சிட்னி விமானநிலையத்தில் பயணியொருவரின் உடமைகளை சோதனையிட்டதன் காரணமாக 16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திலிருந்து காப்பாற்ற முடிந்துள்ளதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவி;ல் மேற்கொள்ளப்பட்ட பாரிய சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் பிலிப்பைன்சில் 16 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்சின் வடக்குபகுதி நகரமொன்றில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்சிலிருந்து நாடுதிரும்பிய குயின்லாந்தை சேர்ந்த நபரின் பயணப்பொதியை சிட்னி விமானநிலையத்தில் ஜனவரி மாதம் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினர் சோதனையிட்டவேளையே இந்த நடவடிக்கை ஆரம்பமானது.
விமானநிலையத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட நபர் ஒருவரின் கையடக்கதொலைபேசியை சோதனையிட்டவேளை அதில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான படங்கள் வீடியோக்களையும் அவரது நோக்கத்தை வெளிப்படுத்தும் தகவல்களையும் ஆராய்ந்துள்ளனர்.
இந்த தகவலை அவர்கள் அவுஸ்திரேலிய அதிகாரிகளிற்கு தெரியப்படுத்த அவர்கள் பிலிப்பைன்ஸ் பொலிஸாருக்கு அதனை தெரியப்படுத்தியுள்ளனர்.
அவுஸ்திரேலிய பொலிஸார் 55 வயது நபரை விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM