குற்றச் செயல்களோடு தொடர்புடையவர்களிடம் பொலிஸார் காட்டிக்கொடுக்கின்றனர் - கிராம அலுவலர்கள் குற்றச்சாட்டு

24 Jun, 2023 | 07:05 PM
image

யாழில் சட்ட விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களின் பெயர் விபரங்களை கிராம சேவையாளர்கள் பொலிஸாருக்கு வழங்கினால், தகவல்களை வழங்கிய அந்த கிராம சேவையாளர்களின் பெயர்களை சட்ட விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு பொலிஸார் வழங்குவதாக கிராம அலுவலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

யாழ். மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை (23) அமைச்சரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ். மாவட்ட கிராம அலுவலர்களுக்கு இடையிலான சந்திப்பின்போதே அலுவலர்கள் மேற்படி கருத்து தெரிவித்தனர். 

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 

கிராமத்தில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளோடு தொடர்புடையவர்களின் பெயர்கள் மற்றும் சில விபரங்களை கிராம சேவையாளர்கள் பொலிஸாருக்கு வழங்குகின்றனர்.

பொலிஸாருக்கு தகவல் வழங்கும் கிராம சேவையாளரின் பெயரை சட்ட விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள், சில மணித்தியாலங்களுக்குள்ளேயே அந்த பொலிஸார் மூலமாக அறிந்துகொள்கிறார்கள்.

யாழ். மாவட்டத்தில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி மற்றும் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுவது போன்ற குற்றச் செயல்கள் தொடர்கின்றன.

இச்சம்பவங்களோடு தொடர்புடைய கிராம மட்டத்தில் இருக்கும் நபர்களின் பெயர் விபரங்களை பொலிஸ் நிலையத்துக்கு வழங்குகிறோம். 

குற்றச் செயல்களோடு தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்களை வழங்கிய பின்னர், சில மணித்தியாலங்களில் எந்த கிராம சேவையாளர், யாருடைய பெயரை கொடுத்தார் என்ற விபரம் சந்தேக நபர்களிடம் செல்கிறது.

இந்த தகவல்களை கிராம சேவையாளர்கள் பொலிஸாருக்கு வழங்கும்போது அவற்றை பொலிஸார் சந்தேக நபர்களுக்கு, இவர்தான் கூறினார் என தெரிவிக்கிறார்கள். 

இதனால் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களால் கிராம சேவையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக கூறப்படுகிறது என தெரிவித்தனர்.  

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 

தகவல் வழங்கும் கிராம சேவையாளர்களுக்கு அச்சுறுத்தல் இருக்குமானால், எனக்கு விபரங்களை அனுப்புங்கள். அல்லது உங்கள் பிரதேச செயலாளர் ஊடாக அரசாங்க அதிபருக்கு தகவல்களை அனுப்புவதன் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17