சகல பிரச்சினைகளுக்கும் போதைப்பொருள் பாவனையே மூல காரணம் - மைத்திரிபால சிறிசேன

Published By: Nanthini

05 Jul, 2023 | 05:18 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வழக்குகளின் எண்ணிக்கையை கணக்கிடாமல் வழக்குகள் தோற்றம் பெறுவதற்கான பின்னணி குறித்து ஆராய்ந்து, அதற்கு தீர்வு காண வேண்டும்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் போதைப்பொருள் பாவனை பிரதான காரணியாக உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) இடம்பெற்ற 'நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்' தொடர்பான ஒத்திவைப்பு   விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நீதிமன்றங்களில் சுமார் 11 இலட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. வழக்குகள் அதிகம், வழக்குகள் குறைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. 

வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தாமல் வழக்குகள் தோற்றம் பெறுவதற்கான காரணம் தொடர்பில் ஆராய வேண்டும்.

பொருளாதார பாதிப்புக்கு பின்னர் சமூக கட்டமைப்பில் சமூக விரோத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. அனைத்து மதங்களின் ஒத்துழைப்புடன் சிறந்த மாற்றத்துக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் சமூக விரோத செயற்பாடுகளுக்கும், குற்றங்களுக்கும் பிரதான காரணியாக உள்ளது. இதன் காரணமாகவே வழக்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிரச்சினைகளின் பின்னணியாக போதைப்பொருள் பாவனை காணப்படுகிறது.

நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு ஏழ்மையும் ஒரு காரணியாக உள்ளது. ஆகவே, நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு அவதானம் செலுத்துவதுடன், வழக்குகள் தோற்றம் பெறுவதற்கான காரணிகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு தீர்வு காண வேண்டும்.

வழக்குகள் தொடர்ந்து இழுபறி நிலையில் இருப்பதை வழக்கறிஞர்கள் விரும்புவார்கள். வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும்போது வழக்கறிஞர்கள் மாத்திரமே பயனடைவார்கள். ஆகவே, வழக்குகளை வெகுவிரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்ற கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13
news-image

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம்...

2025-01-14 19:38:19
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து...

2025-01-14 14:25:47
news-image

அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025-01-14 19:23:03
news-image

ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்...

2025-01-14 19:03:31
news-image

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல்

2025-01-14 19:06:02
news-image

கிளிநொச்சியில் காயமடைந்த யானை உயிரிழப்பு

2025-01-14 19:15:00
news-image

6 ஆயிரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு...

2025-01-14 14:20:00