யாழ். பல்கலையை முதலிடத்துக்கு கொண்டுவருவதே எனது இலக்கு - துணைவேந்தர் பதவிக்கு போட்டியிடும் சிரேஷ்ட பேராசிரியர் வேல் நம்பி

Published By: Vishnu

09 Jul, 2023 | 05:00 PM
image

(நேர்காணல் : அபிமன்யு)

யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் துணை­வேந்தர் பத­விக்கு  இம்­முறை போட்­டி­யிடும் நால்­வரில் ஒரு­வ­ரான சிரேஷ்ட பேரா­சி­ரியர் திரு­நா­வுக்­க­ரசு வேல் நம்பி வணி­க­மாணி (சிறப்பு), முது­தத்­து­வ­மாணி மற்றும் கலா­நிதி பட்­டப்­ப­டிப்­பு­களைப் பூர்த்­தி­செய்­தி­ருப்­ப­துடன் தற்­போது தனது சுய­வி­ருப்­பின்­பேரில் தமிழ் முது­க­லை­மாணி பட்­டப்­ப­டிப்பைத் தொடர்ந்­து­ வ­ரு­கின்றார்.

யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் முகா­மைத்­து­வக்­கற்­கைகள் மற்றும் வணி­கப்­பி­ரிவின் சிரேஷ்ட பேரா­சி­ரி­ய­ராகப் பணி­யாற்­றி­வரும் வேல் நம்பி, அவ­ரது கடந்த 28 வரு­ட­ கால சேவையில் 2011 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் முதல்  2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை­யான   9 ஆண்­டுகள் முகா­மைத்­து­வக்­கற்­கைகள் மற்றும் வணி­கப்­பி­ரிவின் பீடா­தி­ப­தி­யாகப் பதவி வகித்­துள்ளார். அவ­ரது பத­விக்­கா­லத்தில்  முது­க­லை­மாணி பட்­டப்­ப­டிப்பு அறி­முகம் செய்­யப்­பட்­டமை, முத­லா­வது சர்­வ­தேச மாநாடு நடத்­தப்­பட்­டமை என்­பன உள்­ள­டங்­க­லாகப் பல்­வேறு வழி­க­ளிலும் வணி­க­பீடம் வளர்ச்­சி ­கண்­டி­ருக்­கி­றது.

அது­மாத்­தி­ர­மன்றி யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தில் கணக்­கியல் துறையின் தலைவர், சிரேஷ்ட மாணவ ஆலோ­சகர், சமூக நல்­லி­ணக்க செயற்­திட்ட ஒருங்­கி­ணைப்­பாளர், பீட ஆய்­வுக்­கு­ழுவின் தலைவர் என்­பன உள்­ள­டங்­க­லாகப் பல்­வேறு தலை­மைப்­ப­த­வி­களை வகித்த அவர், தற்­போது அவ­ரது 56 ஆவது வயதில் பல்­க­லைக்­க­ழக துணை­வேந்தர் பத­விக்குப் போட்­டி­யி­டு­கின்றார். 

கல்­வி­யியல் ரீதி­யிலும், இணைப்­பா­ட­வி­தான செயற்­பா­டு­க­ளிலும் யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தை முன்­நி­லைக்குக் கொண்­டு­வ­ர­வேண்டும் என்ற முனைப்­புடன் சேவை­யாற்­றி­வரும் சிரேஷ்ட பேரா­சி­ரியர் வேல் நம்பி, இம்­முறை துணை­வேந்தர் பத­விக்குப் போட்­டி­யி­டு­வ­தற்­கான காரணம் குறித்தும், அப்­ப­த­விக்குத் தெரி­வானால் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு எதிர்­பார்த்­தி­ருக்கும் திட்­டங்கள் குறித்தும் எம்­மோடு பகிர்ந்­து­கொண்டார்.

கேள்வி :- நீங்கள் யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் துணை­வேந்­த­ராகத் தெரி­வானால், அத­னைத்­தொ­டர்ந்து பல்­க­லைக்­க­ழ­கத்தின் வளர்ச்­சியை முன்­னி­றுத்­திய உங்கள் திட்­டங்கள் என்ன?

பதில் :- அனைத்து விதங்­க­ளிலும் பல்­க­லைக்­க­ழ­கத்தின் மேம்­பாடே எனது இலக்­காக இருக்­கின்­றது. குறிப்­பாக பல்­க­லைக்­க­ழ­கங்­களின் தர­வ­ரி­சைப்­பட்­டி­யலில் தற்­போது 8 ஆவது இடத்­தி­லுள்ள யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத்தை முத­லி­டத்­துக்குக் கொண்­டு­வ­ர­வேண்டும். அதனை முன்­னி­றுத்தி கற்றல் - கற்­பித்தல், ஆய்வு மற்றும் சமூக செயற்­பாடு ஆகிய மூன்று அடிப்­ப­டை­களில் கல்­வியின் தரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்ளேன். யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் கல்­வித்­து­றை­யுடன் தொடர்­பு­பட்ட மனி­த­வ­ளத்தின் இய­லு­மையை மேலும் வலுப்­ப­டுத்­து­வதன் ஊடாகக் கற்­பித்­தலின் செயற்­தி­றனை மேம்­ப­டுத்த எதிர்­பார்க்­கின்றேன். அதே­போன்று ஆய்வைப் பொறுத்­த­மட்டில் தர­மான வெளி­யீ­டுகள் மற்றும் பிராந்­திய ரீதி­யி­லான ஆய்­வு­களில் விசேட கவ­னம்­செ­லுத்­த ­வேண்­டி­யுள்­ளது.

கேள்வி :- பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மத்­தி­யி­லான தற்­கொ­லைகள் அதி­க­ரித்­து­வரும் தற்­கால சூழலில், கல்­விப்­பா­ட­வி­தான செயற்­பா­டுகள் சார்ந்தும், ஏனைய புறக்­கா­ர­ணி­களின் விளை­வா­கவும் மாண­வர்கள் முகங்­கொ­டுத்­து­வரும் உள­வியல் அழுத்­தங்­களை எவ்­வாறு கையா­ளப்­போ­கின்­றீர்கள்?

பதில் :- நாட்டின் பல்­வேறு பாகங்­க­ளி­லி­ருந்து பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு வரு­கை­தரும் மாண­வர்கள் பல­த­ரப்­பட்ட குடும்ப மற்றும் சமூகப் பின்­ன­ணியைக் கொண்­ட­வர்­க­ளாக இருக்­கின்­றனர். 

எனவே நீங்கள் கூறு­வ­தைப்­போன்று கல்­விப்­பா­ட­வி­தா­னங்­க­ளாலும் ஏனைய பல்­வேறு புறக்­கா­ர­ணி­க­ளாலும் மாண­வர்கள் உள­வியல் ரீதி­யான அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளா­கக்­கூ­டிய சாத்­தியம் காணப்­ப­டு­கின்­றன.  சீரான உள­வியல் ஆலோ­சனை வழங்­கலின் மூலமே இதனைக் கையா­ள­வேண்டும். பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஒவ்­வொரு பீடங்­க­ளுக்கும் மாண­வர்­க­ளுக்­கான ஆலோ­சனை வழங்­க­லுக்­கென குறித்­த­ள­வி­லானோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். ஆனால் இது வெறு­மனே பெய­ர­ள­வி­லான நடை­மு­றை­யாக இருப்­ப­தை­விட, மாண­வர்கள் உள­வியல் ரீதி­யான அழுத்­தங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்­கும்­போது தாமாக முன்­வந்து அது­பற்றி இந்த ஆலோ­ச­கர்­க­ளிடம் பகி­ரக்­கூ­டிய சூழலை உரு­வாக்­க­வேண்டும். அதே­போன்று மாண­வ­ரொ­ருவர் ஏதேனும் பிரச்­சி­னை­யிலோ அல்­லது அழுத்­தத்­திலோ உள்­ள­போது, அதனைக் கண்­ட­றி­யக்­கூ­டிய மற்றும் புரிந்­து­கொள்­ளக்­கூ­டிய இய­லுமை ஆசி­ரி­யர்­க­ளிடம் இருக்­க­வேண்டும்.

மேலும் மாண­வர்கள் கல்வி தவிர்ந்த ஏனைய புறக்­கா­ர­ணி­களால் அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளாகும் பட்­சத்தில், அதனைக் கண்­ட­றிந்து நிவர்த்தி செய்­ய­வேண்­டிய தேவைப்­பாடு உள்­ளது. எனவே மாண­வர்­களை கல்­வியில் மாத்­தி­ர­மன்றி, அத­னுடன் இணைந்த ஏனைய இணைப்­பா­ட­வி­தான செயற்­பா­டு­க­ளிலும், நிகழ்­வு­க­ளிலும் ஈடு­ப­டுத்­த­வேண்டும். அவற்றில் மாண­வர்கள் அதிக ஈடு­பாடு காண்­பிக்­கும்­போது ஏனைய பிரச்­சி­னை­களைக் கையாள்­வது இல­கு­வா­ன­தாக மாறி­விடும். 

அது­மாத்­தி­ர­மன்றி இவ்­வா­றான நிகழ்­வு­க­ளின்­போது அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளான மாண­வர்கள் ஏனைய மாண­வர்கள் மற்றும் ஆசி­ரி­யர்­க­ளுடன் நெருங்­கு­வ­தற்­கான வாய்ப்பு இருக்­கின்­றது. அதன்­மூலம் அம்­மா­ண­வர்­களை அடை­யா­ளங்­காண்­பதும் சுல­மா­ன­தா­கி­விடும்.

கேள்வி :- கடந்த காலங்­களில் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் தினம் நெருங்­கும்­போது யாழ். பல்­க­லைக்­க­ழகம் சர்ச்­சைக்­கு­ரிய பேசு­பொ­ரு­ளாக மாறு­வதை அவ­தா­னித்­தி­ருக்­கிறோம். பல்­க­லைக்­க­ழக சூழலில் இன­நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான உங்­க­ளது முயற்­சிகள் எவ்­வா­றா­ன­வை­யாக இருக்கும்?

பதில் :- இது மிக­ முக்­கி­ய­மான கேள்வி என்­ப­துடன் பல்­க­லைக்­க­ழத்தைப் பொறுத்­த­மட்டில் விசே­ட­மாகக் கவ­னம்­செ­லுத்­தப்­ப­ட­வேண்­டிய விட­யமும் ஆகும். 

சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்­கத்­துக்கு சமூக ஒரு­மைப்­பாடு மற்றும் கலா­சா­ரப்­பல்­வ­கைமை ஆகிய இரண்டும் இன்­றி­ய­மை­யா­தவை என்­ப­துடன் நானும் அவற்­றையே வலி­யு­றுத்­து­கின்றேன். அதனை முன்­னி­றுத்தி உலக வங்­கியின் நிதி­யு­த­வி­யின்கீழ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட செயற்­திட்­டத்தில் நானும் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்தேன். 

அந்த செயற்­திட்­டத்தின் ஒரு கூறான இன நல்­லி­ணக்கம் மற்றும் சமூக நல்­லி­ணக்கம் என்ற பிரி­வுக்­கான ஒருங்­கி­ணைப்­பா­ள­ராக பல்­க­லைக்­க­ழக மூதவை (செனெட்) என்னை நிய­மனம் செய்­தி­ருந்­தது. இனம், மதம், மொழி போன்­ற­வற்றை ஒரு­வ­ரி­ட­மி­ருந்து பிரிக்­க­மு­டி­யாது. அது ஒரு­வரின் பிறப்­புடன் வரு­பவை. ஆனால் எத்­த­கைய இனம், மதம், மொழியைச் சார்ந்­த­வர்­க­ளாக இருந்­தாலும் ஒரு­வரை ஒருவர் மதிக்­கின்ற, ஏற்­றுக்­கொள்­கின்ற சூழலை உரு­வாக்­கு­வதே தற்­போ­தைய தேவைப்­பா­டாக இருக்­கின்­றது.

கேள்வி :- இன்­ற­ள­விலே நாட்டின் பொரு­ளா­தார நெருக்­கடி பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மத்­தியில் கடு­மை­யான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­துடன், பெரும்­பா­லான மாண­வர்­களின் இடை­வி­ல­க­லுக்கும் கார­ண­மா­கி­யி­ருக்­கின்­றது. இதனை நீங்கள் எவ்­வாறு கையா­ளப்­போ­கின்­றீர்கள்?

பதில் :- ஆம், இது முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யாக மாறி­யி­ருக்­கின்­றது. பல்­வே­று­பட்ட சமூ­கப்­பின்­ன­ணி­யி­லி­ருந்து பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு வரு­கை­தரும் மாண­வர்­களில் பெரும்­பா­லானோர் இப்­பி­ரச்­சி­னைக்கு முகங்­கொ­டுத்­துள்­ளனர். கல்­வியைத் தொட­ராமல், இடை­வி­லகல் ஏற்­ப­டு­வ­தற்கும் இது முக்­கிய கார­ண­மாக இருக்­கின்­றது. இதனைக் கையாள்­வ­தற்கு உள­வியல் ஆலோ­சனை வழங்­கலை மேலும் வலுப்­ப­டுத்­த­வேண்டும்.

அதே­போன்று கடந்த காலத்தில் நன்­நோக்­கத்­துடன் ஆரம்­பிக்­கப்­பட்ட 'Community Kitchen' செயற்திட்டத்தை மேலும் பலப்படுத்துவதுடன், அதனூடாக தேவையுடைய மாணவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதுமாத்திரமன்றி இலவச உணவு வழங்கல் செயற் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற எண்ணமும் என் மனதில் உண்டு.

மேலும் யாழ். பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கங்கள் வெளி நாடுகளில் மிக வலுவாக இயங்கி வருகின்றன. எனவே அவர்க ளுடன் இணைவதன் ஊடாகவும், நன் கொடையாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதன் ஊடாகவும் தற்போது பொருளாதார ரீதியில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் மாணவர்களுக்கு அவசியமான உதவிகளைச் செய்யமுடியும்.

யாழ். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவிக்கான தெரிவுச்செயன்முறை எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்திய தனது தூரநோக்கையும் திட்டங்களையும் இவ்வாறு தெளிவுபடுத்திய சிரேஷ்ட பேராசிரியர் வேல் நம்பி, இம் மனநிலையை அனை வருக்கும் பொதுவானதாக மாற்றியமைத்து முன்நோக்கிப் பயணிப்பதே தனது விருப்பம் என்கிறார்.

(படம் - ஜே. சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை சட்டவிரோத நடவடிக்கைகளிற்கு...

2025-03-14 20:24:33
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தின் வீடுகளை களனிபொலிஸின்...

2025-03-14 12:22:27
news-image

தொந்தரவு தரும் மீனவர் தகராறுக்கு தீர்வு...

2025-03-14 08:57:28
news-image

அரசாங்கம் அதன் மந்தவேகத்துக்கு விளக்கம் தரவேண்டியது...

2025-03-13 14:14:51
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவை 58...

2025-03-12 13:39:38
news-image

யார் இந்த ரொட்ரிகோ டுட்டெர்டே?-

2025-03-11 16:44:44
news-image

அட்லாண்டிக்கில் ஏற்படும் பிளவு

2025-03-11 12:02:06
news-image

அண்ணாவையும் எம்.ஜி. ஆரையும் போன்று தன்னாலும்...

2025-03-11 09:26:14
news-image

தடைகள் தகர்க்கப்படுகின்றனவா அல்லது சுவர்கள் எழுப்பப்படுகின்றனவா?

2025-03-10 19:13:31
news-image

கிழக்கில் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் மருத்துவர் தன்மீதான...

2025-03-10 13:35:49
news-image

வனவளத் திணைக்கள அதிகாரிகள் வாகரையில் பற்றவைத்த...

2025-03-09 16:15:23
news-image

‘நாடு அநுரவோடு, ஊர் எங்களோடு' ;...

2025-03-09 17:14:46