அரச நிவாரண வழங்கல் தகுதியானவர்களுக்கு கிடைக்கப் பெறுகிறதா என்பதில் சந்தேகம் - ரோஹித அபேகுணவர்தன

Published By: Vishnu

23 Jun, 2023 | 01:41 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் தொடர்பில் பல முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. நிவாரணம் பெற்றுக் கொள்ள தகுதிடையவர்கள் இத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே நிவாரண பயனாளர்கள் தெரிவு மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து  உரையாற்றியதாவது

அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.

அரச நிவாரண வழங்கல் உண்மையில் தகுதியானவர்களுக்கு கிடைக்கப் பெறுகிறதா என்பது சந்தேகத்துக்குரியது.

அஸ்வெசும நிவாரண திட்டத்தில் நீரழிவு நோயாளர்கள்,விசேட தேவையுடையவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

செல்வந்த தரப்பினர் நிவாரண திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளர்கள். ஆகவே இந்த செயற்திட்டம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

சமூக கட்டமைப்பில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு  முறையாக நிவாரணம் வழங்காவிட்டால் ஏழ்மை நிலை தீவிரமடையும்.

ஆகவே அஸ்வெசும செயற்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்திக் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51
news-image

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை...

2025-01-24 16:17:44
news-image

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு...

2025-01-24 16:20:00
news-image

“சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான்....

2025-01-24 15:58:31
news-image

காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதி ;...

2025-01-24 15:20:43
news-image

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: அதிகூடிய...

2025-01-24 15:28:45
news-image

வவுனியாவில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் வாகனம்...

2025-01-24 15:15:39
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை குட்டி...

2025-01-24 15:00:43
news-image

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலை...

2025-01-24 15:00:26