நீதிமன்ற கட்டமைப்பில் மாற்றம் அவசியம் : எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - வெளிவிவகாரத்துறை அமைச்சர்

Published By: Vishnu

05 Jul, 2023 | 08:31 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கம் நீதிமன்ற கட்டமைப்பில்  ஏற்படுத்திய மாற்றங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்கிறோம்.நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர புதிய பொறிமுறை செயற்படுத்தப்படும். 

சிறந்த மாற்றத்துக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) இடம்பெற்ற 'நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்' தொடர்பான ஒத்திவைப்பு   விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான முதலீடுகள் போதுமானதாக இல்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஆகவே நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக விசேட நிதி ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.சட்ட திருத்தத்துக்காக 80  யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற நடவடிக்கைகளில் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த சிறந்த திட்டங்களை வினைத்திறனான முறையில் முன்னெடுத்துச் செல்கிறோம்.

 நீதிமன்ற நடவடிக்கைளை டிஜிட்டல் மயப்படுத்த வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

நீதிமன்ற கட்டமைப்பில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்துக் கொண்டு சிறந்த நிலைக்கு செல்ல வேண்டும்.குறைப்பாடுகளை மாத்திரம் விமர்சித்துக் கொண்டிருந்தால் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது.பல நெருக்கடியான சூழலில் நீதிபதிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள்.

 அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு அமைய உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ,நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற கட்டமைப்பின் முன்னேற்றத்தால் பொதுமக்கள் பயனடைகிறார்களா என்பது குறித்து ஆராய வேண்டும்.

நீதிமன்ற விசாரணைகளின் முறைமை மாற்றியமைக்க வேண்டும்.வணிக மேல் நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணைகள் அதிகரித்துள்ளன.ஆகவே வணிக மேல் நீதிமன்றங்களின் விசாரணைகளை விரைவுப்படுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.ஆகவே நாட்டுக்காக நீதிமன்ற கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும்.

ஒரு வழக்கை விசாரணை செய்யும் நீதிபதி அந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.நடைமுறையில்  ஏற்படுத்தா விட்டால் நீதிமன்ற கட்டமைப்பில் ஒருபோதும் மாற்றம் ஏற்படுத்த முடியாது.ஆகவே நீதிமன்ற கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த...

2025-02-15 17:54:48
news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07