அரசாங்க எதிர்ப்பு பேரணி இன்று ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர்.!

Published By: Robert

27 Jan, 2017 | 09:29 AM
image

(எம்.சி.நஜிமுதீன்)

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்துள்ள நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான பேரணி இன்று நுகேகொடையில் நடைபெறவுள்ளது. பி.ப. 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள குறித்த பேரணியில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பிரதேசங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துகின்றமை, அரச நிறுவனங்களை விற்பனை செய்கின்றமை, ஊழல் மோசடி என்பவற்றை பிரதானப்படுத்தி நடத்தப்படவுள்ள எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், கலைஞர்கள், கல்வி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என சகல தரப்பினரும் பேரணியில் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் ஏனைய மாவட்டங்களிலிருந்து ஏராளமானோரை இப்பேரணியில் கலந்துகொள்ளச் செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பேரணியை தடுப்பதற்கு அரசாங்கம் நீதிமன்ற நடவடிக்கை உட்பட வேறுவிதமான உபாயங்களை மேற்கொள்ள முற்பட்டாலும் திட்டமிட்டதுபோல் உரிய முறையில் பேரணி நடத்தப்படும் எனவும் கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. 

இப்பேரணியில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலர் கலந்துகொள்ளவுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவ்வாறானவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையையடுத்து அவர்களின் பிரசன்னம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சி மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43