(எம்.வை.எம்.சியாம்)
மினுவாங்கொடையில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு மற்றுமொரு சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரே சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனைத்து தகவல்களையும் வழங்கியதாக தெரியவந்துள்ளது.கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் தாக்குதலின் போது சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தி அதனை “ஹந்தயா” என்ற பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
புதிய மகசின் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் கடந்த மே மாதம் 12 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் மினுவாங்கொடையிலுள்ள அவரது வீட்டிற்கு வந்த மூவர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அதன்படி, சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இராணுவ வீரர் உட்பட இருவர் நுவரெலியாவில் டீ- 56 துப்பாக்கி, 2 பிரவுனிங் ரக துப்பாக்கிகள் மற்றும் 167 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணை நடத்தியதில், ஹந்தயா என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான சிறைச்சாலை அதிகாரியின் வீட்டைக் கண்டுபிடிக்குமாறு மற்றுமொரு சிறைச்சாலை காவலர் தகவல் வழங்கியுள்ளதாக சந்தேகநபர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர்கள் வந்த வேனையும் விசாரணை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த தாக்குதலை ஒளிப்பதிவு செய்த சந்தேக நபர்கள் மூவரும் அதனை வெளிநாட்டில் உள்ள பாதாளக்குழு உறுப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தாக்குதலுக்குள்ளான அதிகாரி நேர்மையாக கடமையை செய்ததால் ஏற்பட்ட மனக்கசப்பு இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.தாக்குதலுக்குள்ளான அதிகாரி 2018 முதல் 2022 வரை சிறைச்சாலையில் அதிகமான ஹெராயின் சம்பந்தப்பட்ட பறிமுதல்கள் மற்றும் 600 க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகளைக் மீட்டுள்ளார். 2018/19 ஆம் ஆண்டில் சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கைப்பற்றிய அதிகாரி என்ற விருதையும் அவர் பெற்றார்.
இதன் விளைவாக, பெரும்பாலான குற்றவாளிகள் அவருடன் வெறுப்பில் இருந்துள்ளனர். மேலும் விசாரணை அதிகாரிகள் அவர்களில் ஒருவரான ஹண்டயா என்ற குற்றவாளியின் சக ஊழியரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM