கூட்டமைப்பை கைப்பற்றுகிறதா புளொட்?

Published By: Vishnu

09 Jul, 2023 | 10:40 AM
image

கபில்

ஒட்­ட­கத்­துக்கு இடம்­கொ­டுத்த கதை போல, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலை மாறி­யி­ருக்­கி­றது. உள்­ளூ­ராட்சித் தேர்தல் அறி­விப்­புக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செய­ல­ளவில் செத்துப் போய் விட்­டது.

தமிழ் அரசுக் கட்சி தனி­யாக வேட்­பு­மனுத் தாக்கல் செய்­வ­தாக அறி­விக்க, கூட்­ட­மைப்பின் பங்­கா­ளி­க­ளாக இருந்த ரெலோவும், புளொட்டும், ஈ.பி.ஆர்­.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சி, ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி ஆகி­ய­வற்றை இணைத்துக் கொண்டு, தாங்­களே உண்­மை­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்று அறி­வித்துக் கொண்­டன.

போர் நடந்து கொண்­டி­ருந்த போது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக, 2008இல் ­அ­தே­போன்ற பெய­ருடன், ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­டணி (DTNA) என தேர்­தல்கள் செய­ல­கத்தில், புளொட் அமைப்பு பதிவு செய்து வைத்­தி­ருந்த கட்­சியை தங்­களின் கூட்­ட­ணி­யாக, இந்த ஐந்து கட்­சி­களும் அறி­வித்­தன. உள்­ளூ­ராட்சித் தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­பட்­டதால், இந்தக் கூட்டு சற்று உறக்­கத்தில் இருந்­தது.

அண்­மையில் வவு­னி­யாவில் நடத்­திய நிறை­வேற்றுக் குழுக் கூட்­டத்தில், ஜன­நா­யக தமிழ்த் தேசிய கூட்­ட­ணிக்கு தனித் தலைமை கிடை­யாது என்றும், ஐந்து கட்­சி­களின் தலை­வர்­க­ளுமே இணைத்­த­லை­வர்­க­ளாகச் செயற்­ப­டு­வார்கள் என்றும் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.

இந்­த­நி­லையில், கடந்த 30ஆம் திகதி நடந்த தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் கூட்­டத்தில், ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­ட­ணியின் சார்பில் சமர்ப்­பிக்­கப்­பட்ட ஒரு விண்­ணப்பம் குறித்து ஆரா­யப்­பட்­டுள்­ளது.

ஜன­நா­யக தமிழ்த் தேசிய கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் ஆர்.ராகவன் அந்த கடி­தத்தை அனுப்­பி­யி­ருக்­கிறாா்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சிகள் இப்­போது, ஜன­நாயக தமிழ்த் தேசியக் கூட்­ட­ணி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தா­கவும், எனவே, தங்­களின் கட்­சியின் பெயரை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்று பதிவு செய்து தரு­மாறும், அவர் கோரி­யி­ருக்­கிறார்.

அதனை ஆராய்ந்த தேர்­தல்கள் ஆணைக்­குழு, ஏற்­க­னவே, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்ற பெயரில் ஒரு அர­சியல் கூட்டு நீண்­ட­கா­ல­மாக செயற்­பட்டு வரும் நிலையில், ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­ட­ணிக்கு அந்தப் பெயரை பதிவு செய்து தர முடி­யாது என்று கூறி அந்த விண்­ணப்­பத்தை நிரா­க­ரித்து விட்­டது.

இந்த விவ­காரம் ஊட­கங்­களில் வெளி­யா­கி­யதும், ஜன­நா­யக தமிழ்த் தேசிய கூட்­ட­ணியின் இணைத்­த­லை­வர்­களில் ஒரு­வ­ரான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், இது பொய்­யான செய்தி என்று மறுத்­தி­ருந்தார்.

"ஜன­நா­யக தமிழ்த் தேசிய கூட்­ட­ணியை, தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பாக அங்­கீ­க­ரிக்­கு­மாறு தேர்தல் ஆணைக்­கு­ழு­விடம் கோரிக்கை விடுக்­க­வி­ருக்­கிறோம்.

ஆனால், இன்­னமும் அவ்­வா­றான கோரிக்கை விடுக்­கப்­ப­ட­வில்லை, விரைவில் அதனை ஆணைக்­கு­ழு­விடம் சமர்ப்­பிப்போம்" என்று அவர் ஊடகம் ஒன்­றுக்கு கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­த­நி­லையில், ஜன­நா­யக தமிழ்த் தேசிய கூட்­ட­ணியின் இன்­னொரு இணைத்­த­லை­வ­ரான, புளொட் தலைவர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன், இதற்கு மாறான கருத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு உரிமை கோரிய தங்­களின் கடிதம் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது என்­பதை அவர் ஒப்புக் கொண்­டி­ருக்­கிறார்.

இதை­ய­டுத்து, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைக் கைப்­பற்­று­வ­தற்கு நீதி­மன்­றத்தின் உத­வியை நாடப் போவ­தா­கவும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

இரு­வ­ருமே இணைத் தலை­வர்கள். இந்த நிலையில் ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­ட­ணியில், அதன் பொதுச்­செ­ய­லாளர் ராகவன் எடுக்­கின்ற நட­வ­டிக்­கைகள் என்ன என்­பது, பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கு கூட சரி­யாகத் தெரி­ய­வில்லை.

இதுதான் ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­ட­ணியின் கூட்டுத் தலை­மைத்­து­வத்தின் சீத்­துவம்.

இணைத் தலை­மைத்­துவம் என்­பது, எந்­த­ள­வுக்கு சிக்­க­லா­னது, குழப்பம் நிறைந்­தது என்­ப­தற்கு இந்த விவ­காரம் ஒரு உதா­ரணம். புளொட் இப்­போது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை கைப்­பற்­று­வதில் உறு­தி­யாக இருக்­கி­றது.

இந்­த­ள­வுக்கும் புளொட், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை உரு­வாக்கும் போது அதன் ஸ்தாபக கட்­சியும் இல்லை,  தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் கூட்­ட­மைப்பு வழி­ந­டத்­தப்­பட்ட காலத்தில் புளொட்டை அதில் சேர்த்துக் கொள்­ள­வு­மில்லை.

வடக்கு மாகாண சபைத் தேர்­தலில் தான், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் புளொட் உள்­வாங்­கப்­பட்­டது.

இன்­றைக்கு புளொட், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை தன் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர முற்­ப­டு­கி­றது.

புளொட்டைச் சேர்ந்த,  ஜன­நா­யக தமிழ்த் தேசிய கூட்­ட­ணியின் செய­லாளர் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பாக தங்­களின் கட்­சியை அங்­கீ­க­ரிக்­கு­மாறு கோரி­யி­ருக்­கிறார்.

அவ­ரது கோரிக்கை ஏற்­கப்­பட்டு, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்ற பெயரில் இயங்க அனு­மதி அளிக்­கப்­பட்டால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் செய­லா­ள­ரா­கவும் அவரே மாறுவார்.

பங்­காளிக் கட்­சி­யான ரெலோவின் தலை­வ­ருக்குத் தெரி­யாமல் தேர்தல் ஆணைக்­கு­ழு­வுக்கு கடிதம் அனுப்­பிய ராகவன், எவ்­வாறு கூட்டு தலை­மைத்­து­வத்­துக்கு கட்­டுப்­பட்டுச் செயற்­ப­டுவார் என்ற கேள்வி இப்­போது எழு­கி­றது.

இது ஒரு­பு­றத்தில் இருக்க, ஐந்து கட்­சி­களின் இந்தக் கூட்­டணி இப்­போது மற்­றொரு விவ­கா­ரத்தில் சிக்­கி­யி­ருக்­கி­றது.

நயி­னா­ம­டுவில் சீனித் தொழிற்­சாலையைக் கொண்டு வரு­வ­தற்கு ரெலோ இப்­போது மல்­லுக்­கட்டிக் கொண்­டி­ருக்­கி­றது.

இந்த விவ­கா­ரத்தில் யாரும் தலை­யிடக் கூடாது என்று சண்­டித்­த­னமும் செய்­கி­றது.

ஆனால், ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­ட­ணியின் பங்­காளிக் கட்­சி­க­ளான, ஈ.பி.­ஆர்­.எல்.எவ். மற்றும் ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி என்­பன, சீனித் தொழிற்­சாலைத் திட்­டத்தை கடு­மை­யாக எதிர்க்­கின்­றன.

இது பாரிய சிங்­களக் குடி­யேற்ற ஆபத்தை ஏற்­ப­டுத்தும் என்றும், தமிழர் பிர­தே­சத்தின் நீர்­வ­ளத்­துக்கு பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்றும் இந்தக் கட்­சிகள் கூறு­கின்­றன.

முன்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள், தமி­ழரின் பொது­வான நலன்கள் விட­யத்தில் காணப்­பட்ட ஒற்­று­மையை இப்­போ­துள்ள ஜன­நா­யக தமிழ்த் தேசிய கூட்­ட­ணிக்குள் காண முடி­ய­வில்லை.

ஒரு அர­சியல் கூட்டு என்­பது தேர்­த­லுக்­கான கூட்­டாக மாத்­திரம் இருக்க முடி­யாது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் அவ்­வா­றான ஒன்று தான்.

தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­சை­க­ளையும், உரி­மை­க­ளையும் வென்­றெ­டுப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட கூட்டு அது.

சில சந்­தர்ப்­பங்­களில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் தமிழ் அரசுக் கட்சி தன்­னிச்­சை­யாக எடுத்த முடி­வு­களும், அந்தக் கட்சி செலுத்­திய மேலாண்­மையும் தான், பிள­வு­க­ளுக்கு வழி கோலி­யது.

இந்த கசப்­பான உண்­மையை தெரிந்து கொண்டு தனிக் கூட்டை அமைத்துக் கொண்ட கட்­சிகள், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் கற்றுக் கொண்ட பாடத்தை மறந்து விட்­டன.

அர­சியல் ரீதி­யாக மாத்­தி­ர­மன்றி பொரு­ளா­தார ரீதி­யா­கவும் தூர நோக்­கு­டன செயற்­பட வேண்­டிய நிலையில் உள்ள தமிழ்த் தேசியக் கட்­சிகள், எந்த தீர்க்க தரி­ச­னமும் இன்றிச் செயற்­ப­டு­கின்­றன.

நயி­னா­மடு சீனித் தொழிற்­சாலை விவ­கா­ரத்தில், தமி­ழரின் நலன் பாதிக்­கப்­ப­டு­கி­றதா இல்­லையா என்ற தெளி­வான நிலைப்­பாட்டைக் கூட எடுக்க முடி­யாமல் இருக்­கி­றது, ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­டணி.

இவ்­வா­றான கூட்­ட­ணி­யினால் எவ்­வாறு தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்க முடியும்? அதனை எவ்வாறு சரியான பாதையில் வழி நடத்திச் செல்ல முடியும்?

சின்னச் சின்ன விடயங்களில் கூட ஒன்றுபட்டுச் செயற்பட முடியாமல், ஐந்து கட்சிகளின் கூட்டு இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளத்தை புளொட் தன்வசப்படுத்திக் கொள்ள இரகசியமாக காய்களை நகர்த்துகிறது.

இவ்வாறான நிலையில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு என ஒரு தேசிய நிகழ்ச்சி நிரல் இருக்கிறதா அல்லது ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல் இருக்கிறதா என்ற சந்தேகமே மேலோங்குகிறது.

இந்த கண்ணோட்டத்துடன் நோக்கும் போது, தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலத்தை சிதைக்கும் திட்டங்களுக்கு, தமிழ் தேசிய கட்சிகளே துணை போகின்றனவோ என்று தான் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முற்றுகைக்குள் யூ.எஸ். எயிட் நிறுவனமும் அரசாங்க...

2025-02-19 09:53:29
news-image

ரணில் தரப்புடன் கூட்டு ; காலை...

2025-02-18 13:26:36
news-image

கறுப்பு பைலுடன் சபைக்கு வந்த ஜனாதிபதி...

2025-02-17 21:09:44
news-image

மிக மோசமான கொலை! : ஜனநாயகத்தின்...

2025-02-18 11:22:36
news-image

இலங்கையராகவும் தமிழராகவும் இருந்து தமிழில் தேசிய...

2025-02-17 14:25:08
news-image

‘தோட்ட மக்களாகவே’  அவர்கள் இருப்பதற்கு யார்...

2025-02-16 16:19:01
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக் கட்சியின் அஸ்தமித்துப்போன...

2025-02-16 15:54:02
news-image

இந்தியா, சீனாவை இலங்கை ஜனாதிபதி எவ்வாறு...

2025-02-16 15:08:22
news-image

நமீபிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர் சாம்...

2025-02-16 15:01:55
news-image

'வார்த்தை தவறும் அரசாங்கமும் பலவீனமான எதிர்க்கட்சியும்'

2025-02-16 14:24:02
news-image

'இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்' என்ற...

2025-02-16 12:44:24
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறந்த வேட்பாளர்கள்...

2025-02-16 12:03:58