நாட்டின் சுகாதாரத்துறை நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 

Published By: Nanthini

09 Jul, 2023 | 04:50 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் சுகாதாரத்துறை நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. சுகாதாரத்துறையில் 5 பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. மேலும், இப்பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சுகாதாரத்துறையில் 5 பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. மருந்து தட்டுப்பாடு இதிலுள்ள முக்கியமான பிரச்சினையாகும். மறுபுறம் மருந்தின் தரம் தொடர்பில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பதிவு செய்யப்படாத மருந்துகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளமையால் பிரச்சினைகள் எழுந்துள்ளது. 

மேலும், விலைமனு செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறுவதில்லை. அவ்வாறு உரிய முறையில் விலைமனு மேற்கொள்ளப்படாமல் மருந்துகளை கொள்வனவு செய்துள்ளமையால் மருந்தின் தரம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

இதேவேளை ரூபாயின் பெறுமதி அதிகரிக்கும்போது அதன் பிரதிபலன்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இருப்பினும், அவை மக்களை சென்றடைவதில்லை. மனித வளம் தொடர்பிலான பிரச்சினைகள் நான்காவது பிரச்சினையாகும். 

விசேட வைத்திய நிபுணர்கள் நாளுக்கு நாள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். புதிதாக நியமனம் பெறும் வைத்தியர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். அத்துடன் வைத்தியசாலைகளில் வைத்திய இயந்திரங்கள் செயற்படுவதில்லை. 

சுகாதார அமைச்சர் கூறும் விடயங்கள் கேலிக்கையான விடயங்களாக மாறியுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

2025-02-15 12:43:07
news-image

கொழும்பில் பொது வாகன தரிப்பிடங்களை பயன்படுத்தும்...

2025-02-15 12:42:01
news-image

கடந்த 15 வருடங்களாக கல்விக் கல்லூரிகள்...

2025-02-15 12:16:54
news-image

கடவத்தையில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்...

2025-02-15 12:00:48
news-image

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு ; இருவர்...

2025-02-15 11:06:50
news-image

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

2025-02-15 10:58:37
news-image

எஹெலியகொடையில் பேரனால் தாக்கப்பட்டு தாத்தா உயிரிழப்பு!

2025-02-15 11:29:58
news-image

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்...

2025-02-15 10:54:31
news-image

யாழுக்கு விஜயம் செய்தார் பிரதமர் ஹரிணி

2025-02-15 10:49:00
news-image

பதுளை - இராவண எல்ல வனப்பகுதியில்...

2025-02-15 10:35:05
news-image

உணவகத்தில் அடிதடி : யாழ். பொலிஸ்...

2025-02-15 09:59:37
news-image

பாணந்துறையில் பஸ் விபத்து ; நால்வர்...

2025-02-15 09:52:54