சு­களின் அடைப்­படை­ நோக்­கமும் தேவை­களும் என்றும் மாறு­வ­தில்லை என்­ப­தையே உணரக் கூடி­ய­தாக உள்­ளது. 

இந்­தி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடையில் பல்வேறு விவ­கா­ரங்­களை பதட்ட நிலைக்கு ஏற்­ற­தாக தமக்கு சாத­க­மாக  மாற்றிக் கொள்ளும் வச­திகள் பிற வல்­ல­ர­சு­க­ளுக்கு  உள்­ளது.

நில­ எல்லைக் கோட்டு விவ­காரம், நீர் பங்­கீட்டு விவ­காரம், காற்று மாச­டைதல் குறித்த விவ­காரம் , கடல் எல்­லை­களும் அத்து மீறல்­களும்  குறித்த விவ­காரம் , பல்­லா­யிரம் அடி உய­ரத்தில் பனி­மலை எல்­லை­களில் ஏற்­படக் கூடிய சர்ச்­சைகள், காஷ்மீர் விவ­காரம் என ஏராளம் சிக்­கல்கள் இன்­னமும் தீர்த்துக் கொள்­ளாத நிலையில் உள்­ளது.  ஆக எந்த ஒரு அணு­கு­மு­றையை எடுத்­தாலும் அணு ஆயுத பலம் மிக்க இரு நாடு­க­ளையும் சீண்டி விடக் கூடிய, எளிதில் உடைத்து விட கூடிய தன்­மையே உள்­ளது

சனத்­தொகை பெருக்­கத்தில் இந்­தியா, சீன சனத்­தொகை பெருக்க விகி­தத்தை விஞ்சி விட்ட நிலை ஒன்று தற்­பொ­ழுது கவ­னத்தில் கொள்­ளப்­ப­டு­கி­றது. சன­த்தொகை பெருக்க விகி­தத்­தி­லான வளர்ச்சி இன்னும் இரு­பது ஆண்­டு­களில் இந்­தி­யாவை உலக வல்­ல­ர­சாக மாற்றும் என்­பது இந்த பார்­வை­யாகும்.

உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகள் தமது வளர்ச்­சிக்கு தம்மிடம் ஏற்­க­னவே  உள்ள குடித்­தொ­கைக்கு கல்வி வசதி அளித்தல், சுகா­தார மருத்­தவ வச­திகள் செய்து கொடுத்தல், இளைப்­பாறு ஊதியம் வழங்­குதல் என பல்வேறு விவ­கா­ரங்­களில் செல­வுகள் அதிகம் ஏற்­ப­டு­வதை கருத்தில் கொண்டு வரி அதி­க­ரித்தல் ,பொருட்­களின் விலை­களை அதி­க­ரித்தல் போன்ற விவ­கா­ரங்கள் குடித்­தொகை வளர்ச்­சியில் தாக்கம் விளை­விப்­ப­தாக கரு­தப்­ப­டு­கி­றது. 

ஆனால், இந்­திய சனத்­தொகை வளர்ச்சி சர்­வ­தேச மேலைத்­தேய நாடு­களின் வளர்ச்­சியில் பங்­கெ­டுத்து கொள்ளும் வகையில் தனது  மக்­களை உலகம் முழு­வதும் பரவ விடும் அதே வேளை புலம்பெயர் இந்­தி­யர்­களின் வரு­வாயை மைய­மாகக் கொண்டு உள்­நாட்டு வளர்ச்­சியை மேம்­ப­டுத்தும் போக்கை கொண்­டுள்­ளது.  இது சர்­வ­தேச அளவில் எழுந்­துள்ள உழைப்­பா­ளர்கள் தட்­டு­பாட்டை பயன்படுத்தி கொள்ளும் அதேவேளை இந்­தியா உலக நாடு­களில் செல்­வாக்கு செலுத்தும்   ஒரு நிலையை உரு­வாக்கி வரு­கி­றது. 

ஆனால், இந்­தி­யாவை ஜன­நா­ய­கத்தின் பெயரால், தாராள சந்தை பொரு­ளா­தார விழு­மி­யங்­களின் பெயரால் தனது கட்டுப்பாட்­டில் வைத்­தி­ருப்­பதை மேலைத்­தேயம் உக்­தி­யாக வைத்­தி­ருப்­பதை காணக் கூடி­ய­தாக உள்­ளது. அது மட்டு­மல்­லாது இந்­தி­யாவை இரா­ணுவ பாதுகாப்பு ரீதி­யாக கட்­டுப்­ப­டுத்தும் ஒரு கரு­வி­யாக பாகிஸ்தானால்     கரு­தப்­ப­டு­கி­றது. 

பாகிஸ்தான் தனித்­து­வ­மாக என்றும் இயங்க முடி­யாத ஒரு நிலைக்கு அர­சியல் ரீதி­யா­கவும் பொரு­ளா­தார ரீதி­யா­கவும் தள்­ளப்­பட்டு வரு­கி­றது. 

பாகிஸ்தான் அதன் சுதந்­திரம் அடைந்த காலத்­தி­லி­ருந்தே நிதி விவ­கா­ரத்தில்  பல வல்­ல­ர­சு­க­ளிடம் உத­விகள் பெற்று தனது பொரு­ளா­தாரத்தை காத்துக் கொள்ள  வேண்­டிய நிலையில் உள்­ளது.

 சிறந்த நீர் செழிப்பையும் விவ­சாய நிலத்தையும் தன்­ன­கத்தே கொண்­டி­ருந்த போதிலும் நிர்­வாகத்  திறமை , ஊழல் , போன்­ற­வற்றில் உள்ள பின்­தங்­கல்கள் கார­ண­மாக இன்னமும் கடு­மை­யான பொரு­ளா­தார பின்­ன­டைவில் உள்­ளது.

அத்­துடன் பூகோள ரீதி­யாக பாகிஸ்­தானின் இருப்­பிடம் மத்­திய ஆசிய நாடு­க­ளையும் ஈரான் போன்ற நாடு­க­ளையும் அணு­கு­வ­தற்கு ஏற்ற பின்­த­ள­மாக உள்­ளது. பாகிஸ்­தா­னிய இரா­ணு­வத்­தி­னரின் செல்­வாக்கு அதன் ஆட்சி நிர்­வா­கத்தில் மிக அழுத்­த­மாக உள்­ள­துடன் இரா­ணு­வத்தின் அதி­கா­ரத்தை ஆட்சி நிர்­வா­கத்தில் குறைப்­ப­தற்கு எந்த ஆட்சித் தலைவர் முயற்­சித்­தாலும் அவர்கள் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட நிலையை காணலாம்.

ஆக, இரா­ணுவம் நேர­டி­யாக வெளி நாட்டுத் தொடர்­பு­களை கொண்­டி­ருப்­ப­தடன். முக்­கி­ய­மான பாதுகாப்பு பேச்சுவார்த்­தைகளையும் இரா­ணு­வமே தனித்து­வ­மாக கையாளும் நிலை உள்ளது. 

இந்த வகையில் பாகிஸ்தானிய அரசுக்கும் இராணுவத்துக்கும் நிதி உதவி செய்யும் நாடுகளும் வல்லரசுகளும் பாகிஸ்தானை மாத்திரமல்லாது  அதனூடாக இந்தியாவின் உள்நாட்டு அரசியலையும் தீர்மானிக்கும் சக்தி கொண்டவைகளாக உள்ளன. 

இந்தியாவின் வளர்ச்சியை அதன் ஜனநாயக பிழைகள் ,மனித உரிமை குற்றங்கள், சிறுபான்மை மக்கள் மீதான மத நெருக்குதல்கள் போன்ற வற்றின் ஊடாக கையாளும் மேலைத்தேய அரசுகள் பாகிஸ்தானை நேரடியாக இராணுவ ரீதியாக கையாளுகிண்றன. 

தெற்காசிய நிலப்பரப்பில் அமைதி நிலை உருவாக வேண்டுமாயின் இந்திய – பாகிஸ்தானிய நாடுகளுக்கு இடையில் மேலும் மேலும் வலுவான உறவு நிலை ஏற்படுவது  அவசியமாகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right