யாழ்ப்பாணத்தில் மூன்று வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரும், அவர் திருடிய பொருட்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்களுமாக மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று வீடுகள் உடைக்கப்பட்டு , பொருட்கள் திருடப்பட்டுள்ளன என உரிமையாளர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , திருட்டு குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
திருடப்பட்ட பொருட்களை வேறு இருவரிடம் ஒப்படைத்துள்ளதாக, விசாரணைகளில் சந்தேக நபர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இருவரை கைது செய்த பொலிஸார் அவர்களின் உடமையில் இருந்து, வீடுகளில் திருடப்பட்ட மின்மோட்டர், கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் மீட்கப்பட்டன.
மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட மூவரையும் செவ்வாய்க்கிழமை (4) யாழ். நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியதை அடுத்து மூவரையும் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM