கொழும்பு வடக்கு போதனா வைத்தியாசாலையில் ( ராகம) அன்டிபயோட்டிக் மருந்து வழங்கப்பட்ட 23 வயது யுவதி உயிரிழந்துள்ளார்.
27ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு வாய்மூலம் பயன்படுத்துவதற்கான மருந்து வழங்கப்பட்டதாகவும் ஆனால் அது பலளனிக்கவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அதேமருந்தினை தடுப்பூசி மூலம் மருத்துவர் செலுத்தியுள்ளார்.இதனை தொடர்ந்து அந்த யுவதி ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஓவ்வாமையினால் பாதிக்கப்பட்ட யுவதியை தீவிரகிசிச்சை பிரிவிற்கு மாற்றியதாக ராகம வைத்தியசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். எட்டு மணித்தியாலங்கள் அவருக்கு தீவிரகிசிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டது ஆனால் அவரை காப்பாற்றமுடியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது வழமைக்கு மாறான சம்பவம் என தெரிவித்துள்ள ராகமவைத்தியசாலையின் இயக்குநர் நோயாளிகள் இவ்வாறான பாதிப்பினை எதிர்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உயிரிழப்பை தொடர்ந்து குறிப்பிட்ட வகை மருந்தினை பயன்படுத்துவதை சுகாதார அமைச்சு நிறுத்தியுள்ளதுடன் அதனை மீளப்பெற்றுக்கொண்டுள்ளது.
மருந்துகள் செலுத்தப்பட்ட பின்னர் நோயாளிகள் உயிரிழந்த சம்பவங்கள் சமீபத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM