கென்யாவில் டிரக்வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்
மேற்கு கென்யாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் சிலர் வாகனங்களிற்கு அடியில் சிக்குண்டிருக்கலாம் என உள்ளுர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கெரிச்சோ நகுறு என்ற இரண்டு நகரங்களிற்கு இடையில் உள்ள அதிவேகநெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
30 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் மழைகாரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கெரிச்சோவை நோக்கி சென்றுகொண்டிருந்த டிரக் கட்டுப்பாட்டை இழந்தது பெருமளவு பயணிகளுடன் நின்றுகொண்;டிருந்த சிறிய பயணிகள் பேருந்தை மோதியிருக்கவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேருந்து தரிப்பிடத்தில் காணப்பட்டவர்களையும் மோதியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்றதையும் 20 உடல்களையும் நான் பார்த்தேன் என வாகனச்சாரதியொருவர் தெரிவித்துள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM