bestweb

அஷ்ரப்பின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக நெருக்கடிகளும்

Published By: Vishnu

09 Jul, 2023 | 05:32 PM
image

ஏ.எல்.நிப்றாஸ்

தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழகம் என்­பது எம்.எச்.எம்.அஷ்ரப் என்ற அர­சியல் தலை­வரன் தூர­நோக்­கினால் உத­ய­மான மிகப் பெரும் கல்விக் கூட­மாகும். தென்­னந்­தோப்­பா­கவும் நெற் களஞ்­சி­ய­மா­கவும் அப்­போது காணப்­பட்ட ஒரு நிலப்­ப­ரப்பை ஒரு தேசிய பல்­க­லைக்­க­ழ­க­மாக மாற்­றி­ய­மைக்க முடியும் என்ற நம்­பிக்­கையும் விடா­மு­யற்­சியும் அவ­ருக்கு இருந்­தது. 

கொழும்­பி­லி­ருந்து ஹெலி­கொப்­டரில் வந்த அஷ்ரப், வான் பரப்பில் பறந்­த­வாறு இப்பல்­க­லைக்­க­ழ­கத்தை லண்­டனில் உள்ள ஒரு பல்­க­லைக்­க­ழகம் போலவும், ஒலுவில் களி­யோடை ஆற்றை லண்­டனில் உள்ள ஒரு குறிப்­பிட்ட நதியைப் போலவும் கற்­பனை செய்து கொண்­ட­தாக அவ­ருடன் பய­ணித்த ஒருவர் சொன்னார். 

இன்­றைய முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களைப் போல, வெறு­மனே கற்­பனை செய்து கொண்டு, வாக்­கு­று­தி­களை வழங்கிக் கொண்டு வாழா­வி­ருக்­காமல் மர்ஹும் அஷ்ரப், தனது திட்­டத்தை செயற்­ப­டுத்திக் காட்­டினார். தனித்­துவ அடை­யாள அர­சி­யலால் முஸ்லிம் சமூ­கத்­திற்கு கிடைத்த ஒரே­யொரு மிகப் பெரிய பொக்­கி­ஷ­மாக இப் பல்­க­லைக்­க­ழ­கத்தை கொள்­ளலாம். 

பட்­ட­தா­ரி­களை உரு­வாக்கும் ஒரு தொழிற்­சா­லை­யாக இது அமைந்தால் போதும் என்று அவர் நினைக்­க­வில்லை. யுத்­த­மேகம் சூழ்ந்­தி­ருந்த அக்­கா­லத்தில் இளை­ஞர்கள் அம்­பாறை மாவட்­டத்­தி­லேயே பட்­டப்­ப­டிப்பை பூர்த்தி செய்யும் வாய்ப்பை வழங்­கு­வ­துடன், சமூகம் சார்ந்த ஆய்வுப் பணிகள் இரவு பக­லாக இடம்­பெற வேண்டும் என்றும் அவர் கனவு கண்டார் என்­பது அவரை அறிந்­த­வர்­க­ளுக்கு தெரியும்.  

தென்­னி­லங்­கையில் பல்­க­லைக்­க­ழ­கங்­களும் மாணவ சமூ­கமும் பெருந்­தே­சிய அர­சி­யலில் மிக முக்­கி­ய­மான ஒரு செல்­வாக்குச் செலுத்தும் சக்­தி­யாக உள்­ளது. யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கமும் கிழக்குப் பல்­க­லையும் தமிழர் அர­சி­யலை வழி­ந­டாத்­து­வதில் ஒரு பங்­கினை வகிக்கின்றன. 

அதேபோல், முஸ்­லிம்­களை மையப்­ப­டுத்­தி­ய­தாக உரு­வாக்­கப்­பட்ட தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­க­மா­னது குறிப்­பாக முஸ்லிம் சமூக, அர­சியல் செயற்­ப­ாட்டுத் தளங்­களில் ஒரு பொறுப்­பு­மிக்க வகி­பா­கத்தை வகிக்க வேண்டும் என்றும், அர­சி­யலை மட்­டு­மன்றி இந்த சமூ­கத்­தையும் கூட அறி­வார்ந்த அடிப்­ப­டையில் வழிப்­ப­டுத்த முன்­னிற்க வேண்டும் என்­பதும் அஷ்­ரபின் தூர­நோக்­காக இருந்­தது. 

அந்த அடிப்­ப­டையில் உரு­வாக்­கப்­பட்ட இப் பல்­க­லைக்­க­ழகம் ஒன்­றுமே சாதிக்­க­வில்லை என்று கூறி­விட முடி­யாது. அஷ்­ரப்பின் மறை­வுக்குப் பின்னர் வேறு ஒன்று அல்­லது இரண்டு அர­சி­யல்­வா­திகள் மற்றும் அர­சாங்­கத்தின் உத­வியால் பௌதீக அடிப்­ப­டையில் வளர்ச்சி கண்­டுள்­ள­துடன் பல சாத­னை­க­ளையும் அடை­வு­க­ளையும் பெற்­றி­ருக்­கின்­றது. பரி­ணாம வளர்ச்சி கண்­டி­ருக்­கின்­றது. 

ஆனால், அஷ்ரப் எதிர்­பார்த்த இறுதி இலக்கை, தூர­நோக்கை நோக்கி இப்பல்­க­லைக்­க­ழகம் வெற்­றி­க­ர­மாக முன்­னேறிக் கொண்­டி­ருக்­கின்­றதா என்­பது மீளாய்வு செய்­யப்­பட வேண்­டிய விட­ய­மாகும். குறிப்­பாக, ஆரம்­பத்தில் சமூக, அர­சியல் விட­யங்­களில் ஒரு வகி­பா­கத்தை இது எடுத்­தது என்­றாலும் பிற்­கா­லத்தில் அதன் போக்கு இறங்கு முக­மா­கவே உள்­ளது என்­பது நோக்­கர்­களின் அபிப்­பி­ரா­ய­மாகும். 

பட்­ட­தா­ரிகள், கலா­நி­திகள், டிப்­ளோ­மா­தா­ரிகள் ஆயிரக் கணக்கில் உரு­வா­கி­யுள்ளனர். தம்மைச் சுற்றி மிகப் பெரிய ஒரு கல்வி வட்­டத்தை தென்­கி­ழக்குப் பல்­கலை உரு­வாக்­கி­யுள்­ளது. உலக பல்­க­லைக்­க­ழ­கங்­களின் ஒரு இடத்தை பிடித்­துள்­ளது. இப் பல்­க­லைக்­க­ழகம் இல்­லை­யென்றால் பல முஸ்லிம், தமிழ் மாண­வர்­க­ளுக்கு பல வாய்ப்­புக்கள் கிடைக்­கா­ம­லேயே போயி­ருக்­கலாம். 

அந்த அடிப்­ப­டையில், ‍தென்கிழக்குப் பல்­க­லைக்­க­ழகம் மார்­தட்டிக் கொள்­ளவும் பெருமை கொள்­வ­தற்கும் எத்­த­னையோ விட­யங்கள் இருக்­கின்­றன என்­பதை யாரும் மறுக்­க­வி­ய­லாது. 

ஆனால், மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் என்ன தூர­நோக்­குடன் இத்­தனை பாடு­பட்டு இதனை நிறு­வி­னாரோ அந்த வழித்­த­டத்தில் வெற்­றி­க­ர­மாக இந்தப் பல்­க­லை­க­ழகம் முன்­னேறி இருக்­கின்­றதா, சமூகம் சார்ந்த பொறுப்பை சரி­வர நிறை­வேற்றி இருக்­கின்­றதா என்­பதே பரி­சீ­ல­னைக்­கு­ரிய விட­ய­மாகும். 

குறிப்­பிட்டுச் சொல்­வ­தென்றால், முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளையும் சமூ­கத்­தையும் அர­சியல் ரீதி­யாக வழிப்­ப­டுத்­து­வதில் இப் பல்­க­லையின் வகி­பாகம்  இறங்­கு­மு­க­மாக உள்­ளது. ஆய்வு அடிப்­ப­டையில் சமூக முன்­னேற்­றத்­திற்கு முன்­னிற்­ப­திலும், அதன் விளை­ப­யன்­களை சாதா­ரண முஸ்லிம் மக்கள் அனு­ப­விப்­ப­திலும் இன்னும் காத்­தி­ர­மாகச் செயற்­பட வேண்­டிய நி‍லையே காணப்­ப­டு­கின்­றது 

முஸ்லிம் சமூ­கத்தை அர­சியல், சமூக ரீதி­யாக நெறிப்­ப­டுத்த வேண்­டிய மிகப் பெரிய பொறுப்பை இப்பல்­க­லைக்­க­ழக சமூ­கமும் அங்­கி­ருந்து கற்று வெளி­யே­றி­ய­வர்­களும் கொண்­டுள்­ளனர். அதுதான் அஷ்­ரபின் எதிர்பார்ப்­பா­கவும் இருந்­த­தெ­னலாம். ஆனால், யாழ் பல்­க­லைக்­கழகம் தமிழர் அர­சி­யலில் எடுக்­கின்ற வகி­பா­கத்தை, ஒலுவில் தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழகம் எடுக்க முடி­யாமல் போயுள்­ளது. 

ஆரம்­பத்தில், ‘ஒலுவில் பிர­க­டனம்’ என்ற மிகப் பெரிய வர­லாற்று நிகழ்­வொன்றை இங்­குள்ள மாண­வர்கள் நடத்திக் காட்­டி­னார்கள். முஸ்­லிம்­க­ளுக்கு வெளி­யே­யுள்ள சமூ­கங்கள் இதனைக் குறிப்­பெ­டுத்து வைத்­தி­ருக்­கின்­றன. ஆனால், இன்று முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களை தட்டிக் கேட்­கவும் வழிப்­ப­டுத்­தவும் முஸ்­லிம்­க­ளுக்கு சரி­யாள அர­சி­ய­ல­றிவை ஊட்­டவும் கூட முடி­யாத நிலை­யி­லேயே இந்தப் பல்­க­லைக்­க­ழகம் இன்­றி­ருக்­கின்­றது என்­பதே நிதர்­ச­ன­மாகும். 

உண்­மையில் இது திட்­ட­மிட்டு நடந்­த­தென்று கூறி விட முடி­யாது. இதற்குப் பல கார­ணங்கள் உள்­ளன. தேசிய பல்­க­லைக்­கழகம் என்ற அடிப்­ப­டையில் ஏனைய சமூ­கங்­களைச் சேர்ந்த மாண­வர்­களின் வீதா­சாரப் பங்கு அதி­க­ரித்­தமை, தேசிய அர­சி­யலில் ஏற்­பட்ட மாற்­றங்கள், முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் அக்­க­றை­யற்ற தன்மை, பல்­க­லைக்­க­ழக சமூ­கத்தை அர­சி­யல்­வா­திகள் மதிக்­காத போக்கு உள்­ளிட்ட பல யதார்த்தபூர்வ கார­ணங்கள் உள்­ளன. 

ஆனால், இத­னையும் தாண்டி ஒரு முக்­கிய காரணம், சமூகம் சார்ந்த செயற்­பா­டு­க­ளிலும் கல்­விசார் வினைத்­தி­ற­னிலும் தொடர்ச்­சி­யாக எதிர்­மறை விளை­வு­களை ஏற்­படுத்தி வரு­கின்­றது என்­பதே நமது அவ­தா­னிப்­பாகும். 

அது, இப்பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு உள்ளே இடம்­பெ­று­கின்ற நெருக்­க­டி­களும், பல்­க­லைக்­க­ழ­கத்தை சுற்றி எழு­கின்ற சார்ச்­சை­களும் ஆகும். பல்­க­லைக்­க­ழக சமூ­கமும் முஸ்லிம் மக்­களும் ஆத்­தி­ரப்­ப­டாமல் இதனை மீள்­வா­சிப்புச் செய்ய வேண்­டி­யுள்­ளது. 

ஆரம்ப காலங்­களில் தென்­கி­ழக்குப் பல்­க­லையில் பணி­பு­ரி­வோ­ரி­டையே இருக்­கின்ற பிர­தேச வேற்­று­மைகள் நல்­ல­தல்ல என்று சாதா­ரண மக்­களே பேசிக் கொண்­டனர். ஆனால், இப்­போது அது சற்றுக் குறை­வ­டைந்­தி­ருந்­தாலும், உப­வேந்­தரைச் சுற்­றிய அல்­லது நிர்­வா­கத்தை மையப்­ப­டுத்­தி­ய­தான சர்ச்­சைகள் மேலெ­ழுந்து வரு­கின்­றன. 

இந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லேயே பட்­டம்­பெற்று, விரி­வு­ரை­யா­ள­ராகி, கலா­நி­தி­யா­கிய ரமீஸ் அபூ­பக்கர் இப்­போது இங்கு உப­வேந்­த­ராக இருக்­கின்றார். உப­வேந்தர் நிய­மன செயன்­மு­றையின் அடிப்­ப­டையில் ஜனா­தி­ப­திக்­குள்ள அதி­கா­ரங்­களின் படி 2021ஆம் ஆண்டு இவர் நிய­மிக்­கப்­பட்டார். 

இந்­நி­லையில், அண்­மைக்­கா­ல­மாக அவர் தொடர்­பாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. அவர் சமர்ப்பித்த ஆய்­வுக்­கட்­டுரை பிரதி பண்­ணப்­பட்­டது என்றும், அவ­ரது நிய­மனம் முறை­யற்­றது என்றும், அவர் முறை­யற்ற நிய­ம­னங்­களை வழங்­கு­கின்றார் என்­பது உள்­ளிட்ட பல விமர்­ச­னங்­களை சிலர் சமூக வலைத்­த­னங்­களில் முன்­வைத்து வரு­கின்­றனர். 

இந்­நி­லையில், அண்­மையில் ஊடக மாநாடு ஒன்றை நடாத்­திய உப­வேந்தர் ரமீஸ் அபூ­பக்கர், தன்­மீ­தான குற்­றச்­சாட்­டுக்­களை மறுத்­துள்ளார். தன் மீது முன்­வைக்­கப்­படும் அனைத்துக் குற்றச் சாட்­டுக்­களும் அபாண்­ட­மா­னவை என்று அவர் கூறி­யுள்ளார். 

உப­வேந்­த­ருக்கு எதி­ரான அழுத்­தங்­களின் உச்­சக்­கட்­ட­மாக, புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்ற செல்­வ­தற்­காக அவர் தயா­ராகிக் கொண்­டி­ருந்த கடைசித் தரு­ணத்தில் அவ­ரது விடு­முறை இரத்துச் செய்­யப்­பட்­டது. அத்­துடன் அசாத் சாலி உள்­ளிட்ட ஓரிரு அர­சி­யல்­வா­தி­களும் விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். அதன் பின்­னரே அவர் ஊட­க­வி­ய­லா­ளர்­களைச் சந்­தித்து ஒவ்­வொரு குற்­றச்­சாட்­டையும் தனித்­த­னி­யாக மறுத்தார்.

தென்­கி­ழக்குப் பல்­க­லையில் மாண­வர்­க­ளி­டையே முறு­கலோ விரி­வு­ரை­யா­ளர்­க­ளி­டையே முரண்­பா­டு­களோ அல்­லது வேறு சர்ச்­சை­களோ ஏற்­பட்­டது மிகக் குறை­வாகும். ஆனால், உப­வேந்­தரை மைய­மாகக் கொண்ட சர்ச்­சைகள் தொடர்­க­தை­யாக உள்­ளன என்­பதை முஸ்லிம் சமூ­கமும் பொறுப்பு வாய்ந்தவர்­களும் கவ­னிக்க வேண்டும். 

இதற்கு முன்­பி­ருந்த உப­வேந்தர் நாஜிம் காலத்தில் விரி­வு­ரை­யாளர் குழு­வொன்று அவ­ருக்கு எதி­ரான விமர்­ச­னங்­களை முன்­வைத்­தது. அது­மட்­டு­மன்றி, முன்னாள் உப­வேந்தர் ஒரு­வரை இலக்கு வைத்து துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டது. இந்தப் பின்­ன­ணியில் இப்­போது மட்­டு­மன்றி இதற்கு முன்­னரும் தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழக விவ­காரம் பல தடவை பாரா­ளு­மன்றம் வரை பேசப்­பட்­டது. 

இங்கு யார் சரி, யார் பிழை என்று கூறுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக இவ்வாறான தொடர் நெருக்கடிகளும் சர்ச்சைகளும் ஏதோ ஒரு அடிப்படையில் மறைமுகமாகவேனும் மாணவர்களின் கல்வியில் தாக்கம் செலுத்திக் கொண்டி ருக்கின்றன என்பதையே வலியுறுத்த விளைகின்றது. 

சர்ச்சைகள் மட்டுமன்றி, இப்பல்கலைக் கழகத்தின் ஸ்தாபக நோக்கத்தை விளங்கிக் கொள்ளாமை, சமூக நலன்சார்ந்த பார்வை யின்மை, ஒன்றுபட்டுச் செயற்படாமை, ஊர் பாகுபாடு, ஒரு குறிப்பிட்ட வட் டத்திற்குள் மட்டும் செயற்படும் போக்கு என்பனவும் இந்தப் பல்கலைக்கழகத்தை முன்னேற்றத்தை தாமதப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை கூர்ந்து நோக்குவோர் புரிந்து கொள்வர். 

எனவே, தென்கிழக்குப் பல்கலைகழகத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சர்ச்சைககள் சுமுகமான அடிப்படையில் தீர்த்து வைக்கப்படுவதன் மூலம், செயற்றிறனான கல்விச் செயற்பாடு உறுதி செய்யப்படுவதுடன் மர்ஹும் அஷ்ரபின் கனவு வழித்தடத்திலும், காலத்தின் தேவைக்கேற்பமும் இவ்வளாகம் முன்னோக்கிச் செல்வதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். வேறொன்றுமில்லை!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணி படுகொலைகளுக்கு எதிரான போராட்டம் நாளை...

2025-07-16 17:19:16
news-image

ஈஸ்டர் உண்மை தொடக்கமாக அமையமுடியும்

2025-07-15 16:51:32
news-image

தமிழ் அரசியல் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின்...

2025-07-14 15:59:46
news-image

மிக மோசமான இழப்புகளை எதிர்கொண்டாலும் -...

2025-07-14 14:56:34
news-image

அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் இலங்கையுடன் போட்டிபோடும் வியட்னாம்,...

2025-07-14 13:49:20
news-image

அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்

2025-07-13 17:29:45
news-image

இலங்கை - இந்திய பாலம் மிகப்பெரிய...

2025-07-13 17:14:26
news-image

மீண்டும் தவ­றி­ழைக்­குமா ஐ.நா.?

2025-07-13 17:11:19
news-image

தொடர்கதையாகும் ஆக்கிரமிப்புகள்

2025-07-13 16:38:26
news-image

முஸ்லிம் அரசியல் பலப்படுத்தப்பட வேண்டும்

2025-07-13 16:37:44
news-image

கிழக்கு கைதுகளின் இலக்கு என்ன?

2025-07-13 16:17:33
news-image

வாக்­கு­று­தியில் இருந்து நழு­வு­கி­றாரா?

2025-07-13 16:17:12